Monday, March 30, 2009

பில்லிசூனியம் உண்மையா..?

பில்லிசூனியம், வாஸ்து உண்மையா..?

இது எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தங்க வீட்ல நடந்துட்டு இருக்குற நெச கூத்து..

என்னனா.., அந்த வூட்ல, ஒரு போர்சன்ல எனக்கு தெரிஞ்சவங்க குடி இருந்துட்டு, இன்னொரு போர்சன்ல அவங்க அண்ணன் குடும்பம் குடி இருந்துச்சு.. அவங்க ஏதோ சரி இல்லன்னு ஜோதிடம் பாத்ததுக்கு, கொஞ்ச நாளைக்கு அந்த வீட்ல இருக்க வேணா, வேற வீட்டல இருங்கன்னு சொல்லிருக்காரு.. so, அவங்க வேற வீட்டுக்கு போகவும், அவரு தம்பிய அங்க shift பண்ணிட்டு, அந்த வீட்ட வாடகைக்கு விட்டுடாங்க..

தம்பி இந்த வீட்டுக்கு ஷிபிட் பண்ணறதுக்கு முன்னாடியே, கிட்டத்தட்ட ஒன்னர வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் நுரையீரல் இருக்கற area'la பயங்கரமா வலியெடுத்து, ரெண்டு நாளா தண்ணிகூட குடிக்கமுடியாம COVAI PSG'la அட்மிட் பண்ணுனாங்க..
அங்க என்ன கொடுமைனா..
இவங்கள சுமாரா evening 4 மணிக்கு கூட்டிட்டு போனாங்க.. ஒரு நர்ஸ் வந்து பெட் அரேஞ் பண்ணிகுடுத்துட்டு என்னான்னு கேட்டுட்டு, சரி sacn பண்ணனும்.. 15000 RS'a பே பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க. நைட் டாக்டர் வந்து பாப்பாங்கன்னு சொல்லிடு பூடாங்க.. அவங்க போன கொஞ்ச நேரத்துல யாரோ வர்றாமாதிரி சத்தம் கேட்டு டாக்டர்னு நெனச்சு பாத்தா.., யாரோ பக்கத்து பெட் நோயாளிக்கு வேண்டப்பட்டவங்க..
சரினு திருப்பி கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணிட்டு இருந்தப்போ திருப்பி சத்தம் கேட்டு திரும்பி பாத்தா.., யாரோ ஒருத்த சாப்பாட்டுக்கு ஆர்டர் எடுத்துட்டு இருந்தான்..

என்னடான்னு பாத்தா.. hospital rule'nu சொன்னான்.. இன்னாடா உங்க ரூல்ஸ்'னு கேட்டதுக்கு, அவன் சொன்னத கேட்டு, ஒரு நிமிஷம் அவன கொலை பண்ணிட்டு prison house'ku பூடலாம்னு ஆகிடுச்சு..
என்ன மேட்டர்னா.., வெளில இருந்து யாரும் சாப்பாடு கொண்டு வர கூடாதாமாம்..
இது பரவால.. நெக்ஸ்ட்.. அவங்க ஹாஸ்பிடல் கான்டீன்'ல இருந்து தான் சாப்பாடு வருமாமா.. அதும் இன்னைக்கு night, நாளைக்கு காலை சாப்பாடு, அப்பறம், நாளைக்கு மதிய சாப்பாடு, இந்த மூணுக்கும் இன்னைக்கு நைட்'e ஆர்டர் பண்ணியகானுமாம்..
என்னாங்கடா இது.. நாளைக்கு மதியம் என்ன சாப்ட போறேன்னு இன்னைக்கு night'e எப்டிடா முடிவு பண்ணுறது.. அதுவும், ரெண்டு நாளா தண்ணியே குடிக்க முடியாம இருக்கற இவருக்கு இப்போ என்ன தர்றதுனே தெரியல.. இதுல நாளைக்கு lunch ஆர்டர் பண்ண சொல்றானுங்க..
Night வரைக்கும் வெய்ட் பண்ணி பாத்தோம்.. டாக்டர் வரலை. ஆர்டர் பண்ணுன டிபன் அயிட்டம் தான் வந்துச்சு. அத்த பக்கத்து பெட்'ல இருந்தவங்களுக்கு டிபன் தானம் பண்ணிட்டு ராவோட ராவா வீட்டுக்கு வந்துட்டோம். அடுத்த நாள் காலில மொதோ வேலையா அவர எங்க பேமிலி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயி காட்டுனோம். இவரு நல்ல மனுஷ.. செக் பண்ணி பாத்துட்டு பெருசா பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொல்லி மருந்து எழுதி குடுத்து அனுப்பிட்டு, அவங்க அப்பாவ மட்டும் தனியா வந்து பாக்க சொல்லிருக்காரு..
அடுத்த நாள் போயி பாக்கவும், டாக்டர் ரொம்ப பேஜார் பண்ணிபுடாறு.. என்னனா, டாக்டர் டெஸ்ட் பண்ணி பாத்ததுல, இவருக்கு CML'nu ஏதோ ஒரு வகை blood cancer'nu confirm பண்ணிருக்கறதா சொல்லவும் அப்பா அப்செட் ஆகிட்டாரு.. இது முதல் கட்ட பரிசோதனை தான்.. இன்னும் சில டெஸ்ட் எல்லாம் கோயமுத்தூர்'ல போயி எடுத்து பாத்தா தான் உறுதியா சொல்ல முடியும்னு சொல்லிடாரு..

