Wednesday, November 11, 2009

மூக்குத்தி எதுக்கு..

அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே..
மூக்கு குத்திக்கிறது எதுக்குயா..?


(ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட, பெருசா கொண்டை எல்லாம் போட்டுக்கிட்டு மூக்கு குத்தி, காதுல கடுக்கன் எல்லாம் போட்டு நடிச்சிருந்தாமாதிரி நியாபகம்..

சில படங்கள்ல மூக்கு குத்தி இருந்தாலும், பழைய படங்கள் பலதுலையும் பலரும் கடுக்கனோட நடிச்சிருக்காங்கள்ள..)

ஆனா இந்த காலத்துல நிறைய பேர் மூக்கு குத்திக்கிறதும் இல்லை,
ரெண்டாவது.., மூக்கு குத்திக்கிறதுக்கு பதிலா ஆர்டிஃபிசியலா 'டப்ஸ்' விக்கிறாங்க.. அத வாங்கி மாட்டிகிட்டா என்னனு நிறையப்பேர் நினைக்கிறாங்க..

ஏற்கனவே வாழை இலைக்கு பதிலா பிளாஸ்டிக் வாழை இலை, குங்குமத்துக்கு பதிலா ஸ்டிக்கர் பொட்டு, மாவிலை தோரணம்கூட பிளாஸ்டிக்ல வந்தாச்சு..

நல்லவேளையா விபூதி, திருமண்ணெல்லாம் இன்னும் பிளாஸ்டிக்ல வரல.. சரி, இப்போ இந்த மூக்குத்தி மேட்டருக்கு வருவோம்..

பெண்கள் மூக்கு குத்திக்கிரதுக்கு காரணங்களா நண்பர்கள் சிலர் அவர்களோட கருத்துக்களை சொன்னாங்க..

அதில் ஒருத்தர் அது அவசரத்துக்கு அடமானம் வைக்கரதுக்குனும், இன்னொருத்தர் அழகுக்காகவும்னும், இன்னொருத்தர் திருமணமானவர்கள் அணியும் பழக்கம் இருக்கும்னும், இன்னொருத்தர் அது ஒரு வித அக்குபங்சர் வைத்தியமுறை போன்றதும்னும் சொன்னாங்க.

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..

இனி மூக்கு, காது குத்திக்கொள்வது தொடர்பாக நான் இணையத்தில் படித்த தகவல்கள்..

பெண்களோட மூச்சு காத்துக்கு ஆண்களோட மூச்சுகாத்த விட பவர் அதிகம். சக்தி அதாவது ஸ்டேமினா அதிகம். அந்த மூச்சு காத்து முழுசா எதிர்ல இருக்குரவங்கமேல படக்கூடாது..

அதுனால மூக்குத்திங்கரத போட்டு, அதை கண்ட்ரோல்பண்ணி வெக்கிறாங்க.. அப்படி மூக்குத்திய ஒரிஜினலா தங்கத்துலையே போட்டுகிட்டதால ஆரோக்கியமா இருந்தாங்களாம்..
(தங்கத்துல வாங்க காசு இல்லாதவங்கள்ளாம் என்ன பண்ணனுஎல்லாம் விவகாரமா கேக்கப்பிடாதாக்கும்..)

இன்னைக்கு அதுக்கு பதிலா செயற்கை டப்ஸ் வந்திடுச்சு.. இந்த செயற்கை நகை மூக்குலையோ காதுலையோ போளிணிப்புடிச்சுகிட்டு(??) இருக்குமே தவிர, ஒரிஜினலோட பவர் இதுக்கு கிடையாது.. அதுமட்டுமில்லாம இந்த டூப்ளிகேட் நகை மூக்குலியோ, காதுலியோ நச்சுனு புடிச்சுகிட்டு இருக்குறதால, அங்க இரத்தஓட்டமும் தடைபட வாய்ப்பு இருக்கும்ல'னு கேட்டிருந்தாங்க..
(யாருக்காவது இந்தமாதிரி தொல்லைங்க இருக்காப்பா..)

அதெல்லாம் சரிதான்.. ஆரோக்கியம்ன்றது எல்லாருக்கும் பொதுதானே.. அப்ப ஏன் ஆம்பளைங்களும் காது குத்திக்கிறது இல்லை'னு சந்தேகம் கேட்டிருந்தாங்க..

ஆம்பளைங்களும் காது குத்திக்கிட்டுதான் இருந்தாங்க.. இந்ததலைமுறையிலும், நாமும் சின்ன கொழந்தைங்களா இருக்கும்போது, கோவிலுக்கு கூட்டிட்டு போய் மொட்டை அடிச்சு காது குத்திருப்பாங்களே.. நெனப்புல இருக்கா..

அதுக்கு அப்புறம்தான் அத்த கலட்டி போட்டுடுறோம்..

காது குத்துறது, மூக்கு குத்துரதெல்லாம் அந்த காலத்துலயே நம்ம பாட்டன் பூட்டனெல்லாம் அனுபவபூர்வமாவே சொன்ன அக்குபிரஷர் வைத்தியமாமா..

(நான் அக்கு பங்சர் தான் கேள்வி பட்டிருக்கேன்.. இதென்னையா அக்குபிரஷர்..)

