Tuesday, May 26, 2009

நான் யாரென அறிய 32 கேள்விகள்..

'நிலாவும் அம்மாவும்' அவர்களின் ஆக்கத்தால் தொடங்கப்பெற்ற “கேள்வியும் பதிலும்....” என்ற இந்த சங்கிலித்தொடர் இடுகையில், பலரின் தொடர்ச்சியான இணைப்புகளுக்குபின் இணைந்த “இராகவன், நைஜிரியா” அண்ணா அவர்கள், அவருக்கு அடுத்து என்னையும், என்னுடன் சேர்த்து ரம்யா அக்காவையும், டக்ளஸ் அவர்களையும் இணைய அழைத்துள்ளார்..

32 கேள்விகளுக்கு கல்லூரித்தேர்வில் பொறுமையாக பதிலளித்து இருந்தால், பட்டதாரி (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

32 கேள்விகளுக்கு பொறுமையாக இன்டெர்வியுவில் பதிலளித்து இருந்தால், அந்த கம்பெனியின் ஊழியன் (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

32 கேள்விகளுக்கு பொறுமையாக மேடையில் பதிலளித்து இருந்தால், பேச்சாளனாக (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

ஆனால், இங்கு, இந்த 32 கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிப்பது என்னை நானும், நீங்களும் அறியமுடிவதற்கான நற்களமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே..

இதுவரை இணைக்கப்பெற்றவர்கள்..

ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
என் உயிரே... அபுஅஃப்ஸர்
இராகவன், நைஜிரியா

இவர்களுக்கு அடுத்ததாய் என்னை இணைய அழைத்த “இராகவன், நைஜிரியா” அண்ணாவிற்கு நன்றிகள் சொல்லிண்டு, என்னை அறிவதற்கான கேள்விகளை சந்திப்போம்..


இனி கேள்விகளும் எந்தன் பதில்களும்..

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இது என் பெற்றோரின் விருப்பத்தால் வைக்கப்பட்டது..
இது எனக்கு பிடிக்கிறதா என்று இதுவரை நினைத்துபார்க்கவில்லை..

கண்டிப்பாக "பிடிக்காது" என்பது என் பதில் இல்லை.. :)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

எதுவும் நிரந்தரம் இல்லை என்ற மனப்பான்மையில் வாழ்பவன் நான்..

எனவே எதற்கும் பீல் பண்ணிக்கொண்டு கண்ணை கசக்குவது கிடையாது..

இருப்பினும், எனது ஏழாவது செமஸ்டரின் ஆரம்பத்தில் வாங்கிய 13 அறியர்களை நினைத்து என் பெற்றோர் கலங்கிவிடகூடாது என்பதற்காக அவர்களை முந்திக்கொண்டு முதலைக்கண்ணீர் வடித்து அவர்களை என் அரியர் பற்றின கவலையில் இருக்கவிடாமல் என்னை தேற்ற அவர்களை திசை திருப்பினேன்..

உண்மையில் நான் கடேசியாக அழுதது ஒன்பதாம் வகுப்பில் என்னை என் சக தோழர்களிடம் இருந்து பிரித்து, ஒன்பதாம் வகுப்பின் வேறு பிரிவில் அமர்த்தப்பட்டபோது..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

உண்மையில் நான் இடதுகை பழக்கமுடையவன்..

என் நான்காம் வகுப்புவரை பாடம் சொல்லிகொடுத்த ஆசிரியை, என்னை வலுக்கட்டாயமாக வலதுகையால் எழுத எடுத்த முயற்சியால் இப்போதும் என் கையெழுத்து அந்த நான்காம் வகுப்பு மாணவனின் கையெழுத்து போல கிறுக்கலாக தான் இருக்கும்.. (கம்முனு டாக்டரா போயிருந்திருக்கலாம்..)

இருப்பினும் எனது கையெழுத்தை நானே விட்டுக்கொடுக்கமுடியுமா..?
ஆகவேவேவேவே..

பி..டி..க்..கா..து..

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதுதான் என்றெல்லாம் பாரபட்சம் பார்ப்பது இல்லை.. நீந்துவன தவிர கிடைப்பவை எல்லாத்தையும் பிடிக்கும்.. (பிடிப்பவை எல்லாம் கிடைக்குமானு தெரியலை..)

ஆனாலும் அளவோடு உண்டு நிறைவாக வாழ்பவன் நான்..