எல்லா டெஸ்ட்'உம் முடிஞ்சு அது CML டைப் பிளட் கான்செர் தான்னு முடிவு பண்ணி மருந்து மாத்திரை எல்லாம் குடுத்தனுப்பிடாங்க.. அதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் வெளி பார்வைக்கு தெரியலேனாலும், மாசா மாசம் டெஸ்ட் பண்ணி பாக்கும் பொது சாப்புடுற மருந்தோட அளவ பொறுத்து டெஸ்ட் ரிப்போர்ட் ரிசல்ட் சில டைம் நல்லாவும், சில டைம் மோசமாவும் காட்டும்.. ஆனாலும் அவுருக்கு உடலளவுல எந்த பிரச்சனையும் தெரியல..
இந்த டைம்'ல தான் அவுரு இந்த வாஸ்த்து சரி இல்லாத அவங்க அண்ணன் வீட்டுக்கு குடிபோனாறு.. ஆனா அவங்க அண்ணன் இந்த வாஸ்து மேட்டர இவுரு கிட்ட இருந்து மறச்சுட்டு தான் குடிவசிருக்காரு.. போன ரெண்டாவது நாளே, அவுரும் ஒழுங்கா தூங்கல, அவரு wife'm ஒழுங்கா தூங்கல.. ஏதோ ஒன்னு அவங்கள disturb பண்றத உணர்ந்திருக்காங்க.. ரெண்டு மூணு நாள் போக போக, இந்த பிரச்ன பகல்லயே ஆரம்பிச்சிடுச்சு.. ரெண்டு பேத்துக்கும் வீட்டுக்கு போகவே பயம் வர ஆரம்பிக்கவே.. ஒன்னும் முடியாம பழைய வீட்டுக்கே திரும்பி வந்துட்டாங்க..

என்னடா இது ஒடம்பும் சரி இல்ல, வீடும் சரி இல்ல, என்ன தான் பிரச்னைனு தெரிஞ்சுக்க எங்க ஊர்ல இருக்கற ஒரு ஜோசியர் கிட்ட அவரோட ஜாதகத்த காட்டினோம். இத்தனைக்கும் நாங்க தான் அவரோட ஜாதகத்த கொண்டு போனோம்.. ஜோசியருக்கு அந்த ஜாதகத்தோட owner யாரு.. அவருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்'னு எல்லாம் தெரியாது.. தெரியவும் வாய்ப்பு இல்ல..

அவரோட ஜாதகத்த பாத்தா வொடனே, இவங்க வீட்டு வாசல் வடக்கு திசைல இருக்கானு கேட்டாரு.. அப்பாவும் யோசிச்சு பாத்து ஆமாம்னு சொல்லிருக்காரு.. அடுத்து அவுரு சொன்னது, கிட்டத்தட்ட கடந்த ரெண்டு வருசமா இவருக்கு ஒடம்பு சரி இல்லைன்னு ரொம்ப அதிகாமான மருத்துவ செலவு ஆகிட்டு இருக்கனுமே'னு கேட்டாரு.. ஆமா இதும் கரெக்ட் தான்னு சொல்லிவெக்கவும், அடுத்தத ஆரம்பிச்சாரு..
வீட்ல தொடர்ந்து பிரச்சனை இருந்துட்டே இருந்ததால வடக்கு பக்க கதவ அடைச்சிட்டு கிழக்கு பக்கம் கதவ வெச்சு சமீபத்துல வீட்ட மாத்திருகாங்களா'னு கேக்க அதுக்கும் அப்பா ஆமா போட்டிருக்காரு.. ஏனா உண்மையிலுமே, பழைய வீட்டுக்கு வந்த வொடனே இந்த கதவு மாத்தும் வைபவம் நடந்துச்சு..

உடனே எங்க அம்மா.., ஏங்க ஜோசியரே.. ஜாதகத்த வெச்சு கதவ புடுங்கி நட்டது எல்லாத்தயுமா சொல்ல முடியும்'னு கேட்டிருக்காங்க.. அதுக்கு அவரு, ஒருத்தரோட ஜாதகம், ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலையும் அந்த நபரோட வாழ்கையில நடக்கற எல்லா மாறுதல்களையும் சொல்லும்.. இந்த இந்த கால கட்டத்துல இது இது நடந்தே தீரும்னு அவரோட ஜாதகத்த வெச்சு உறுதியா சொள்ளமுடியும்னாறு..

அடுத்து சொன்ன மேட்டர் தான் நவீன கால அறிவியலையும் ஜோசியத்தையும் போட்டு கொலப்பிக்க காரணமா போச்சு..

எத நம்பறது.. எத விடுறதுனே தெரியல.. பெரியவங்க சொல்லுவாங்களே.. எத்த தின்ன பித்தம் தெளியும்கர நெலமனு.. மெய்யாலுமே அந்த நெலமைக்கு வந்துட்டோம்..
ஏனா.., ஜோசியர் சொல்றாரு, இவுரு வீட்ல ஒருத்தங்க சூனியம் வெச்சிருக்காங்க.. அதுவும் பக்கத்துல இருக்கற கணவனை இழந்த நெருங்கிய உறவினர் தான் இதுக்கு காரணம்னு சொன்னாரு.. அப்டிப்பட்ட ஒருத்தரும் அவங்க பக்கத்து வீட்ல இருந்தது தான் என்ன கலீஜ் பண்ணுனதுக்கு முக்கிய காரணம்.. ஆனா ஜோசியரையும் சந்தேகப்பட முடியாது.. ஏனா அவுருக்கு இந்த ஜாதகாரர் எந்த ஊருனே தெரியாது..
So, இப்போ இருக்கற வீட்ல இருந்தா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு பெரிய அளவுல நோய் ஏற்பட்டு மருத்துவ செலவு இருந்துட்டே இருக்கும்.. இதுவே, அந்த புது வீட்ல தொடர்ந்து இன்னும் கொஞ்ச நாள் தங்கி இருந்தா மரணம் நிச்சயம்'னு சொல்லிருக்காரு..
இவுரு சொன்னமாதிரி, அவங்க அந்த புது வீட்ல இருந்து பழைய வீட்டுக்கு வர்றதுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி கிட்டத்தட்ட குடும்பத்தோட இறந்து போய்டுவோம்னு நெனைக்கிற அளவுக்கு ஏதோ நடந்திருக்கு.
இதுக்கு ஒரே தீர்வு, இந்த சூனியத்த எடுக்கற ஒருத்தர பாத்து சரிபண்ணுறது தான்னு சொல்லிடாரு.. இவரோட பிரச்சனைய தீக்க இது வரைக்கும் கடந்த ரெண்டு வருசத்துல சித்தா, ஆயுர்வேதம், கேரள வைத்தியம், ஆங்கில மருத்துவம்'னு பலதும் பாத்தாச்சு.. இன்னும் ஒன்னும் சரி பட்டு வரலை.. இந்த சூழ்நிலையில இப்டி ஒருத்தர் சொன்னா என்ன பண்ண தோணும்.. இது வரைக்கும் அந்த ஜோசியர நம்பாத நானே இந்த டைம் அப்பா கிட்ட அடுத்த செலவ எதாச்சும் சாமியாருக்கு பண்ணி பாத்துடலாம்பா'னு சொல்லிட்டனா பாத்துகோங்க, எவ்ளோ தான் இந்த மருத்துவம், அந்த மருத்துவம்னு சொல்லி அவங்கள ரெண்டு வருசமா அலைக்களிச்சு இருப்பாங்கனு..

இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி..
இவுருக்கு ஒடம்பு சரி இல்லாம போனதுக்கு காரணம் பில்லி சூனியம் மற்றும் வாஸ்துவா..? இல்லை நெஜம்மாலுமே சில அறிவியல் காரணங்களா..?

அறிவியல் காரணம்னு சொன்னா.. PSG’la இருந்து வெளிய வந்து பல பக்கம் சுத்தி வைத்தியம் பாத்துட்டு, அப்புறம் திருப்பி கோயமுத்தூர்'ல இருக்கற இன்னொரு பெரிய ஹாஸ்பிடல்'ல வைத்தியம் பாத்தும் இன்னும் ஒரு பிரயஜனமும் இல்லாததுக்கு காரணம் என்ன.. புற்று நோய்க்கு சிகிச்சை இல்லைன்னு தான் சொல்லுறாங்க.. ஆனா, இவுருக்கு சொல்லப்பட்டிருக்கும் இந்த CML வகை நோய்க்கு சிகிச்சை மூலம் வேறு பல நபர்களை குணப்படுத்தி இருக்கறதா அந்த முன்னணி ஹாஸ்பிடல் மாரடிசுக்கிட்டு இருந்தும், ஏன் இவர குணப்படுத்த முடியல.. அந்த பில்லி சூனியம் எல்லாத்தையும் தாண்டி நவீன அறிவியலால செயல்பட முடியலையோ..?

இன்னும் நெறையா கேக்க வேண்டி இருக்கு.. ஆனா இந்த மாதிரி கொஞ்சம் டிபிகல் டாபிக்க இதுக்கு மேலயும் கொலப்பவேண்டாம்னு தோணுது.. So, முடிக்காமல் முடிக்கிறேன்..

பி.கு: இத இங்க பதிவிடுவதன் நோக்கம் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அல்ல..
இதை எல்லா துறைகளிலும் இருக்கும் பலரும் படிக்ககூடும்.. அவர்களில் எவரேனும் மருத்துவ துறையிலோ, ஜோதிட துறையிலோ புலமை பெற்றவராக இருந்து, அவர் மூலம் எனக்கு ஏதேனும் தகவல் கிடைக்க கூடும் என்ற நப்பாசையே இந்த பதிவின் நோக்கம்.

Saturday, March 28, 2009

வுடுவமா நாங்க..

அங்க இங்கனு எங்கெங்கயோ ரெகமென்டேசன் எல்லாம் புடிச்சு கடைய விருச்சு யாராச்சும் கடைக்கு வருவாங்கன்னு மூணு பதிவும் போட்டாச்சு.. ஆனா இதுவரைக்கும் யாரும் இந்த பக்கம் எட்டிகூட (atleast திரும்பி) கூட பாக்கல.. இதுக்கு மேலயும் யாருமே இல்லாத கடையில டீ ஆத்தனுமா என்ன..?.
அப்டின்னு நெனச்சுட்டு இருக்கும்போது தான் கொசுவத்தி சுத்தி, செகண்ட் semester நெனப்பு வந்திடுச்சு..

அப்போ தான் பச்சி பய சுருள கட் பண்ணி ராசா கத சொன்னான்.. அந்த ராசாதி ராசா ஏதோ ஒரு நாட்டு மேல பதனாறு தபா சண்டையில arrear வெச்சு அப்பாலிக்கா வின் பண்ணுனாராம்ல.. நாம என்ன பதனாறு பதிவா போட்டுட்டு டீ ஆத்திட்டு இருக்கோம்.. இப்போ தான் மூணு போட்டிருக்கோம்.. இன்னும் (16 மைனஸ் 3) தபா பதிவ போட்டு ட்ரை பண்ணுவோம்..
//
அதுக்குள்ள கடைய தேத்திடலாம்னு ஒரு நம்பிக்கைதான்..
//
அப்போமு தேத்த முடிலனா என்ன பண்ணனு பச்சி பய புள்ள கேக்குறான்..
ஏண்டா.. அப்பேர் பட்ட ராசாக்கே பதனாறு டைம் arrear கிளியர் பண்ண சான்ஸ் குடுக்கறப்போ, நமக்கு ஒரு முப்பது முப்பத்தாறு சான்ஸ் கூடமா குடுக்காம பூடுவாங்க.. போடா போ.. போறப்ப எதாச்சும் பொருள வுட்டுட்டு போ.. வுசற வுட்டுட்டு போய்டாதனு அந்த பய புள்ளைய அமுக்கிட்டு, டீ ஆத்த ஆரம்பிச்சேன்..
நேத்து வரைக்கும் நம்மலே டீ ஆத்தி நம்மலே குடிச்சாச்சு.. இன்னிக்காச்சும், வடிவேல் மாதிரி யாரையாச்சும் கடத்திட்டு வந்தாச்சும் நம்ம கடைல டீ குடிக்க வெச்சுடனும்.. அதுக்கு என்ன டீ போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான், போன வாரம் ஆத்துன first semester டீ தூளு மீதி இருக்கறது நியாபகம் வந்திச்சு..
அப்புறம் என்ன.. அந்த தூல வெச்சு, இங்க காலேஜ் செகண்ட் semester டீய ஆத்திட வேண்டியது தான்..
//
ஒடனே நம்மள டீ மாஸ்டர் ரேஞ்சுக்கு பாக்குறத பாருயா இந்த பச்சி பய.. நக்கலு..
//
இது இந்த பரிதாப ராசாவின் நான்காவது முயற்சி.. இன்னும் (16 மைனஸ் 4) முயற்சிகள் பாக்கி இருக்கு..
ஆனா, இது இந்த ராசாவோட மெசேஜ சொல்றதுக்கான பதிவுன்றதால, இத கணக்குல சேக்கல..
//
ஆமா.. பதிவுன்னு நீ சொல்லிக்கற அந்த பழைய மூணையுமே யாரும் கணக்குல சேக்கல.. இதுல இது வேறயா..
//
So, இன்னும் (16 மைனஸ் 3) முயற்சிகள் பாக்கி இருக்கு..
தொடர்ந்து படையெடுப்போம்..
டெவெலப் பண்ணுவோம்..
வெற்றி வேல்.. // vetti vela//
வீர வேல்..
//இப்போவாச்சும் தலைப்புக்கும் இதுக்கும் கணீக்சன் கீதானு பாத்தா.. லொள்ளை தான்.. வுடுவுடு.. நம்ம முயற்சில இதெல்லாம் சாதாரணமப்பா..
//
* பின்குறிப்பு : இந்த மேட்டர்லாம் நா weekend leave'la வூட்டுக்கு போற அவசரத்துல எழுதலிங்கோ..