இத 15 வருசங்களுக்கு முன்னால முரளிதர்'ங்கற ஈரோடு டாக்டர் அனுபவபூர்வமாவே சொல்லிருக்காராமா..
அவர்கிட்ட வைத்தியத்துக்கு கூட்டிட்டு வரப்பட்ட சின்ன புள்ளைங்க பலருக்கும் இருந்த ஒரே ஒரு பிராப்ளம் அடிக்கடி ஜன்னி வருதுங்கறதுதான்..

அனுபவசாலியான அந்த டாக்டர், அத்தனை குழந்தைகளுக்கும் முறைப்படி காது குத்தவெச்சாராமா..

அப்டிகுத்தவெச்சு, பின், அந்த குழந்தைங்கள அவரின் நேரடிப்பார்வையிலேயே வெச்சு சோதனையும் செஞ்சிருக்கார்..

ரிசல்ட் என்னாச்சு தெரியுமா..
அந்த குழந்தைகளுக்கு அதுக்கு அப்புறம் ஜன்னியே வரலையாம்..
போயே போச்.. இட்ஸ் கான்..!

இதனால்தான் காது, மூக்கஎல்லாம் குத்திக்கிராங்கலாமா..
(வேணும்னா கீழ இருக்குராமாதிரி ட்ரை பண்ணிபாருங்க.. ஏதாவது பலன் கிடைக்குதான்னு பாக்கலாம்..)

அதனால.., பழையன புகுதலும், புதியன கழிதலும் இந்த மூக்குத்தி மேட்டருக்கு நல்லதுனுதோனுது..
நீங்க என்ன நெனைக்குரிங்க..ம்ம்..

அப்புறம்.. இன்னொன்ன விட்டுட்டனே..

இந்த காது, மூக்கு எல்லாம் சரி.. நம்ம சினிமா ஹீரோக்கள் விளையாடின "அந்த" இடத்துல இப்போவெல்லாம் பலர் குத்திக்கிராங்களே, அது எதுக்கா இருக்கும்..
(கீழ இருக்குறா மாதிரி பயன்படுமோ..)



Wednesday, September 30, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 5..

போன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..
அடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..

மறுமணம் பற்றியது..

இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..

ஒரு ஆண், தன் மனைவி இறந்துவிட்டால், அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை எங்கள் ஜாதி சட்டதிட்டங்கள் தடுப்பதில்லை..

எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..

கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..

ஏற்கனவே கேஸ் நடக்கும்போது ஏழெட்டு வருடங்கள் சிறைவாசம் இருந்ததால், சீக்கிரம் விடுவிக்கப்பட்டும்விட்டார்.. வெளியில் வந்து ஒருவருடத்துக்குள்ளாகவே சமீபத்தில் +12 முடித்த ஒரு உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்..

இந்த மறுமணத்தை எதிர்க்காத ஜாதி, அடுத்து சொல்லப்போகும் மருமணத்தை எதிர்ப்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

அப்படி அவர்கள் எதிர்த்த மறுமணம், எங்க ஊர் பூசாரி ஒருவரின் மகளான, கணவனை இழந்த இளம் பெண் ஒருத்திக்கு நிகழ்ந்தது..

அந்த பெண்ணுக்கு மறுமண ஏற்பாடு முடிந்ததும் ஊர்க்கூட்டம் போட்டு எடுத்த முதல் முடிவு, அவ்வாறு அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..

இவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..

பூசாரி பொறுப்பு போனால் என்ன என்றுதானே நினைக்குரிங்க..
அது அவர்களின் பரம்பரை உரிமை அதுஇதுன்னு ஒரு ட்ராக்..

அதுவும் இல்லாம.. இப்டி ஜாதியைவிட்டு தள்ளி வைக்கப்பட்டவர்களின் எந்த விசேசத்துக்கும் ஊர் / ஜாதி நாட்டாண்மைகள் செல்லமாட்டார்கள்..

எங்கள் ஜாதியில் ஒருவரின் திருமணத்திற்கு மாப்பிள்ளை / பெண் கொடுப்பதெனில், அக்குடும்பத்தாரின் திருமணத்திற்கு அவர்கள் ஊரின் ஜாதி நாட்டாண்மை(கள்) வந்து சம்மதம் தெரிவிக்கவேண்டும்.. அப்படி அந்த நாட்டாண்மை வர மறுக்கும் குடும்பத்துக்கு வேறு எவரும் மாப்பிள்ளை / பெண் கொடுக்கமாட்டார்கள்..

இதனாலேயே எந்த ஒரு தலைமுறையிலும் ஜாதிவிட்டு ஜாதி திருமணமோ, பெண்ணுக்கு மறுமணமோ செய்ய ஊர் / ஜாதிமக்கள் தயங்குகிறார்கள்..
அப்படி செய்யும் பட்சத்தில், அக்குடும்பத்தின் வேறு எவருக்கும் எக்காலகட்டத்திலும் எங்கள் ஜாதியில் இருந்து எவரும் பெண் / மாப்பிளை எடுக்கவோ கொடுக்கவோ முன்வரமாட்டார்கள்..

ஜாதியில் இருந்து ஒதுக்கியபின் ஊருக்குள்வாழ்வது மிக மிக கடினம்.. காரணம் அது கிராமம்.. அடித்தாலும் பிடித்தாலும் நாளை அவர்களின் முகத்தில்தான் விழித்தாகவேண்டும்..

இந்த சட்டதிட்டங்கள் / வழக்கம் பரம்பரை பரம்பரையா அவர்களின் இரத்தத்தில் ஊறியும்விட்டதால், இவை அவர்களுக்கு பெரியவிசையமாய் தெரியவும் இல்லை..