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கண்டீடீடீப்பா..
(ஒருமுறை பேசிவிட்டாலே தொடர்ந்து அவரிடம் நட்பு / தொடர்பு வைத்திருக்க விரும்புபவன்..)

ஆனாலும் எப்போதும் நெருக்கமான நட்பாக இருப்பினும், இவரின் நட்பு இல்லையேல் வடக்கிருந்து உயிர் நீப்பேன் மாதிரி யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை.. இதனால் எந்த உறவின் பிரிவும் சீக்கிரம் என்னை பாதிப்பது இல்லை..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கண்டிப்பா கடலில் தான்..
அருவிக்குளியல் அந்த குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சுற்றளவில் முடிந்துவிடுகிறது..
கடலில் அப்படி இல்லை.. அதன் எல்லைகள் விஸ்தாரமானது.. எனவே கடல்தான்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரின் கண்களை..
(அந்த கண்களின் சக்தி அபாரமானது.. மேலும், ஒருவரின் மனநிலையை அவரின் கண்களே நன்கு பிரதிபலித்துவிடும் என்ற நம்பிக்கையில்..)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் (சில)..
1.நல்லது கெட்டது எதுவாகினும் பெரிய ஆரவாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்வது..
(வந்த பின்பு மாற்ற முடியாது.. அப்புறம் ஏன் அந்த தேவையில்லாத சந்தோசம் துக்கம் போன்ற பீலிங்க்ஸ் என்பதனால் இப்படி..)
2.எதிரியாய் இருப்பினும் நம்பி வந்துவிட்டால் முழுமனதுடன் ஆதரிப்பது..

பிடிக்காத விஷயம்..
முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..

1. 17 இன்ச் Wide screen மானிடர்..
2. கருப்பு நிற கீபோர்ட் மற்றும் மவுஸ்..
3. சிலிம் டைப் காபினெட்..
4. 340GB ஹார்ட் டிஸ்க்..
(இன்னும் பல..)

என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..

1.அடிக்கடி வைரஸ், மால்வேர் என்று கண்டதயும் உள்ளே விட்டுக்கொண்டு மாரடிக்க வைக்கும்..
2. தூசி இல்லாமல் அடிக்கடி துடைத்து வைக்கசொல்லும்..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் கல்லூரி நட்புக்கள்..
இதற்காகவே, மீண்டும் கல்லூரி நட்பை அனுபவிக்க இந்த கல்வி ஆண்டில் PG படிக்கலாமென முடிவுசெய்து நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்றபோது அதற்கான கடேசி தேதி முடிந்திருந்தது..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(பெரும்பாலான நாட்களைபோல்) கருப்பு நிற பேன்ட், சட்டை மற்றும்ம்ம்.. (போதுமே..)


12.என்ன பார்த்து / கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டைப்பும் போது எதைப்பார்ப்பது..? என் சரி பாதியின் மானிட்டரைதான்..

இப்படி இடுகையிடும்போது வேறு எதையாவது கேட்டுக்கொண்டிருந்தால் கவனம் சிதறுவதால் பிரத்தியேகமாக எதையும் கேட்டுக்கொண்டு இருக்கவில்லை..

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு வர்ணமாக..

14.பிடித்த மணம்?

இதுதான் என்று தனியே ஏதும் இல்லை..

அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது வரும் பெட்ரோல் கலந்த புகைமணம் முதல்..,
அழகான, ஆழமான மணம் தரும் மல்லிகை, ரோஜா போன்றவைவரை அனைத்துமே.

சிறு வயதில்,கிராமத்தில், அந்த பெட்ரோல்புகையினை முகர்வதற்க்காகவே வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம் வண்டியின் பின்னால் ஆஜர்ஆவது வழக்கம்.. (இப்போதெல்லாம் நகர் முழுவதும் இலவசமாய் கிடைக்கிறதே..)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கண்ணுங்களா, ஒருத்தர பிடிக்காததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்..
ஆனா, பிடித்திருப்பதற்கு (என்னால்) காரணமே சொல்ல முடியாது..
சிம்ப்ளி பிடிச்சிருக்கு.. அவ்ளோ தான்..
(பி.கு: இது சத்தியமாக மழுப்பல் இல்லை..)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு
பிப்ரவரி 13, 2003
சேமிப்பின் அவசியம்

(இப்படி குறிப்பிட்டு சொல்வது, 'அனைத்தும்' என்று சொன்னால் மழுப்பல் என்று சொல்வீர்கள் என்பதற்காக அல்ல..)