Wednesday, March 25, 2009

தேர்வுகள்..

இத்த போன பதிவோட (குறுக்கு புத்தி'in) தொடர்ச்சின்னு வெச்சுகோங்க..

7th semester'la ஒரு எக்ஸாம்'ல நடந்த அந்த கூத்துக்கே ஒரு பதிவுனா.., மீதி 7 semesters'ku எவ்ளோ பதிவு வருமோ தெர்ல.. அதபத்தி நாம ஏ கவலபடனும்.. அது இத்த படிக்கற மகா ஜனங்களோட பாடு.. சர்தானே..?

First semester'ku மட்டும் sem first day'la இருந்து போவோம்.. காலேஜ் ஆரம்பிக்கறதுக்கு முந்தின நாள் மாலை தான் பொட்டிய எல்லாம் கட்டிக்கிட்டு, பஸ் ஸ்டாப்'ல இருந்து ஆட்டோவ புடிச்சு ஹாஸ்டல் வந்து சேந்தேன். இங்க வந்து பாத்தா எல்லாம் ஒரே பீட்டருங்க.. அவனவன் கார்'ல வந்து இங்கிலீஷ்'ல பொளந்துட்டு இருந்தானுங்க. இங்கிலீஷ்னாவே எனக்கு குளிர் காய்ச்சல் வந்திடும்கரதால நமக்கு ஏத்த மக்காக்கல தேடிட்டு ரூம்க்கு வெளிய வந்தா, ஒருத்த என்ன பாத்து நேரா என் கிட்ட வந்து நின்னான்.. (அப்டின்னு தான் நியாபகம்). எது எப்டியோ நம்ம ஆள பாத்துட்டேன்.

அவன பாத்த ஒடனே நா கேட்ட முதல் கேள்வி என்னனு நெனைகிரிங்க..? பொதுவா எல்லாரும் பேர கேப்பாங்க.. ஆனா நான் கேட்டது, நீங்க தமிழ் medium தானேனு தான் ஆரம்பிச்சேன்.. பயபுள்ள இப்டி கேக்கவும், தல ரொம்ப குஸி ஆகிட்டாரு... ஏனா அவனும் என்ன மாதிரியே இங்கிலிஷோபோபியா வந்து அவதிப்பட்டு அலைஞ்சுட்டு இருந்தவன்.. அவ்ளோ தான், பேறே தெரியாம கண்டதும் நடப்பு பத்திகிச்சு (பையனா இருந்ததால..). இல்லனாலும் பத்திருக்கும், ஆனா வேறமாதிரி பத்திருக்கும்.

எப்டியோ ரெண்டு பேர் கொண்ட ஒரு குட்டி gang ஆரம்பிச்சாச்சு.. அப்புறம் ரெண்டு பேருமா சேந்து எங்கள மாதிரி வருங்காலத்துல உருப்படாம போகப்போற ஆளுங்கள தேடிபுடிச்சு gang'a டெவெலெப் பண்ணினோம். எங்களோட கொள்கை எல்லாம் போன பதிவுல சொன்னதுக்கு ஒத்து போச்சு (பிட் வெக்கரத தவிர). ஏனா, அதுக்கு ஆளுக்கு ஒரு டெக்னிக் வெச்சிருந்தானுங்க பாவிங்க.. எப்டியோ கடேசி வரைக்கும் புக்'a தொடாம நம்ம மானத்த காப்பாதினானுங்க.. அதுவரைக்கும் எல்லாரும் ரொம்ப நல்லவனுங்க எங்க பயபுள்ளைங்க..

எப்டியோ தக்கி முக்கி கிளாஸ் போக ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிருக்கும். பக்கத்து ரூம்ல இருந்து ஒருத்த வெட்டிய போட வந்தான். எங்க ரூம் சேர் எல்லாம் டிரெஸ்ஸ போட்டு fill பண்ணி வெச்சிருந்ததால, table மேல ஒக்கரலாம்'னு முடிவு பண்ணி அதுமேல இருந்த chemistry புக்'a நகுத்தி வெக்கறதுகாக எடுத்தான். ஆனா அது காலேஜ் ஆரம்பிச்ச புதுசுல அங்க வெச்சது. ஒருமாசமா தொடவே இல்லை. நல்லா table'la ஒட்டிகிச்சு. ரெண்டு மூணு நிமிஷம் போராடி புக்'கு சேதாரம் இல்லாம எப்டியோ பிச்சு எடுத்துட்டான். அவ்ளோ தான், அப்பவே எங்க கொள்கை புடிச்சுபோயி எங்க ஜோதில கலந்துட்டான்.

இது தான் எங்க gang உறுவான samll கதை. இதுக்கு அப்பறம் சில பல பேரு வந்து போனாலும், இவங்க மட்டும் தான் எங்க gang'in அடிப்படை உறுப்பினர்கள்.

காலேஜ் போனாலும், கக்கூஸ் போனாலும் ஒண்ணா தான் போவோம். எங்க 3 to 5 பேருக்கு காலை சாப்பாடு எப்போமே ஒரே தட்டுல தான்.. ஒருத்த தட்ட எடுத்துட்டு போவான். 15 , 17 இட்லி'a போட்டுட்டு வருவான். ஒண்ணா கும்மி அடிச்சுட்டு வேணும்னா ரெண்டாவது, மூணாவது ரவுண்டு போட்டு சாப்டுட்டு கிளாஸ்'கு போவோம். நாங்க கிளாஸ்'கு கெலம்பறதே ஒரு அலப்பறையான விஷயம்.

