Wednesday, November 11, 2009

மூக்குத்தி எதுக்கு..

அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே..
மூக்கு குத்திக்கிறது எதுக்குயா..?


(ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட, பெருசா கொண்டை எல்லாம் போட்டுக்கிட்டு மூக்கு குத்தி, காதுல கடுக்கன் எல்லாம் போட்டு நடிச்சிருந்தாமாதிரி நியாபகம்..

சில படங்கள்ல மூக்கு குத்தி இருந்தாலும், பழைய படங்கள் பலதுலையும் பலரும் கடுக்கனோட நடிச்சிருக்காங்கள்ள..)

ஆனா இந்த காலத்துல நிறைய பேர் மூக்கு குத்திக்கிறதும் இல்லை,
ரெண்டாவது.., மூக்கு குத்திக்கிறதுக்கு பதிலா ஆர்டிஃபிசியலா 'டப்ஸ்' விக்கிறாங்க.. அத வாங்கி மாட்டிகிட்டா என்னனு நிறையப்பேர் நினைக்கிறாங்க..

ஏற்கனவே வாழை இலைக்கு பதிலா பிளாஸ்டிக் வாழை இலை, குங்குமத்துக்கு பதிலா ஸ்டிக்கர் பொட்டு, மாவிலை தோரணம்கூட பிளாஸ்டிக்ல வந்தாச்சு..

நல்லவேளையா விபூதி, திருமண்ணெல்லாம் இன்னும் பிளாஸ்டிக்ல வரல.. சரி, இப்போ இந்த மூக்குத்தி மேட்டருக்கு வருவோம்..

பெண்கள் மூக்கு குத்திக்கிரதுக்கு காரணங்களா நண்பர்கள் சிலர் அவர்களோட கருத்துக்களை சொன்னாங்க..

அதில் ஒருத்தர் அது அவசரத்துக்கு அடமானம் வைக்கரதுக்குனும், இன்னொருத்தர் அழகுக்காகவும்னும், இன்னொருத்தர் திருமணமானவர்கள் அணியும் பழக்கம் இருக்கும்னும், இன்னொருத்தர் அது ஒரு வித அக்குபங்சர் வைத்தியமுறை போன்றதும்னும் சொன்னாங்க.

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..

இனி மூக்கு, காது குத்திக்கொள்வது தொடர்பாக நான் இணையத்தில் படித்த தகவல்கள்..

பெண்களோட மூச்சு காத்துக்கு ஆண்களோட மூச்சுகாத்த விட பவர் அதிகம். சக்தி அதாவது ஸ்டேமினா அதிகம். அந்த மூச்சு காத்து முழுசா எதிர்ல இருக்குரவங்கமேல படக்கூடாது..

அதுனால மூக்குத்திங்கரத போட்டு, அதை கண்ட்ரோல்பண்ணி வெக்கிறாங்க.. அப்படி மூக்குத்திய ஒரிஜினலா தங்கத்துலையே போட்டுகிட்டதால ஆரோக்கியமா இருந்தாங்களாம்..
(தங்கத்துல வாங்க காசு இல்லாதவங்கள்ளாம் என்ன பண்ணனுஎல்லாம் விவகாரமா கேக்கப்பிடாதாக்கும்..)

இன்னைக்கு அதுக்கு பதிலா செயற்கை டப்ஸ் வந்திடுச்சு.. இந்த செயற்கை நகை மூக்குலையோ காதுலையோ போளிணிப்புடிச்சுகிட்டு(??) இருக்குமே தவிர, ஒரிஜினலோட பவர் இதுக்கு கிடையாது.. அதுமட்டுமில்லாம இந்த டூப்ளிகேட் நகை மூக்குலியோ, காதுலியோ நச்சுனு புடிச்சுகிட்டு இருக்குறதால, அங்க இரத்தஓட்டமும் தடைபட வாய்ப்பு இருக்கும்ல'னு கேட்டிருந்தாங்க..
(யாருக்காவது இந்தமாதிரி தொல்லைங்க இருக்காப்பா..)

அதெல்லாம் சரிதான்.. ஆரோக்கியம்ன்றது எல்லாருக்கும் பொதுதானே.. அப்ப ஏன் ஆம்பளைங்களும் காது குத்திக்கிறது இல்லை'னு சந்தேகம் கேட்டிருந்தாங்க..

ஆம்பளைங்களும் காது குத்திக்கிட்டுதான் இருந்தாங்க.. இந்ததலைமுறையிலும், நாமும் சின்ன கொழந்தைங்களா இருக்கும்போது, கோவிலுக்கு கூட்டிட்டு போய் மொட்டை அடிச்சு காது குத்திருப்பாங்களே.. நெனப்புல இருக்கா..

அதுக்கு அப்புறம்தான் அத்த கலட்டி போட்டுடுறோம்..

காது குத்துறது, மூக்கு குத்துரதெல்லாம் அந்த காலத்துலயே நம்ம பாட்டன் பூட்டனெல்லாம் அனுபவபூர்வமாவே சொன்ன அக்குபிரஷர் வைத்தியமாமா..

(நான் அக்கு பங்சர் தான் கேள்வி பட்டிருக்கேன்.. இதென்னையா அக்குபிரஷர்..)

இத 15 வருசங்களுக்கு முன்னால முரளிதர்'ங்கற ஈரோடு டாக்டர் அனுபவபூர்வமாவே சொல்லிருக்காராமா..
அவர்கிட்ட வைத்தியத்துக்கு கூட்டிட்டு வரப்பட்ட சின்ன புள்ளைங்க பலருக்கும் இருந்த ஒரே ஒரு பிராப்ளம் அடிக்கடி ஜன்னி வருதுங்கறதுதான்..

அனுபவசாலியான அந்த டாக்டர், அத்தனை குழந்தைகளுக்கும் முறைப்படி காது குத்தவெச்சாராமா..

அப்டிகுத்தவெச்சு, பின், அந்த குழந்தைங்கள அவரின் நேரடிப்பார்வையிலேயே வெச்சு சோதனையும் செஞ்சிருக்கார்..

ரிசல்ட் என்னாச்சு தெரியுமா..
அந்த குழந்தைகளுக்கு அதுக்கு அப்புறம் ஜன்னியே வரலையாம்..
போயே போச்.. இட்ஸ் கான்..!

இதனால்தான் காது, மூக்கஎல்லாம் குத்திக்கிராங்கலாமா..
(வேணும்னா கீழ இருக்குராமாதிரி ட்ரை பண்ணிபாருங்க.. ஏதாவது பலன் கிடைக்குதான்னு பாக்கலாம்..)

அதனால.., பழையன புகுதலும், புதியன கழிதலும் இந்த மூக்குத்தி மேட்டருக்கு நல்லதுனுதோனுது..
நீங்க என்ன நெனைக்குரிங்க..ம்ம்..

அப்புறம்.. இன்னொன்ன விட்டுட்டனே..

இந்த காது, மூக்கு எல்லாம் சரி.. நம்ம சினிமா ஹீரோக்கள் விளையாடின "அந்த" இடத்துல இப்போவெல்லாம் பலர் குத்திக்கிராங்களே, அது எதுக்கா இருக்கும்..
(கீழ இருக்குறா மாதிரி பயன்படுமோ..)