17. பிடித்த விளையாட்டு?

சிறுவயது முதல் கில்லி, கோலி, பம்பரம், அப்போது விளையாடி (இப்போது பெயர் அறியப்பட்ட) பேய்ப்பந்து....
அதன் பின்பு, இவற்றுடன் கிரிக்கெட்..
இப்போது, கம்பியூட்டர் 3D வீடியோ கேம்கள்..

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்..
உபயம் எங்கள் வீட்டின் அப்போதைய ரிமோட் இல்லா தொலைகாட்சிப்பெட்டி..:)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..

(எல்லாரும் நல்லதையே ஆதரித்தால் மத்தவற்றை யார் கரையேற்றுவது..?
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா..? அதான்..)



20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததீ..
நூறு பேருக்கு நடுவில் தனியாக பார்த்தேன்..

(புரியலையோ..? நண்பர்களுடன் இல்லாமல் தனியே சென்று பார்த்தேன்..)

21.பிடித்த பருவ காலம் எது?

கோடையை தவிர மற்றவை எல்லாம்..

குளிரெனில் போர்த்திக்கொள்ளலாம்..
மழை எனில் முக்காடிட்டுகொள்ளலாம்..
வசந்தகாலமெனில், புதுப்பொழிவுடன் இயற்கை தரும் அழகை ரசிக்கலாம் ..
ஆனால், இந்த கோடைகாலமெனில் எதுவும் செய்ய இயலுவதில்லை.. சீக்கிரம் சோர்ந்தும் போகிறோம். ஆகவே, கோடைக்கு தடா..

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இந்த கணினியை சந்தித்த பின் பேப்பர் வகையறாக்களை கையாள்வது வெகுவாக குறைந்துவிட்டது..
செய்தித்தாள் படிப்பது முதற்கொண்டு கணினியே தேவைப்படுகிறது..

இதில் எங்கத்தபோயி புத்தகம் படிப்பது..
கடந்த இரண்டு நாற்களாக, PDF பார்மேட்டில் உள்ள சுஜாதா அவர்களின் "மீண்டும் ஜீனோ" ஓடிக்கொண்டுள்ளது..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும்.. ஆனால் அதே படத்தை..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த (சில) சத்தங்கள்..
1.வள்ளுவன் மேற்கொண்ட, இன்றைய பொழுதில் என் பெற்றோர் மேற்கொள்ளும், உலக உயிரினங்களின் தேவைக்கான உடைகளை தயாரிக்கும் நெசவுத்தொழிலுக்கு அடிப்படைத்தேவைகளில் ஒன்றான தறி என்று அழைக்கப்படும் இயந்திரத்தின், இன்றைய அட்வான்ஸுடு வெர்சனான பவர்லூம் மெசின்களின் அதிகப்படியான சத்தம்..
(இந்த தொழிலை என் பெற்றோர் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் நல்லெண்ணவகை கர்வமும்கொள்கிறேன்)

2.எங்கள் வீட்டின் பிரத்தியேக FM ஆகிய என் அம்மாவின் தினப்படி ஒலிபரப்புகள்.. எப்படி தான் பேசுறாங்களோ.. தினமும் பேசுறாங்க.. பேசுறாங்க.. பேசிக்கிடே இருக்காங்கப்பா..

அக்கா இருந்தால், அம்மாவின் இந்த திட்டல்களை நாங்கள் இருவரும் சேர்ந்து கலாய்த்து சிரித்தே பொழுதை கழித்துவிடுவோம்..

ஆகவே, அக்கா இருக்கும்போது, அம்மாவின் ஒலிபரப்பு பிடிக்கும்..

பிடிக்காத சத்தம்..

அக்கா இல்லாத போழ்து, கலாய்க்க ஆள் இல்லாததால், அதே ஒலிபரப்பு பிடிக்காது..