எங்க காலேஜ்'ல prayer எல்லாம் உண்டு. prayer'ku 5 min முன்னாடி ஒரு பெல் அடிப்பாங்க. அப்போ தான் நாங்க குளிச்சுட்டு வருவோம். அந்த 5 min'la டிரஸ் பண்ணிட்டு, முன்னாடி சொன்ன இட்லி எல்லாம் ஸ்வாஹா பண்ணிட்டு, காலேஜ் போய் சேரும்போது கண்டிப்பா கொறஞ்சது 15 min லேட் ஆகிருக்கும். ஆரம்ப நாட்கள்'a masters எல்லாம் எவ்ளவோ சொல்லி பாத்தாங்க. அப்புறம் ஒன்னும் முடியாம தண்ணி தெளிச்சு விட்டுடாங்க.

இப்டியே கூத்தடிச்சு இருக்கும் போதே first sem exams'um வந்திடுச்சு. பசங்க exams'ku முந்தின night'la தான் புதுசு புதுசா யோசிபானுங்க பாவிங்க.. இப்டித்தான், maths exam'ku முந்தின நாள் night'um வில்லங்கமா யோசிசானுங்க.. எதாச்சும் exam'la பாஸ் பண்ணுறத பத்தி யோசிச்சாலும் பரவால, ஆனா இவனுங்க யோசிச்சது cards வேலயாடுரத பத்தி. எனக்கு வேற எப்படி வெளையாடனும்'னு தெரியாதா, சரி எனக்கும் சொல்லி தாங்கடானு உக்காந்துட்டேன். அப்புறம் என்னத்த சொல்ல, அடுத்த நாள் பொழப்பு சிரிப்பா சிரிச்சிடுச்சு..

இதுக்கு நடுநடுவுல question paper லீக் ஆகிடுச்சுனு வேற அப்பப்போ கெளப்பி விடுவானுங்க. இப்டி தான், கடேசி எக்ஸாம் அன்னைக்கும் கெளப்பி விட்டானுங்க. 100 mark paper'la, 20 மார்க் 2 மார்க் question & 80 மார்க் 20 மார்க் question. பசங்க நாலு 20 மார்க் question'ayum சொல்லிடானுங்க.. எப்டியோ அது தான் கண்டிப்பா வரபோகுதுனு தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன சொல்லவா வேணும்.

ஆளுக்கு ஒரு book'a எடுத்து answer தேடி புடிச்சு பாத்தா, ஒவ்வொன்னும் மூணு நாலு பக்கத்துக்கு இருக்கு. நாலு question'ku 20 to 30 pages படிக்கணுமா..? படிப்பமா நாங்க.. அவனவன் calculator, hall ticket பின்னாடின்னு கெடச்ச பக்கமெல்லாம் எழுதறான். இதுல நெறைய ரிஸ்க் இருக்கு.. ஏனா எவனாச்சும் நம்ம calculator’a கடனா கேட்டா அம்பேல் தான்.. அதே மாதிரி, hall ticket'a யாராச்சும் செக் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதனால ஒரு அழகான white sheeta எடுத்து பளிச்னு எழுதி கொண்டு போயி கலக்கிட்டோம்'ல..
அன்னைக்கு சங்கத்துல மொதநாள் பேறே தெரியாம friend ஆனமே.. அவனுக்கு birthday வேற (அந்த பாப்பா பேரு மணிவேல்).. எக்ஸாம்'a நல்லபடியா முடிச்சுட்டு அவன வாழ்த்தி வகுன்தெடுத்துட்டு semester leave'ku ஊருக்கு போய்ட்டோம்.

அடுத்த நாள் பேப்பர்'a பாத்தா, அதுல anna univercity’la இருந்து மெசேஜ் பாஸ் பண்ணிருந்தாங்க.. மாணவ மணிகளே..! நீங்க காப்பி அடிச்சு எழுதுன மேட்டர் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.. ஒழுங்கு மரியாதையா அந்த எக்ஸாம்'a இன்னொரு தபா எழுதுங்கடானு போட்டிருந்துச்சு..

சரி.. புள்ள ஆச படுது.. நீ எத்தன தபா வெச்சாலும் நாங்க readymade'a பிட்'a ரெடி பண்ணி வெச்சிருக்கோம்.. நோ பிராப்ளம்'னு எழுதி முடிச்சோம். காலேஜ் லைப் புதுசுங்கரதால, இந்த first sem'la ஒன்னு ரெண்டு எக்ஸாம்'கு தான் பிட்டு வெச்சது. அடுத்த sem பாதில ரிசல்ட்'உம் வந்திச்சு.. மேல பண்ணிட்டு இருந்த கூத்துலையே தெரிஞ்சிருக்கும் ரிசல்ட் எப்படி வந்திருக்கும்'னு.. உழைப்புக்கு தகுந்த ஊதியம் correct'a கெடச்சுது..

அந்த birthday boy மணிவேல்'கு எல்லா paper'um ஊத்திகிச்சு.. எனக்கு கொஞ்சும் தேவலை.. ஒன்னுல பாஸ் பண்ணிட்டேன். அதுவும் சுத்தி போட்டாலும் வராத english paper'la.. அதான் comedy.. இதுனாலேயே அவன் கொஞ்சம் காண்டாயிட்டான் பாவம். இன்னொருத்தன் ரெண்டு'ல பாஸ். மீதி எல்லா உறுப்பினர்களும் 2 to 3 paper'la பாஸ் பண்ணிருந்தாங்க.. இது தான் எங்க first semester'oda மோஸ்ட் successful ஹிஸ்டரி..
(ஆமா.., இப்டி எல்லாம் எழுதி வெச்சா யாராச்சும் university'la போட்டுகுடுத்துட்டா..????)

Tuesday, March 24, 2009

குறுக்கு புத்தி..