ஆனாலும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளது போன்ற மக்களின் சில தவறான நடவடிக்கைகளை தடுக்க இவர்களின் ஜாதிகட்டுப்பாட்டின் சில சட்டதிட்டங்கள் நல்லதுசெய்வனவாகத்தான் இருக்கிறதோவென்றும் நினைக்கத்தோன்றுகிறது..

காரணம் ஜாதிக்கட்டுப்பாட்டுக்கு பயந்தாவது தவறான பாதையில்செல்ல மக்கள் பயப்பட்டு தவறுகள்குறையுமோஎன்று தோன்றுகிறது..

எதிலும் நல்லது கெட்டது உள்ளதுபோல், எங்கள் ஜாதி கட்டுப்பாடுகளிலும், சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..

சரி.. இந்தளவுக்கு எங்க ஊற டேமேஜ் பண்ணினதுபோதும்னு நினைக்கிறேன்..

அடுத்தமுறை வேறுவிதமான இடுகையுடம் சந்திக்கிறேன்..


Monday, September 21, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 4..

வணக்கம் நண்பர்களே..
சென்ற முறையாவது 27 நாட்களுக்கு பிறகுவந்தேன்..
இந்த முறை 32 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் வர முடிந்தது..

இடையில் ஒருவாரகாலம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியபோது வலைச்சரம்வந்து வாழ்த்தி கருத்துக்களும் ஆதரவும் தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

இந்த பகுதியில் ஊரில் சமீபத்தில் நடந்த சில வித்தியாசமான காதல் ஜோடிகளின் கதைகளை கூறுவதாக கூறியிருந்தேன்..

முதல் காதல் ஜோடி "என்ன ஊருடா சாமீய்ய்ய் 2.."ல் கூறப்பட்டிருந்த ஒரு மாநில கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேறு ஜாதி கவுன்சிலரை எங்கள் ஜாதியை சேர்ந்த பெண் காதலித்து மணந்த கதை..

அதில், இப்படி சாத்திவிட்டு ஜாதி திருமணம் செய்தமையால் அந்த ஜோடி ஊரைவிட்டு / ஜாதியை விட்டு தள்ளி வைக்கப்பட்டது பற்றி கூறியிருந்தேன்....
(மேலதிக விபரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக்கவும்..)

$$$$$$


அடுத்து என் பள்ளி தோழன் ஒருவனின் கதை..

இவன் எட்டாம் வகுப்புவரை என்னோடு படித்தவன்..
அதன்பின் எங்கள் குலத்தொழிலான நெசவுத்தொழிலில் மூழ்கடிக்கப்பட்டான்..

பெரும்பாலும் எங்கள் கிராம இளைஞர் இளைஞிகளின் வரலாறு இப்படி பள்ளிப்படிப்பு முடிந்ததும் நெசவுத்தொழில் தள்ளப்பட்டதாகத்தான் இருக்கும்..

இப்போதுதான் கொஞ்சம் முன்னேறி ஒரு சில ஜீவன்கள் தப்பித்தவறி பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிசென்று பட்டதாரிகளாக உலாவருகின்றனர்..

என் பக்கத்துவீட்டு பெண் ஒருவள் அருகிலுள்ள டவுனுக்கு தினமும் சென்று படித்து வந்துள்ளாள்.. இவனோ வீட்டில் நெசவுத்தொழில் செய்பவன்.. இவன் வீடும் அந்த பெண்ணின் வீடும் நேரெதிர் திசையில் உள்ளன..

இவனுக்கு இந்த வீட்டுப்பக்கம் வரும்பழக்கமும் இல்லை.. இந்தபக்கம் இவனுக்கு ஜோலியும் இல்லை..
நடுவில் எங்கு பற்றிக்கொண்டதோ தெரியவில்லை, ஒரு நாள் தொலைப்பேசி அழைப்புவந்தது..

மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..

நானும், சரி விடுடா.. சாதிவிட்டு ஜாதில இழுத்துட்டு போனாதானே பெருசுங்க பிரச்சனை பண்ணும்.. நம்மாளு உசாரா நம்ம ஜாதி பொண்ணையே கரெக்ட் பண்ணிட்டான்ல.. பிரச்சனை இல்லைன்னு சொன்னேன்..

அதற்கு அவர்கள் சொன்னது, அவன் இழுத்துட்டுப்போன பொண்ணு அவனுக்கு தங்கச்சிமுறை வேணும்னு..

எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை.. வர வர நம்ம இளைய தலைமுறை மக்களுக்கு ஊருக்குள்ள இருக்குறவங்களோட உறவுமுறைகூட என்னான்னு தெரியாத அளவுக்கு இடைவெளி அதிகமாகிடுச்சோனு சந்தேகத்தோட கெளம்பிவந்துட்டேன்..

இவனுகளோட இந்தமாதிரி காதலுக்கு எங்க ஊரு பெருசங்களோட சட்டதிட்டமே பரவாலையோனு யோசிக்க வெச்சுட்டான் பயபுள்ள..

$$$$$$


அடுத்து அவனோட பெரியப்பா மகன் பண்ணின கூத்து..

மேல சொன்னவனும், இவனும் ஒரே காலகட்டத்துலதான் கூட்டு சேந்துட்டு லவ்விருப்பங்கபோல..

அவன் வேலைய முடிச்ச அடுத்த கொஞ்ச நாள்ல இவன் ஒரு பொண்ணோட காணாம போய்ட்டான்..