(அம்மா.. சும்மானாச்சிக்கும் தான்.. ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கோவா (கல்லூரி நண்பர்களுடன்)..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

பார்த்ததை (விட), கையில் கிடைத்துள்ள படங்களை பார்த்து வரைய இயலும்..
(வரைந்தது நல்லா இருக்குமா இல்லையானு எல்லாம் கேக்கப்பிடாது..)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

1. கூட இருந்தே குழி (முதல் கிணறுவரை) பறிப்பது..
2. பொறாமை..
(எந்த ஆமை வீட்டுக்குள் வந்தாலும் பாலாகாத வீடானது, இந்த பொறாமை வந்தால் மட்டும் விளங்காமல் போய்விடும்..)
3.நண்பனின் பிரிவு.. அதுவும் காரணமே புறியாமல் (or) சொல்லாமல் பிரிந்து / விலகிச்செல்லும் நண்பனாய் மதிக்கப்படுபவனின் பிரிவு..
(ஒன்றுக்கும் அதிகமாக கூறியமைக்கு மன்னிக்கவும்..)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

(எட்டாவது கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு சொன்னது போல்) முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இதுவரை நான் சென்ற அனைத்து இடங்களும்..
(தென்னிந்தியாவை விட்டு எங்கும் சென்றது இல்லை என்பது உபரித்தகவல்)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் நிர்பந்திக்காமல், நிந்திக்காமல், நானும் நிர்பந்தப்படுத்தப்படாமல், நிந்திக்கப்படாமல் நான் நானாக இருக்க ஆசை..
(ஆனால்.. என்ன செய்ய..? இந்தமாதிரி நினைக்கும்போதெல்லாம், "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" பாடல்தான் நினைவிற்கு வருகிறது..)

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இன்னும் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் காத்திருங்கள்.. திருமணம் முடித்து, பின் சொல்கிறேன்..

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

என்ன புதுசா சொல்லிடபோறேன்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவரின் சொத்து..
ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..

********


இதே கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை சொல்வதற்கு

~சக்கரை~ சுரேஷ்

அவர்களை அழைக்கிறேன்..

(ஜமால் அண்ணாவை ஏற்கனவே பலர் புக் செய்துவிட்டமையால், அவரையும், எனது பதிவுலகிற்கு இரண்டாவதாக அறிமுகமான சிபி அண்ணாவை ஏதோ சில காரணங்களால் சில நாட்களாக தொடர்புகொள்ள இயலாமையால், அவரையும், மற்றும் சில காரணங்களால் சிலரையும், பல காரணங்களால் பலரையும் அழைக்க முடியாதது வருத்தமே..)

(சபா.. எப்டியோ) என்னால் முடிந்ததை நண்பனுக்கு செய்துவிட்டேன்.. நல்லபடியா நீங்களும் வந்து எங்கள் அன்புச்சங்கிலியில் இணைய அழைக்கிறேன்.. வாருங்கள் நண்பா..


46 comments:

சுந்தர் said...

//ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவரின் சொத்து..
ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை//

.நல்ல கருத்து.

வேத்தியன் said...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(பெரும்பாலான நாட்களைபோல்) கருப்பு நிற பேன்ட், சட்டை மற்றும்ம்ம்.. (போதுமே..)//

ஐயையோ நிறுத்துங்க நிறுத்துங்க...
:-)

வேத்தியன் said...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு வர்ணமாக..
//

ஐ மை ஃபேவரிட்...

வேத்தியன் said...

பதில்கள் எல்லாம் யாதார்த்தமா இருக்கு மாப்ள...

கலக்கீட்டே...
:-)

நட்புடன் ஜமால் said...

\\
(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..

1. 17 இன்ச் Wide screen மானிடர்..
2. கருப்பு நிற கீபோர்ட் மற்றும் மவுஸ்..
3. சிலிம் டைப் காபினெட்..
4. 340GB ஹார்ட் டிஸ்க்..
(இன்னும் பல..)

என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..

1.அடிக்கடி வைரஸ், மால்வேர் என்று கண்டதயும் உள்ளே விட்டுக்கொண்டு மாரடிக்க வைக்கும்..
2. தூசி இல்லாமல் அடிக்கடி துடைத்து வைக்கசொல்லும்.\\

அருமையான பதில்

மிகவும் இரசித்தேன் ...

நட்புடன் ஜமால் said...

\\ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..
\\

நல்ல பதில்

sakthi said...

(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..

1. 17 இன்ச் Wide screen மானிடர்..
2. கருப்பு நிற கீபோர்ட் மற்றும் மவுஸ்..
3. சிலிம் டைப் காபினெட்..
4. 340GB ஹார்ட் டிஸ்க்..
(இன்னும் பல..)

என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..