இது நம்ம எல்லாம் பின்னி பெடலெடுத்த exams பத்தினது..

exams'na என்ன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வேப்பங்காய் தான்..
நாங்க எல்லாம் கிளாஸ் ரூம்'ல ரெஸ்ட் எடுக்க கூட first பெஞ்ச் பக்கம் ஒதுங்காத நல்லவங்க. ஏன்னா, ஒரு வேல நம்ம அங்க போயி, நல்லா படிச்சு அந்த பசங்களுக்கு கெட்ட பேர வாங்கி தந்துட கூடாதுல..? அதான்.
அதூம் இல்லாம, அந்த ஒரு semester'ku, ஏகப்பட்ட புக்ஸ்'ல ஆயிரகணக்கான pages'a படிச்சு அவங்க கேக்கற ஐம்பது அறுபது கேள்விகள்ல பத்து இருபாத செலக்ட் பண்ணி.. அதுல ஏழு எட்டு கேள்விகளுக்கு answer எழுதி.., இதெல்லாம் ஒரு பொழப்பா.. சும்மா கடுப்படிச்சுகிட்டு..
என்ன பொறுத்த வரைக்கும் semesters, exams'navay ஒரு கொள்கையோட தான் செயல்படுறது. எங்கள் கொள்கையின் சாராம்சம் என்னனா, எந்த கிலாஸ்கும் note'nu ஒன்ன கொண்டு போயி மாஸ்டர்'a கேவலப்படுத்திட கூடாது. ஏனா, குருவோட சாபம் பொல்லாதது. sem final மாடல் எக்ஸாம் வரைக்கும் கண்டிப்பா புக்'e வாங்க கூடாது. அப்புறம், யாராச்சு books'a வாங்கி xerox போட்டு பத்தரமா எடுத்து வெச்சுக்கணும். (arrears எழுத வேணும்ல.. அதுக்கு தான்.)

Exam ஆரம்ப்திச்சவொடனே, சில பல நல்ல white sheets'a வாங்கி பிட்டு பிட்டா கட் பண்ணி நோட்ஸ் எடுக்கணும். class'la நோட்ஸ் எடுத்தா மாஸ்டர்'a அவமதிச்சா மாதிரி. எக்ஸாம்'கு நோட்ஸ் எடுக்கட்டா, அது எக்ஸாம்'a அவமதிச்சா மாதிரி. So, நோட்ஸ் எடுத்துக்கணும். கொஞ்சும் descent'a சொன்னா, பிட் எடுத்துக்கணும்.

"பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர் மற்றெல்லாம்
புக் படித்து மாழாதவர்."

என்னோட ரொம்ப முக்கியமான கொள்கை அடுத்தவரை சார்ந்து செயல் ஆற்றாமை.
எவ்ளோ பிட் தேவ பட்டாலும் ஒண்டியா ஒக்காந்து அத்தனையும் எழுதிட்டு போனம்னா, எல்லா பிட்டும் நமதே.. வெற்றியும் நாமதே.., மாட்டுனா சிக்கலும் நமதே.. யாருக்கும் பதில் சொல்ல தேவ இல்ல பாருங்க..
எனக்கு ஓவியம் வரையர்த்துனா ரொம்ப புடிச்ச விசயம்கரதால micro tip pen ஒன்னு எப்போமே வெச்சிருப்ப. அது 2 in 1'a இந்த மாதிரி நேரத்துல பயன்படும். என்னோட 7'th செமஸ்டர்'ல ஒரு எக்ஸாம்'கு 28 bits எடுத்துட்டு போயிருந்தேன். (நம்ப முடியலையோ.. உண்மையாதான் சொல்றேன்..நம்புங்க..)
அது தான் அந்த செமஸ்டர்'oda final எக்ஸாம். பத்து மணி exam'ku அடிச்சு புடிச்சு எப்டியோ 10.15 ku போயிட்டேன். இதுக்கே வாத்தி கடுப்புல இருந்தாரு. எல்லா நல விசாரிப்பு, அர்ச்சனை எல்லாம் முடிஞ்சு, என்னோட documents'oda பத்திரமா போயி ஒக்காந்தா, நான் கொண்டு போன ஒண்ணுகூட அதுல கேக்கல. question பேப்பர எதாச்சும் மாத்தி குடுத்துடானுங்கலோனு doubt வந்திடுச்சு.. என்னோட விதிய நொந்துகிட்டு கொண்டு போன 56 பக்க பிட்ட வெச்சு answer சீட்'ல ஆறு பக்கத fill பண்ணிட்டு கெளம்பலாம்னு பாத்தா, எனக்கு முன்னாடி பேன்ட் போட்ட சனி ஒன்னு சப்பணம் போட்டு ஒக்காந்துட்டு இருந்துச்சு. அது என்னோட பிட்டையும் பாத்துடுச்சு.
ஒரு 15 to 17 sheets அவருகிட்ட மாட்டிகிச்சு. அதுல நா எழுத பயன்படுத்தினது 0.5mm micro tip pen. ,சுமாரா ஒரு 25 மார்க் answer'a 3.5 X 10 CM பேப்பர்'ல எழுதிருப்பேன். அவருக்கு வேற 45 to 50 வயசு இருக்கும். மனுஷ பாவம் நொந்து போய்ட்டாரு. கிட்ட வெச்சு பாத்தாரு, அப்புறம் கொஞ்சம் தள்ளி வெச்சு பாத்தாரு.. ம்ம்ஹும் ஒன்னும் தெரில. ஒரு வார்த்தைய கூட அவரால படிக்க முடியல..
மொதல்லையே கடுப்புல இருந்த மனுஷன் இப்போ ரொம்ப கடுப்பாயிட்டாரு. அப்புறம் என்ன.. ஊரே பாரு, நாடே பாருன்னு போலந்து கட்டிட்டாரு.
அப்போ தான் ஒரு தீர்கமான முடிவு ஒன்னு பண்ணினேன். என்னான்னு பாக்குறிங்களா..? கொஞ்சம் மாநஸ்தன்னா அடுத்த semester'ku படிச்சுட்டு வந்து exam எழுதி பாஸ் பண்ணி காட்டுறேன்னு நெனச்சிருப்பேன்.. ஆனா நாம அப்டி நெனைக்க முடியுமா.. அதனால, இனிமே பிட் வெச்சு எக்ஸாம் எழுதினா, எக்ஸாம் சீக்கிரம் முடிச்சாலும், எல்லாரும் கெலம்பதினதுக்கு அப்புறமாதான் கெளம்பனும்'னு.. அப்போ தானே எல்லா பேப்பரையும் பொறுமையா மாட்டிக்காம திருப்பி எடுத்துட்டு வர முடியும். கடந்த 8 semesters'la இந்த ஒன்னே ஒன்னு தான் கரும்புள்ளியா போச்சு.. ஆனா ஒன்னு, அதுல என்ன ஹிட்'னா.., அப்டி 6 பக்கத்த fill பண்ணிட்டு வந்த அந்த paper'layum நல்லபடியா பாஸ் பண்ணிட்டேன்.
இப்போ எதாச்சும் PG பண்ணலாம்னு இருக்கேன்.. அதுலயாச்சும் படிச்சு எக்ஸாம் எழுதனும்,னு யோசிச்சதால அந்த எண்ணம் நிலுவையில இருக்கு.. பாப்போம் கொள்கை என்ன பண்ணும்னு..