விசாரிச்சதுல அவன் இழுத்துட்டு போனது வேற ஜாதி பொண்ணு..
ஊரைவிட்டு போயி பக்கத்து ஊரு போலிஸ் ஸ்டேசன்ல அடைக்கலமாகி எஸ்கேப் ஆகிட்டாங்க..

அப்புறம் என்னாச்சுனு தெரியலை.. ஒருவாரம் கழிச்சு பொண்ணுமட்டும் ஊர் திரும்புச்சு.. பையன் இன்னைக்கு வரைக்கும் ஆள காணோம்.. கேட்டா தலை மறைவா இருக்கறதா சொல்றாங்க..

தலைமறைவா இருக்கானா.. தலையவே எடுத்தாச்சானு யாருக்குதெரியும்னு தெரியலை..

$$$$$$


அடுத்து என்னோட ரெண்டு வயசு மூத்த பையன் ஒருத்தனோட கதை..

இவனும் கொஞ்சம் உசார் பார்ட்டிதான்.. தன்னோட ஜாதியிலையே கரெக்ட் பண்ணிருக்கான்..

ரெண்டு பேரும் வழக்கம்போல ஒருநாள் காணாம போய்ட்டாங்க..
பொண்ணோட வீட்டுக்கு பயந்து பையன் குடும்பமே ஊரைவிட்டு தலைமறைவாகிட்டாங்க..

பொண்ணோட அப்பன்காரன் பையன் சொந்தக்காரங்களான மேல சொன்ன தங்கச்சிய கட்டின பையன் வீட்ல போய் கேட்டதுக்கு, நீயே பொண்ண அனுப்பி வெச்சுட்டு இங்கவந்து நல்லவன் மாதிரி கேக்குரியானு ஒரு பிட்டபோட.. இவங்க திருப்பி ஒரு ஆயுதத்தபோட கைகலப்பாகி போலிஸ் கேசாகிடுச்சு..

விடிஞ்சா பொண்ணு வீட்ல, புதுசா கட்டிருக்கற வீட்டுக்கு கிரகப்பிரவேசம்..
பொண்ணோட அப்பாவும் மனச தேத்திகிட்டு என்னோட பொண்ணு செத்துபோய்ட்டதா நெனச்சுக்குறேன்.. இனி எனக்கு பொண்ணே இல்லைன்னு நெனச்சுகிட்டு கிரகப்பிரவேசத்த நல்லா பண்ணுவேனுட்டு வைராக்கியத்தோட பண்ணிமுடிச்சாறு..

அன்னைக்கு சாயந்திரம் என்ன நெனச்சாரோ தெரியலை, திடீர்னு விசத்த குடிச்சுட்டாறு.. அப்புறம் அங்க இங்கனு கொண்டுபோய் காப்பாத்திட்டாங்க..

ஆனா.. இப்டி இருபது இருபத்திரெண்டு வருஷம் ஆசை ஆசையா வளத்த பெத்தவங்க மனச நோகடிச்சு அவங்க எப்டித்தான் நல்லா இருப்பாங்களோ தெரியலை..

பெத்தவங்களும் அப்டித்தான்.. அவங்க பசங்க கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து அவ்ளோபாசமா வளக்குற அவங்க, கல்யாணம்னு வந்தா மட்டும் இப்டி ஒரேயடியா அடம் புடிக்கறது ஏன்னு புரியலை..

$$$$$$


என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..

நம்ம மனசு பயபுள்ளைக்கு எப்போமே நல்லதவிட கெட்டத துருவி துருவி பாக்குரதுலதான் பழக்கம் அதிகம்.. என்ன பண்ண..

$$$$$$


சரி.. அடுத்து.. இதுல ரெண்டு பேருமே எங்க ஜாதி காரங்க இல்லைனாலும், எங்க ஊர்ல நடந்த காதல்கதைன்றதால சொல்றேன்..


பொண்ணுவீடும் பையன் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை.. எதிரெதிர் வீடுதாங்க..
கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..

காரணம், ரெண்டுபேத்துக்கும் பத்திகிச்சு..

பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..

ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. பொண்டாட்டிய அவ புது காதலன்கூட சேர்க்கவிடமாட்டேனு அடம்புடிக்குறான்..

ஆமாங்க.. இந்த பையன் எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கு ரூட்டுபோட்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. அந்த பொண்ணுக்கு ரெண்டு கொழந்தைங்கவேற இருக்கு..

அப்டி இப்டின்னு பிரச்சனைய முடிச்சு எனக்கு அந்த கொழந்தைங்களும் வேணாம் புருசனும் வேணாம்னு தூக்கி போட்டுட்டு எதிர்வீட்டு காதலனோட புருஷன் வீட்டுக்கு எதிர் வீட்லயே காதலனோட குடித்தனம் நடத்திட்டு இருக்கா அந்த பொண்ணு..

என்ன ஊருடா சாமீய்ய்ய்..


Wednesday, August 19, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 3..

27 நாட்களுக்கு பிறகு “என்ன ஊருடா சாமீய்ய்ய்..”ன் மூன்றாம் பகுதி..

ஊரிலுள்ள இசுலாமிய, கிறித்தவ மக்களுடன் கொண்டுள்ள சுமுகமான நட்பு..

சென்ற பகுதியில் சொன்னாமாதிரி இவர்களின் ஜாதி மக்களுக்குள்தான் இப்டிப்பட்ட கட்டுப்பாடு..