1.அடிக்கடி வைரஸ், மால்வேர் என்று கண்டதயும் உள்ளே விட்டுக்கொண்டு மாரடிக்க வைக்கும்..
2. தூசி இல்லாமல் அடிக்கடி துடைத்து வைக்கசொல்லும்.\\


simply superb

sakthi said...

ஆனாலும் எப்போதும் நெருக்கமான நட்பாக இருப்பினும், இவரின் நட்பு இல்லையேல் வடக்கிருந்து உயிர் நீப்பேன் மாதிரி யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை.. இதனால் எந்த உறவின் பிரிவும் சீக்கிரம் என்னை பாதிப்பது இல்லை..

tats gud

sakthi said...

மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..

(எல்லாரும் நல்லதையே ஆதரித்தால் மத்தவற்றை யார் கரையேற்றுவது..?
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா..? அதான்..)


ரசித்தேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

பதில்கள் அருமை..

அப்துல்மாலிக் said...

//இந்த 32 கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிப்பது என்னை நானும், நீங்களும் அறியமுடிவதற்கான நற்களமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே//

ரசித்தேன்...பிணைப்பு இருந்தால் எல்லாமாகவும் ஆகலாம்

அப்துல்மாலிக் said...

//1. 17 இன்ச் Wide screen மானிடர்..
2. கருப்பு நிற கீபோர்ட் மற்றும் மவுஸ்..
3. சிலிம் டைப் காபினெட்..
4. 340GB ஹார்ட் டிஸ்க்..
(இன்னும் பல..)

என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..

1.அடிக்கடி வைரஸ், மால்வேர் என்று கண்டதயும் உள்ளே விட்டுக்கொண்டு மாரடிக்க வைக்கும்..
2. தூசி இல்லாமல் அடிக்கடி துடைத்து வைக்கசொல்லும்..

//

வித்தியாசமான பதில்... ரசித்தேன்

இப்போவெல்லாம் மனைவி/குழந்தையைவிட இதுதான் சரிபாதி, குறைந்த பட்சம் 8 மணிநேரம் கூடவே இருக்குது

அப்துல்மாலிக் said...

//மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..

//

சரிதான்... பணம்போட்டவனை கொஞ்சமாவது வாழவைக்க வேண்டாமா

सुREஷ் कुMAர் said...

//தேனீ - சுந்தர் said...
நல்ல கருத்து.
//
உங்களின் கருத்துக்கு நன்றி சுந்தர்.. :)

//
வேத்தியன் said...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(பெரும்பாலான நாட்களைபோல்) கருப்பு நிற பேன்ட், சட்டை மற்றும்ம்ம்.. (போதுமே..)//

ஐயையோ நிறுத்துங்க நிறுத்துங்க...
:-)
//

நிறுத்திட்டேன்..

//
ஐ மை ஃபேவரிட்...
//

சேம் சுவீட்.. :)

//
பதில்கள் எல்லாம் யாதார்த்தமா இருக்கு மாப்ள...

கலக்கீட்டே...
:-)
//

நன்றி மச்சி..

//
நட்புடன் ஜமால் said...
\\
(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..
\\
அருமையான பதில்
மிகவும் இரசித்தேன் ...
//
ரொம்ப சந்தோசம் அண்ணா..

//
\\ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..
\\

நல்ல பதில்
//
நன்றி ஜமால் அண்ணா..

//
//
sakthi said...
(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..
\\
simply superb

ஆனாலும் எப்போதும் நெருக்கமான நட்பாக இருப்பினும், இவரின் நட்பு இல்லையேல் வடக்கிருந்து உயிர் நீப்பேன் மாதிரி யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை.. இதனால் எந்த உறவின் பிரிவும் சீக்கிரம் என்னை பாதிப்பது இல்லை..
\\
tats gud
//
நன்றி சக்தி..
இந்த சங்கிலித்தொடர் இடுகைக்கு சக்கரை சுரேஷ் உடன் உங்களையும் அழைக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.. ஆனால் உங்களின் தொடர்பு முகவரிகள் ஏதும் தெரியாததால், உங்களை தொடர்புகொண்டு கன்பார்ம் செய்ய இயலாமையால், அவரை மட்டும் அழைத்துவிட்டு, உங்களை அழைக்க முடியவில்லை..

//
உருப்புடாதது_அணிமா said...
பதில்கள் அருமை..
//
கருத்துக்கு நன்றி உருப்புடாதது_அணிமா.. :)

அப்துல்மாலிக் said...