இப்படிக்கு பிட்டடித்து வீணாய் போகாதவர்கள் சங்கத்தின் கடேசி தொண்டன்..

Thursday, March 19, 2009

விருப்பங்கள் ஆயிரம்..

எனக்கு பிடித்தவற்றை அறிவதற்கான ஒரு பிளாஷ் பேக் தொடர்..
இங்கு நான் முதலில் அறிய விரும்புவது எனக்கு பிடித்த நிறம்..
இது என் முதல் பதிவு என்பதால் யாதேனும் தவறுகள் இருப்பின் மன்னிக்க..
என்னோட முதல் பதிவை என்னிடம் இருந்தே தொடங்குகிறேன்..

நான் பார்த்தவரை எல்லோருக்கும் எந்த ஒரு விசயத்திலும் எப்போதும் விருப்பு / வெறுப்பு இருந்துகொண்டு தான் இருக்கிறது.. இப்போது எனக்கு பிடிக்கும் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் சிறிது நேரத்திற்கு பிறகு பிடிக்காமல் போகலாம். இன்றேல், பிடிக்காத ஒன்று இப்போ பிடித்தும் போகலாம். ஆனால் யாருக்கும் எதையாவது ஒன்றை எப்போதும் பிடித்திருக்கும்..

எங்கே இருந்து என் புலம்பலை தொடங்குவதுனு தெரியாததால கொஞ்சம் தத்துவம் பேசி என் புலம்பலுக்கு பிள்ளையார் சுழி போட்டுட்டேன்..

சரி இப்போ மேட்டர்'கு வருவோம்..

இப்போ ஒருத்தர பாத்து உங்களுக்கு புடிச்ச இனிப்பு எதுன்னு கேட்டா, அவரு மனசு சிட்டில இருக்குற எல்லா லாலா கடையையும் சுத்திட்டு வந்து ஒரு ஸ்வீட் பேர சொல்லுவாரு..

ஹேய் குட்டி பாபா..! உனக்கு புடிச்ச கலர் என்ன'னா..?, அது ஸ்கூல்'அ சொல்லிக்குடுத்த கலர்'அ எல்லாம் யோசிச்சு பச்சையோ சிவப்போ, எதையாச்சும் ஒன்ன சொல்லி வெக்கும்.. செரிதானே..??

நா குட்டியா இருக்கறப்போ என்னையும் இப்டி யாராச்சும் கேட்டுடே இருப்பாங்க..
நீங்களா இருந்தா என்ன சொல்லிருபிங்கனு எனக்கு தெரியாது.. ஆனா என்ன அன்னைக்கு கேட்ட கேள்விக்கு இன்னைக்கும் பதில் தெரியாது. எனக்கு புடிச்சது என்ன கலர், என்ன படம்,எந்த நடிகை, எந்த இடம்.. Etc., எதுவும் தெரியாது.
எல்லாத்தையும் புடிக்கும்'னு சொல்ல முடியாட்டியும் எதையும் புடிக்கலை'னு சொல்லறதுஇல்லை..
உதாரணம்:, இப்போ நா ஒரு மொக்க படத்துக்கு (கடேசியா பாத்த மொக்க "வில்லு")போறேனா, படத்த ரசிக்க முடியலைனாலும், அத எவ்ளோ மொக்கையா எடுதிருகாங்க'னு தெரிஞ்சுக்கவாச்சும் முழு படத்தையும் பொறுமையா பாத்துட்டு வருவேன். ஆனா இந்த வில்லு'அ பாத்துட்டு வெளிய வந்து படத்த பத்தி என்னோட friend கிட்ட கதைய பத்தி பேசலாம்னு அவன தேடி புடிச்சு மேட்டர ஆரம்பிச்சா..... நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.. ஏனா அதுக்குள்ள எனக்கு கதை மறந்து போச்சு.. ஒரு மாசத்துக்கு மேல ஆகியும் இன்னும் நியாபகம் வரலை..

matter எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போய்டு இருக்கு..

இது வரைக்கும் எழுதுனத வெச்சு என்ன சொல்ல try பண்ணிட்டு இருக்கேன்'a, எனக்கு என்ன தான் புடிக்கும், புடிக்கலைன்னு ஒரு முடிவுக்கு வர முடியலை..
so, என்னோட முதல் முயற்சியா எனக்கு புடிச்ச color'a தேட ஆரம்பிச்சேன். இதுக்கு நா என்னோட சின்ன வயசு வரைக்கும் பிளாஷ் பேக் போயி தேடி பாத்தேன்.. எந்த எந்த டைம்'ல, என்ன என்ன கலர்கல அதிகமா use பண்ணினேன்'னு பாக்கயில ஒரு பிளாஷ் பேக் கதை ஆரம்பிச்சுச்சு..

புடிச்ச கலர்'கு ஒரு பிளாஷ் பேக்..!!!!! (ஐயோ ஐயோ..)

ரொம்ப சின்ன வயசுல என்ன கலர் அதிகம் use பண்ணினேன்னு நியாபகம் இல்லை.. ஆனா 6th'o 7th'o படிக்கும் போது எனக்கு painting'la மொதல்லையே இருந்த ஆர்வம் கொஞ்சும் அதிகம் ஆகிடுச்சு.அப்போ நான் வரைஞ்ச ஒரு ஓவியம் என்னோட ஒரு புது முயற்சி'னு தான் சொல்லணும். Bcaz, அப்போ நான் வரைய ட்ரை பண்ணின ஓவியம் ஒரு ஆஞ்சநேயர். ஆனா அது மேட்டர் இல்லை. அதா நான் வரைய use பண்ணினது black color ball point pen. வரஞ்சது பேப்பர்'ல இல்லை, ஒரு flex மாதிரியான ஒன்னு. இத ஏ சொல்றேனா, ஒருவேள எங்கயாச்சும் தப்பா வரஞ்சுட்டேனா அதா திருப்பி அழிச்சு வரைய முடியாது.so, first try'laye தப்பில்லாம வரஞ்சு ஆகணும். அதான் அந்த முயற்சியின் thrill. நெனச்ச மாதிரியே அத வரஞ்சும் முடிச்சேன். பனிரெண்டு, பதிமூணு வருஷம் கழிச்சும், இன்னும் அந்த ஓவியம் எங்க வீட்டு சுவத்துல தொங்கிட்டு இருக்கு.