அடுத்த ஜாதி, மதத்தினருடன் எப்பவுமே தோழமையுடன்தான் உள்ளனர்..
வருடா வருடம் ஆயுத பூஜைக்கு அடுத்தநாள் சாமி ஊர்வலம் நடத்துவார்கள்..

அதில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் அவர்களின் சாமிக்கான பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜைசெய்துகொடுப்பர்..

இப்படி ஒவ்வொரு வீதியாக செல்லும்போது சென்ற இடுகையில் சொன்னவாறு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு பூஜை செய்து தரமாட்டார்கள்..

ஊரே கூடியுள்ள ஒரு ஊர்ப்பொது விழாவில் இப்படி செய்வது அவ்வீட்டாருக்கு உண்மையில் ஒரு பெருத்த அவமானம்தான்..

ஆனால்.. எங்கள் ஊரில் பலவருடங்களாக சில இசுலாமிய மதத்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர்..

எங்கள் ஊர்க்காரர்கள் எவருமே அவர்களுடன் எப்போதும் ஒற்றுமையுடந்தான் உள்ளனர்..

இதிலும் ஒருபெரிய ஆச்சரியம்.. அந்த இசுலாமிய குடும்பத்தாரும் இந்த சாமி ஊர்வலத்தின் போது நம் இந்துகடவுளுக்கு படையலிட்டு வணங்குவர்..

இந்த ஜாதிக்காரர்களும் எவ்வித மறுப்புமின்றி அவர்களுக்கு பூஜைசெய்து கொடுக்கின்றனர்..

இந்தநிகழ்வு / இந்த ஒற்றுமை / இந்த புரிந்துணர்வு உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோசமான ஒன்று..


இந்த சந்தோசம் அந்நிய மதத்தினர் எம்மத கடவுளை வணங்குவதால் இல்லை..

எம்மக்களின் சாதிமதம் கடந்த புரிந்துணர்விற்காக..


எங்கள் ஊரின் அருகாமை கிராமத்தில் கிறித்துவர்கள் பலர் வசிக்கின்றனர்..
1955+'களில் அவர்களின் வீட்டில் நீர் அருந்துவது மற்றும் அவர்கள் இவர்களின் வீட்டில் நீர் அருந்துவது , வீட்டுக்குள் நுழைவது போன்றவை கூட விரும்பத்தகாததாக கருதப்பட்டு வந்துள்ளது..

இரு மதத்தினரும் ஒன்றாக பேசியும் நட்புபாராட்டியும் இருந்துவந்தாலும் அவர்களின் வீட்டுக்கு செல்வது.. அவர்களை தங்களின் வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற பழக்கங்கள் குறைவு / இல்லை..

எல்லா நட்பும் வீட்டு வாசலுடன் முடிந்தது..

ஆனால்..1970 / 1980+ களில் நல்ல முன்னேற்றம்..

காரணம் கிராமத்தின் ஆரம்ப பள்ளிகளில் கிறித்துவ ஆசிரியர்கள்..

ஆரம்பப்பள்ளியில் ஒருவகுப்பிலேனும் அவர்களிடம் படித்தாகவேண்டும்..

மேலும் டியூசனும் அவர்களிடம் செல்லும்போது அவர்களின் வீடுகளில் இந்த குழந்தைகள் புழங்க நேரிட்டது..

காலப்போக்கில் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் யதார்த்தத்தை உணர ஆரமித்துவிட்டார்கள் போலும்.. இப்போது அவர்களையும் சாதாரணமாக வீட்டுக்குள் அனுமதிக்கின்றனர்..

இப்போது இம்மூன்று மதத்தவருமே அன்புடனும் நட்புடனும் நல்ல புரிந்துணர்வுடனும் இருந்துவந்தாலும், "மதம் மாறுவதால் யாருக்கு லாபம்..?" என்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளதைபோல் அருகாமையில் வாழும் கிறித்துவர்கள் எம்மக்களின் வறுமையை ஆயுதமாகக்கொண்டு இந்துக்களை கிறித்துவர்களாக மதம்மாற்ற முனைந்தது கொஞ்சம் வருத்தப்படவைத்த செயல்தான்..

இந்த இடுகைமுழுதும் என்மக்களின் பார்வையில் மற்ற மதத்தவருடன் இவர்களின் புரிந்துணர்வே..

ஆனால் இன்னும் இவர்கள் எந்த சர்ச்சுக்கோ மசூதிக்கோ சென்று வழிபாடுநடத்தி நான் கண்டதில்லை..

(வீடுவரை அனுமதிக்க பழகவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது.. )

(மேலும், இப்படி அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடாமை என்பது பொதுவாகவே உலகின் எல்லா பகுதிகளுக்கும், எல்லா மதத்தவருக்குமே பொருந்துமென்றே நினைக்கிறேன்..

பெரும்பாலும் யாரும் அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடுவதில்லை.. ஒன்றிரண்டு யதார்த்தத்தை உணர்ந்த ஆத்மாக்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்..)

காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் (மட்டுமல்ல, உலகில் பலரும்) அப்படி சென்று வழிபாடுநடத்தும் அளவுக்கு இன்னும் பக்குவம் அடையவில்லைஎன்பதே யதார்த்தம்..

மிக நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன்..
கருத்தில் ஏதும் பிழை இருப்பின் பொறுமையுடன் அன்பாய் சுட்டிக்காட்டவும்..