ஒவ்வொரு பதிலும் ரசிக்க வைத்தது, சொல்லப்பட்ட விதம் நகைச்சுவையாகவும் அமைந்தது

வாழ்த்துக்கள் நண்பரே

सुREஷ் कुMAர் said...

//
அபுஅஃப்ஸர் said...

\\இந்த 32 கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிப்பது என்னை நானும், நீங்களும் அறியமுடிவதற்கான நற்களமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே
\\

ரசித்தேன்...பிணைப்பு இருந்தால் எல்லாமாகவும் ஆகலாம்
//
கண்டிப்பா அபுஅஃப்ஸர்..

सुREஷ் कुMAர் said...

//
அபுஅஃப்ஸர் said...

\\
என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..
\\
வித்தியாசமான பதில்... ரசித்தேன்

இப்போவெல்லாம் மனைவி/குழந்தையைவிட இதுதான் சரிபாதி, குறைந்த பட்சம் 8 மணிநேரம் கூடவே இருக்குது
//
நன்றி அபுஅஃப்ஸர்..
இது என்னுடன் தினமும் 15 முதல் 16 மணிநேரம் உள்ளது..

//
\\மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..
\\
சரிதான்... பணம்போட்டவனை கொஞ்சமாவது வாழவைக்க வேண்டாமா
//

நெம்ப கரீட்டு தலைவா..

सुREஷ் कुMAர் said...

//
அபுஅஃப்ஸர் said...

ஒவ்வொரு பதிலும் ரசிக்க வைத்தது, சொல்லப்பட்ட விதம் நகைச்சுவையாகவும் அமைந்தது

வாழ்த்துக்கள் நண்பரே
//
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி அபுஅஃப்ஸர்.. :)

Suresh said...

நன்றி தோழா


(பெரும்பாலான நாட்களைபோல்) கருப்பு நிற பேன்ட், சட்டை மற்றும்ம்ம்.. (போதுமே..)//

Suresh said...

உங்களை நன்றாக புரிய உதவியது, பதிலகளின் தெளிவும் ,

//அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது வரும் பெட்ரோல் கலந்த புகைமணம் முதல்..,//

இது வித்தியாசமான அழகான் ரசனை கூட :-)

//கண்ணுங்களா, ஒருத்தர பிடிக்காததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்..
ஆனா, பிடித்திருப்பதற்கு (என்னால்) காரணமே சொல்ல முடியாது..
சிம்ப்ளி பிடிச்சிருக்கு.. அவ்ளோ தான்..
(பி.கு: இது சத்தியமாக மழுப்பல் இல்லை..)/

பஞ்சு டைலாக் மாதிரி இருக்கு

என்னையும் மதித்து அழைத்தற்க்கு நன்றிகள்

தினேஷ் said...

//எங்கள் வீட்டின் பிரத்தியேக FM ஆகிய என் அம்மாவின் தினப்படி ஒலிபரப்புகள்.. எப்படி தான் பேசுறாங்களோ.. தினமும் பேசுறாங்க.. பேசுறாங்க.. பேசிக்கிடே இருக்காங்கப்பா..//
எங்க வீட்டிலேயும் அம்மா FM தான்..
ஆவ்வ்வ்வ்வ்...

தினேஷ் said...

//மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..//

நம்மா ஜாதி ( தமிழகத்தில் தலைவிரித்தாடும் பேய் அல்ல) தலை நீ ..

सुREஷ் कुMAர் said...

//
Suresh said...

உங்களை நன்றாக புரிய உதவியது, பதிலகளின் தெளிவும் ,

\\
அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது வரும் பெட்ரோல் கலந்த புகைமணம் முதல்..,
\\

இது வித்தியாசமான அழகான் ரசனை கூட :-)
//

கருத்துக்கு நன்றி suresh..

//
பஞ்சு டைலாக் மாதிரி இருக்கு
//
மாதிரி எல்லாம் இல்லை.. எல்லாமே ஒரிஜினலு..

//
என்னையும் மதித்து அழைத்தற்க்கு நன்றிகள்
//
நன்றி சொன்னதற்கு நன்றி suresh.. :)

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

எங்க வீட்டிலேயும் அம்மா FM தான்..
ஆவ்வ்வ்வ்வ்...
//

நன்றி சூரியன்..
எல்லார் வீட்டிலும் இப்படித்தானோ..
கம்முனு கருத்துகணிப்பு கேட்டு ஒரு இடுகைஇட்டுடலாமா..?