அந்த ஓவியத்துல வெள்ளை, கருப்பு கலர்'a தவிர ஏதும் யூஸ் பண்ணலை. அப்போ என் மனசுல விழுந்த ஒரு பொறி என்னனா, " பல வண்ணங்கள கொட்டி வரையற ஓவியங்களை விட கருப்பு வண்ணத்தை மட்டுமே கொண்டு வரையப்படும் ஓவியத்திற்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாய் உணர்ந்தேன்.

எல்லோரும் துக்க நிறமாக,எதிர்ப்பை தெரிவிக்கும் நிறமாக கருதும் கருப்பில் உள்ள அந்த ஈர்ப்பை மிஹ ஆழமாக அப்போது என்னால் ரசிக்க முடிந்தது. இப்போதும் ஒரு geththu look வேணும்னா பலரும் கருப்பு நிறத்தை பயன்படுத்துவதை வெஹுவாக எங்கும் காண முடியும்.
உதாரணம்: scorpio car பல colors'la வந்தாலும், கருப்பு கலர் ச்கோர்பயோ ரோட்ல போனா கண்டிப்பா அதுக்கு ஒரு தனி geththu இருக்கும்.

மேல சொன்ன மாதிரி, கருப்புனா எல்லாரும் அத ஒரு துக்க நிகழ்ச்சிக்கு போகும்போது கருப்பு கலர் dress'a போட்டுட்டு போவாங்க. சிலர் எதுக்காச்சும் எதிர்ப்பு அல்லது அவங்க கண்டனத்த தெரிவிக்க கருப்பு கொடிய காட்டுவாங்க. அப்டியாபட்ட கருப்பு எனாக்கு சந்தோஷத்தை வாரித்தரும் வர்ணமாக மாறியது. அதுநாள் முதல் உலகின் பிற நிறங்களை விட கருப்பே என் கண்களை நிறைத்தன.

அப்டி காத்து கருப்பு சேந்து அடிக்காம, கருப்பு மட்டும் அடிச்சதுல ஒரு சந்தோஷம், நிம்மதி இருந்துச்சு. ஆனா, இங்க என்ன கொடுமைனா, எல்லாரையும் காத்து கருப்பு அடிக்கும்..இங்க கருப்ப நான் அடிச்சுட்டு இருக்கேன் (ஓவியமாக).

அப்போ, இப்போ இருக்கற மாதிரியே நல்ல வெயில் காலம். நான் குடும்பத்தோட ஈரோடு பரணி சில்க்ஸ்'ல துணி எடுக்க போனேன். எல்லாரும் எத எதையோ எடுத்தாங்க. எனக்கு ஒரு jeans எடுக்கணும்'னு ஆசை. என்ன தான் கருப்பு அடிசிருசே..
அதனால கருப்பு கலர்'ல ஒரு jeans எடுத்துட்டு வந்துட்டேன். அந்த வெயில்ல கருப்பு கலர்ல, அப்டி ஒரு கெட்டியான jeans'a போட்டுட்டு ஒருமணி நேரம் கூட இருக்கா முடியல.உள்ள எல்லாம் அவிஞ்சு போச்சு. கருப்பின் அருமையை என் ஓவியத்தில் விட அந்த வெயிலில் அறிந்தேன். அதுக்கு அப்புறம் collage'ku போற வரைக்கும் jeans'e போடலை.

இந்த ஓவியம் வரையும் முன், நான் சாதாரணமா, பென்சில்ல வரஞ்சு, schetch pen'la கலர் பண்ணுவேன். நல்லா வரைஞ்சாலும் அழிச்சு அழிச்சு வரையறதுல எனக்கு உடன்பாடு இல்ல.so, bollpoint pen'la வரைய ஆரம்பிச்சேன். இதுல என்ன சிக்கல்'na ரெண்டு நாள், மூணு நாள் கஷ்டப்பட்டு வரஞ்சு, கடேசி நிமிசத்துல எதாச்சும் தப்பு ஆச்சுனா அவ்ளோ தான். திருப்பி first இருந்து தான் வரையனும்.இந்த சவால் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.
அப்போல இருந்து எனக்கு படம் வரைய எந்த schetch pen'um தேவ படல.எனக்கு தேவ எல்லாம் ஒரு black pen மட்டும் தான்.அப்போது இருந்து என் உலகம் கருப்பாய் அமைந்தது.

பிளாஷ் பேக் முடிஞ்சு இப்போ வெளிய வந்து பாத்தா, அதுக்கு அப்புறம் நான் வரைந்த அனைத்து ஓவியங்களும் கருப்பு நிறத்தில் படைக்க பட்டதில் எனக்கு இப்போதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டு.
இப்போ நான் வைத்துள்ள ஆடைகளை 80% ஆடைகள் கருப்பு நிற ஆடைகள் தான். எல்லோரும் இழவு வீட்டிற்கு அணிந்து செல்லும் அந்த துக்க நிறம் என் வாழ்வின் வசந்த நிறமாக மாறிய அனுபவம் சொற்களால் சொல்ல முடியாதவை. வாரத்தின் 7 நாட்களை குறைந்தது 4 நாட்களுக்கு நான் அணியும் உடையின் நிறம் கருப்பாகவே இருக்கும். இப்போது வெயில் தொடங்கி விட்டாலும் முன்புபோல் கருப்பு ஆடை என்னை வருத்துவது இல்லை.

கருப்புக்கு இன்னும் சில பல பிளாஷ் பேக் மீதம் உள்ளது. அதை அடுத்த blog'இல் தொடருகிறேன்.

பிடித்தவற்றை அறிவதற்கான இந்த பிளாஷ் பேக்’ku இப்போதைக்கு ஒரு சின்ன
தொடரும்...


Thursday, March 5, 2009

எழுதுவது எல்லாம் எழுத்தல்ல..

எழுதுவது எல்லாம் எழுத்தல்ல..

அப்புறம் எதுக்கு எழுதிகிட்டு.. கெலம்பிரலாம்..