இந்த இடுகையில் காதல் ஜோடிகளைபற்றியும் எழுதுவதாய் கூறியிருந்தேன்..
இந்தமுறை இங்கு எழுதமுடியவில்லை..
அடுத்த பகுதியில் அவர்களைப்பற்றி எழுதுகிறேன்..

நன்றி..


Friday, August 7, 2009

LOGOFF செய்யப்படுகிறது..



வணக்கம் நண்பர்களே..

கொஞ்சம் அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக தற்காலிகமாக காலவரையற்ற LOG OFF செய்துகொள்கிறேன்..
(ஷட்டவுன் செய்யவில்லைபா.. ஒன்லி LOG OFF..)

விரைவில் திரும்புகிறேன்..

நன்றி..


Thursday, July 23, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 2..

இந்த தொடர் இடுகையின் முதல் பகுதிக்கு இங்கே செல்லவும்..

2. பெண்களுக்கான வினோத சட்டதிட்டங்கள்..

உலக வழக்கப்படி.. இங்கயும் பெண்களுக்கான சட்டங்கள் கொஞ்சம் மாதிரியானவைதான்.. என்னபண்ண, பொறந்த ஊராப்போச்சே.. சொல்லிதானே ஆகணும்..

எங்க ஊரு கட்டுப்பாட்டின்படி பெண்கள் மறுதிருமணம் / இரண்டாவது திருமணம் செய்துகொள்ளமுடியாது.. இளம் வயதிலேயே கணவன் இறந்துவிட்டாலும் அப்பெண் கடேசிவரைக்கும் விதவையாகத்தான் வாழ்ந்தாகவேண்டும்..

ஏன்.. கட்டுப்பாட்டைமீறி திருமணம் செய்துகொண்டால் என்னான்னு தானே கேக்குறிங்க.. அப்படிசெய்துகொண்டால் பெண்ணுடன் சேர்த்து மொத்த குடும்பமுமே ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுவர்..

எங்க ஊரில், கோவில் பூசாரி ஒருவரின் மகளுக்கு இப்படி மறுதிருமணம் முடித்தமையால், பூசாரிபதவி பறிக்கப்பட்டு சாதியில் இருந்து தள்ளிவைக்கப்பட்டனர் என்பது ஊரின் பொன்னான வரலாற்று செய்திகளில் ஒன்று..

ஏன்.. சாதியில் இருந்து, ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டால் என்ன.. வாழமுடியாதானு கேக்குறிங்களா..?

கிராமங்களில், சொந்த பந்தங்கள் இல்லாமல் ஊருக்குள் தனிமையில் வாழ்வது மிகக்கடினம்..

அதேபோல்தான் சாதிவிட்டு வேறு சாதியில் மணமுடிக்கும் மணமக்களின் குடும்பங்களும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுவர்.. இதில் அப்பெண்ணின் குடும்பத்தார் பஞ்சாயத்தார் முன்னிலையில் தவறுக்கு மன்னிப்புகோரினால் அவர்கள் மன்னிக்கப்பட்டு, மணமகனுடன் சேர்த்து பெண் மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவாள்..
(என்ன மக்கா எப்படி இருக்கு.. )

சில வருடங்களுக்கு முன், எங்கள் ஊரைச்சேர்ந்த ஒரு பெண் வேறு சாதியை சேர்ந்த பையனை திருமணம் செய்துகொண்டதால், (பெற்றோர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அவர்களை தவிர்த்து) கணவனுடன் சேர்த்து பெண் மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட வரலாறும் எங்கள் ஊரில் உண்டு..

இத்தனைக்கும் அப்படி தள்ளிவைக்கப்பட்ட காலகட்டத்தில் அந்த பையன் அரசியல் கட்சியின் சார்பாக வெற்றிபெற்று "கவுன்சிலர்" பதவியில் இருந்த ஒருவர்.. இப்படி தங்கள் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டதால்வேறு சாதியை சேர்ந்த கவுன்சிலரையே ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் நாட்டாண்மைகளின் சட்டம் எவ்வளவு சூப்பரானது..

பெண்ணின் குடும்பத்தார் பஞ்சாயத்தில் மன்னிப்புகோறியமையால் அவர்கள் மன்னிக்கப்பட்டு மணமக்கள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டனர்..

இந்த சம்பவத்திற்குப்பின், கடேசியாக நடந்த "கவுன்சிலர்" தேர்தலில் இம்முறை அந்த பெண் அவரின் கணவன் சார்ந்துள்ள அந்த அரசியல் கட்சியின் சார்பாக கணவனின் துணையுடன் பங்கேற்று வெற்றியும் பெற்றுவிட்டார்

இப்போது சாதியில் இருந்து / ஊரைவிட்டு தள்ளிவைக்கப்பட்ட தங்கள் ஊரைச்சேர்ந்த பெண்ணே எங்கள் ஊருக்கு கவுன்சிலராக உள்ளார்.. (நல்லா இருக்குல்ல..)

பெண்களுக்கு உண்டான இந்த கட்டுபாடுகள் ஆண்களுக்கும் உண்டோ என்னவோ தெரியலை..

ஆண்களுக்கு எதிரானவை என்றாலே அச்சட்டங்கள் இருட்டினில் கண்ட கருப்புத்திரையாய் காணாமல் போய்விடுகின்றன..

எங்கள் ஊரில் பெண்களே இந்த கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாலே அவற்றை இங்கு கூறுகிறேன்..