//
\\
மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..
\\

நம்மா ஜாதி ( தமிழகத்தில் தலைவிரித்தாடும் பேய் அல்ல) தலை நீ ..
//

என்னங்க பெரிய பேச்செல்லாம் பேசிக்கிட்டு.. :)

சூரியன்.., இது உங்களின் முதல் வருகையா..?
வருகைக்கு நன்றி சூரியன்..
தொடர்ந்து வாருங்கள்..

தினேஷ் said...

//எல்லார் வீட்டிலும் இப்படித்தானோ..
கம்முனு கருத்துகணிப்பு கேட்டு ஒரு இடுகைஇட்டுடலாமா..?
//
கண்டிப்பா போடலாம் , அப்பா FM விட அம்மா FM தான் அதிக பாப்புலரா இருக்கும்..

//சூரியன்.., இது உங்களின் முதல் வருகையா..?//

ஆமாம் இப்பொழுதுதான் தமிழ் வலைதலங்களை ப்ற்றி தெரிந்து பதிவு போடுவதை விட பின்னுட்டம் போட்டுகொண்டிருக்கிறேன்..(பதிவு போட ஐடியா வேணும்னா முதலில் பின்னுட்டம் போட்டு பழகுங்கனு சொன்ன பின்னுட்ட சிகாமணி அண்ணண் வாலுவுக்கு நன்றி)

இராகவன் நைஜிரியா said...

வித்யாசமான பதிலகள், வித்யாசமான சிந்தனை. ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க பதிலகள் எல்லாம்.

இராகவன் நைஜிரியா said...

// திறைமையான தம்பி. //

நம்பிக்கை பொய்க்கவில்லை...

இராகவன் நைஜிரியா said...

// ஆனால், இங்கு, இந்த 32 கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிப்பது என்னை நானும், நீங்களும் அறியமுடிவதற்கான நற்களமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே..//

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சியே..

இராகவன் நைஜிரியா said...

// எதுவும் நிரந்தரம் இல்லை என்ற மனப்பான்மையில் வாழ்பவன் நான்..//

நிரந்தரம் என்ற வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும் நிரந்தரமில்லை.

இராகவன் நைஜிரியா said...

// இருப்பினும், எனது ஏழாவது செமஸ்டரின் ஆரம்பத்தில் வாங்கிய 13 அறியர்களை நினைத்து என் பெற்றோர் கலங்கிவிடகூடாது என்பதற்காக அவர்களை முந்திக்கொண்டு முதலைக்கண்ணீர் வடித்து அவர்களை என் அரியர் பற்றின கவலையில் இருக்கவிடாமல் என்னை தேற்ற அவர்களை திசை திருப்பினேன்..//

வெரி குட். நல்ல ஐடியாவா இருக்கே.

இராகவன் நைஜிரியா said...

// இருப்பினும் எனது கையெழுத்தை நானே விட்டுக்கொடுக்கமுடியுமா..?
ஆகவேவேவேவே..

பி..டி..க்..கா..து..//

உண்மையை ஒத்துக்கிட்டத்துக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// பிடிக்காத விஷயம்..
முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..//

சேம் ப்ளட்...???????????

இராகவன் நைஜிரியா said...

// (பி.கு: இது சத்தியமாக மழுப்பல் இல்லை..)//

நம்பிட்டோம்..!!!!!!!!!!

இராகவன் நைஜிரியா said...

// (இப்படி குறிப்பிட்டு சொல்வது, 'அனைத்தும்' என்று சொன்னால் மழுப்பல் என்று சொல்வீர்கள் என்பதற்காக அல்ல..) //

இதையும் நம்பிட்டோம்

இராகவன் நைஜிரியா said...

// .எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..

(எல்லாரும் நல்லதையே ஆதரித்தால் மத்தவற்றை யார் கரையேற்றுவது..?
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா..? அதான்..)//

நீ ரொம்ப நல்லவம்பா அப்படின்னு சொல்லணும் போலிருக்கு. என்னா மொக்கை படமா இருந்தாலும் பார்ப்பேன் சொல்வது அப்படித்தான் இருக்கு........ :)

இராகவன் நைஜிரியா said...

// (அம்மா.. சும்மானாச்சிக்கும் தான்.. ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)//

அம்மாவை நினைச்சா இங்கும் பயமா...

டிஸ்கி : இதில் அரசியல் ஒன்றுமில்லை

இராகவன் நைஜிரியா said...

//நண்பனின் பிரிவு.. அதுவும் காரணமே புறியாமல் (or) சொல்லாமல் பிரிந்து / விலகிச்செல்லும் நண்பனாய் மதிக்கப்படுபவனின் பிரிவு.. //

சரியாகச் சொன்னீர்கள். காரணம் தெரியாமல் பிரியும் நட்புக்கு கவலைப் படவேண்டிய அவசியமேயில்லை.

இராகவன் நைஜிரியா said...

// வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

என்ன புதுசா சொல்லிடபோறேன்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவரின் சொத்து..
ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..//

நெத்தியடி பதில்..

Anonymous said...

2.சமத்துப்புள்ள just 13 தானே அதுக்காகவா அழுத?
4.பொருப்பான பதில்
5.ஆளு உஷார் தானுங்க
7.ஷார்ப்
8.குயூட்
9.interesting
10.உண்மை+ உணர்வு
11.ஹைய்யா
13.ஹைய்யா எனக்கும்
14.புது பதில்
24.யப்பா...இருப்பினும் நல்ல பதில்

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ திறைமையான தம்பி. \\
நம்பிக்கை பொய்க்கவில்லை...
//

//
எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சியே..
//
நன்றி அண்ணா.. :)

सुREஷ் कुMAர் said...

//
நிரந்தரம் என்ற வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும் நிரந்தரமில்லை.
//
உண்மை தான்..

//
வெரி குட். நல்ல ஐடியாவா இருக்கே.
//
பின்னே.. ஐடியா என்னோடதுல.. இப்டித்தான் இருக்கும்..

सुREஷ் कुMAர் said...

//
\\
பி..டி..க்..கா..து..
\\
உண்மையை ஒத்துக்கிட்டத்துக்கு நன்றி.
//
உங்களின் நன்றிக்கு நன்றி.. :))

//
\\ பிடிக்காத விஷயம்..
முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..
\\
சேம் ப்ளட்...???????????
//
ஆமாம்பா ஆமாம்..

सुREஷ் कुMAர் said...

//
நம்பிட்டோம்..!!!!!!!!!!
//
உங்களின் நம்பிக்கைக்கு நன்றி..

//
நீ ரொம்ப நல்லவம்பா அப்படின்னு சொல்லணும் போலிருக்கு.
//
யோசிக்காதிங்க.. சீக்கிரம் சொல்லிடுங்க..

सुREஷ் कुMAர் said...

//
அம்மாவை நினைச்சா இங்கும் பயமா...
டிஸ்கி : இதில் அரசியல் ஒன்றுமில்லை
//
பாசம்பா (எல்லா அம்மாவிடமும் தான்)..

सुREஷ் कुMAர் said...

//
\\வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

என்ன புதுசா சொல்லிடபோறேன்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவரின் சொத்து..
ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..
\\
நெத்தியடி பதில்..
//
பாராட்டுக்கு நன்றி அண்ணா..:)

सुREஷ் कुMAர் said...

//
2.சமத்துப்புள்ள just 13 தானே அதுக்காகவா அழுத?
//
ஹலோ.. யார் அழுதது.. அது அவர்களை ஏமாற்ற முதலைக்கண்ணீர்..

//
4.பொருப்பான பதில்
//
நன்றி தமிழ்..

//
5.ஆளு உஷார் தானுங்க
//
இல்லைனா நிஜார..

//
7.ஷார்ப்
8.குயூட்
//
மீண்டும் நன்றி..

//
9.interesting
//
ஹீ.. ஹீ..

//
10.உண்மை+ உணர்வு
//
நிஜம்தான்..

//
11.ஹைய்யா
13.ஹைய்யா எனக்கும்
//
:))))

//
14.புது பதில்
//
ஆமாம்.. நேற்று தான் எழுதினேன்..
இன்னும் சில தினங்களில் பழையது ஆகிவிடும்.. :)

//
24.யப்பா...இருப்பினும் நல்ல பதில்
//
ஏன், வள்ளுவனை ninaithu மலைத்து விட்டீரா..?
இல்லை..
உங்கள் வீட்டில் இப்படிப்பட்ட FM இல்லையா..?