அடுத்த இடுகையில், இப்படி சாதியை கொண்டாடும் எம்மக்கள் ஊரிலுள்ள இசுலாமிய மக்களுடன் கொண்டுள்ள சுமுகமான நட்பு.. மற்றும்

கடந்த ஆறு மாதங்களில் யெஸ்ஸான ஏழுக்கும் அதிகமான காதல் ஜோடிகளின் சாதனைகள்..

இவற்றில் சில, குழப்பமான உறவுமுறைகளுடன் கூடிய ஜோடிகள் என்பதாலும், சிலர் என்னுடைய பள்ளி தோழர்கள் என்பதாலும் சிறப்புபெறுகின்றனர்..


Saturday, July 18, 2009

சுவாரசிய வலைப்பதிவு விருது..



வலைப்பதிவு உலகை சுவாரஸ்ய படுத்தவும், பதிவர்களை உட்சாகப்படுத்தவும், பல அறிமுகமில்லாத பதிவர்களை பலரும் அறிந்துகொள்ளவும் திரு. செந்தழல் ரவி அவர்கள் ''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' அறிமுகப்படுத்தி, சுவாரசிய வலைப்பதிவர்கள் ஆறு பேருக்கு அந்த விருதினை வழங்கியும் இருக்கிறார்.. அவருக்கு என் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

"மனவிலாசம் நவாஸுதீனிடம்" விருது பெற்ற நண்பர் "பிரியமுடன்.........வசந்த்" அவர்கள் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்..
அவருக்கு என் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.

விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும். மேலும், இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டுக்கொண்டு, தங்களுக்கு விருது வழங்கியவரின் இணைப்பையும் கொடுக்கவேண்டும் (என்பது விதி)..


இப்படி ஒரு விருதினை ஆறுபேருக்குமட்டும் கொடுப்பதென்பது மிகக்கடினமான ஒன்று..

இப்பதிவுலகில் ஒவ்வொருவருமே ஏதாவது ஒருவகையில் (அவர்களைப்பொறுத்து) தங்களது பிளாக்கை சுவாரசியத்துடனேயே நடத்திக்கொண்டிருப்பர்..

யாரும் யாரையும் குறைத்துமதிப்பிடமுடியாது..

எனக்கு தெரிந்த அனைத்து பதிவர்களுக்கும் இவ்விருதினை வழங்க ஆவலாய் இருப்பினும், அப்படி நான் ஒருவனே அனைவருக்கும் இவ்விருதினை வழங்கிவிட்டால், என்னிடமிருந்து விருதுபெற்றவர்களிடமிருந்து விருதுபெற மிகச்சிலரைத்தவிர யாரும் இருக்கமாட்டார்கள் என்ற பொது சிந்தனையோடும், வசந்தின் விதி எண் "05772982044752304698"ன்படி நான் இந்த விருதினை ஆறுபேருக்குமேல் கொடுக்கமுடியாது என்பதாலும், கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் ஆறுபேருக்கு இவ்விருதினை வழங்குகிறேன்..

(அதற்குமுன்பு உங்களின் அனுமதியின்றி உங்கள் புரோபைல் படங்களை டேமேஜியமைக்கு மன்னிக்கவும் நண்பர்களே..)




விருதினை பெறுபவர்கள்..

1. Will To Live RAMYA

2. சூரியன் தினேஷ்

3. நான் நானாக...... விக்னேஷ்வரி

4. வால்பையன் அருண்

5. ரசனைக்காரி... Rajeswari

6. அப்பாவி முரு

இவர்கள் ஆறுபேருமே இவ்விருதுக்கு மிகப்பொருத்தமானவர்கள் என்பதில் எனக்கு எவ்வகையிலும் சந்தேகமில்லை....

இவர்களில் பலர் எனக்கு வலைப்பதிவுலக சீனியர்களும்கூட..

அதிலும் "Will To Live" RAMYA அவர்கள் எனக்கு ஆரம்பகாலம் முதல் ஊக்கப்படுத்திவருபவர்..

இவ்விடத்தில் உண்மையில் அவருக்கு ஒரு பெரிய நன்றி சொல்லி இவ்விருதினை வழங்குவதில் நிறைய நிறைய நிறைய்ய்ய்ய்ய்ய பெருமைப்படுகிறேன்..
நன்றி ரம்யா அக்கா..

மற்ற அனைவரின் இடுகைகளையுமே ஓரளவிற்கு தவறாமல் படித்துவருகிறேன்..
சிலசமயம் வேலைப்பளுவின் காரணமாக பின்னூட்ட இயலாமல்போனாலும் குறைந்தபட்சம் அவர்களின் இடுகைகள் படிக்கப்பட்டுவிடும்..

இவர்கள் அனைவருக்கும் இந்த சுவாரசிய வலைப்பதிவு விருதினை வழங்கி பெருமைப்படுத்துவதோடு மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன்..

நன்றியுடன் விருதுக்கு வாழ்த்துக்களும் நண்பர்களே.. ஜமாய்ங்க..


Wednesday, July 15, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய்..

நான் அவதரிச்ச ஊரப்பத்தின வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை உலகத்துக்கு பறைசாற்றவே இந்த முயற்சி..

வரலாறு கொஞ்சம் பெருசுன்றதால மனசாட்சிக்கு விரோதமா தொடரிடுகையா போடலாம்னு ஒருமனதா தீர்மானம் நிறைவேற்றி இருக்கோம்.. பொறுமையா படிச்சு ஆதரவு தாங்கப்பூ..

மொதல்ல எடுத்தவொடனே தடாலடியா கெட்டதா பேசவேணாம்னு தோணுனதால எங்க மக்களுக்கு படியளக்கற தொழிலப்பத்தி ஆரமிக்கிறேன்..

1. தொழிலு..

எங்க ஊரின்.. அட ஊரின் என்னங்க ஊரின்.. எங்க சுத்துப்பட்டி 170 கிராமத்துக்குமே முக்கிய தொழில் (or) பரம்பரைதொழில் "நெசவு" தானுங்க..



உண்மையிலேயே எங்கயுமே பொழைக்கவழி இல்லைன்னு எங்க ஊருக்கு வந்தவங்க, செய்யஎந்த வேலையுமே இல்லைன்னு சொல்லி திரும்பிபோரதுக்கான வாய்ப்பே எங்க ஊரப்பொருத்தவரைக்கும் இல்லைங்க..

இங்க வந்துட்டு செய்யறதுக்கு வேலை இல்லைனுட்டு வெளியபோறவன் சத்தியமா எங்கயும்போயி பொழைக்கிறதும் நடக்காத காரியம்.. அவ்ளோ வேலைவாய்ப்பு கொட்டிகெடக்கு..பெரும்பாலும், அனைத்தும் நெசவு சார்ந்த தொழில்கள் தாம்..

எங்க ஊரை பொருத்தவரைக்கும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சைபோடுவதே பெரிய பாவம்னுதான் சொல்லணும்.. யாரும் உழைத்து வாழக்கூடிய அளவிற்கு அளவற்ற வேலைவாய்ப்பு நிறைந்த ஊர்.. (இப்படிப்பட்ட நிலையில் பிச்சையெடுக்க அவசியம் என்ன..?)

வேலைவாய்ப்பு உள்ள அளவிற்கு மனிதவளம் இல்லாததாலே பல நெசவுப்பட்டறைகள் விரிவுபடுத்தப்படாமல் நலிந்து வருகின்றன.. இப்படிப்பட்ட நிலையில் சாப்பாட்டுக்குவழி இல்லைன்னு ஒரு பிச்சைக்காரன் வந்தால் பார்ப்பவனுக்கு எப்படி இருக்கும்..

இங்கே மனிதவளமின்றி வேலைசெய்யவே ஆள் இல்லாமல் தட்டுப்பாட்டில் உள்ளோம்.. இப்படிப்பட்ட ஊரில், வேலையே செய்யாமல் பிச்சையெடுத்து வாழநினைப்பவனை கண்டால் எங்களுக்கு எப்படி இருக்கும்..

இப்படிஒருமுறை பிச்சைகேட்டு வந்தவனை எங்கள் பட்டறையில் வேலைசெய்து கிடைக்கும்சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துஎன்று கூறியதால் திரும்பிசென்ற அவன் அதன்பின்பு அந்த ஏரியாபக்கமே வந்ததில்லை.. இப்படியும் சில ஆசாமிகள்..
என்ன செய்ய..
(ஒடனே ஊருல இருக்கற பிச்சைக்காரர்களை எல்லாம் எங்க பட்டறைக்கு இழுத்துட்டு வந்துடாதிங்க..)

அவங்க இருக்கற அலைவரிசையில அவங்கள வேலைக்கு வெச்சா அவங்க எங்களை மாதிரியான உழைப்பாளிகள் வர்க்கத்துல சேருராங்களோ இல்லையோ, கண்டிப்பா நாங்க அவங்க வர்க்கத்துல சேர்ந்திடுவோம்.. அவங்களோடது அப்படி ஒரு அருமையான அலைவரிசை..

ஊரில் இருக்கும் மனித வளமும் பத்தாததற்கு முக்கிய காரணிகளில் ஒன்று,

ஊரைச்சுற்றி அதிகரித்து வரும் பனியன் தொழிற்சாலைகள்..
மற்றொன்று.. அருகில் அமைக்கப்பட்டுள்ள "சிப்காட்" என்று அழைக்கப்படும் தொழில்பேட்டை..

என்மக்கள் பரம்பரை பரம்பரையாக நெசவில் ஊறித்திளைத்தபடியால் மாற்றத்தை விரும்பி இந்த பனியன் நிறுவனங்களுக்கும், சிப்காட்'ன் பலதரப்பட்ட புதிய தொழிலுக்கும் செல்வதில் அதிக ஆர்வம்காட்ட தொடங்கிவிட்டனர்..

பழகப்பழக பாலும் புளிக்கும் பழமொழி எங்களின் வாழ்வாதாரத்தையே எடுத்துக்காட்டாய் எடுத்துக்கொண்டது..

நெசவுத்தொழில் காலம்பூராவும் பழகி ஒன்றி இருப்பதனால், இத்தொழிலே எம்மக்களுக்கு புளித்துவிட்டதுபோலும்..

எங்கள் ஊரில் கணக்கெடுப்பு நடத்தினால், மக்களைகாட்டிலும் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைந்தது ஏழு மடங்கு முதல் அதிகபட்சமாக பத்துமடங்குக்குமேலேயே இருக்கும்..

அந்த சிறிய கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அவ்வளவு இயந்திரங்கள்..

எங்கள்வீட்டில் இருப்பது நாங்கள் மூவர்.. எங்களின் வீட்டில் எங்களுடன் இயங்குவது 20 இயந்திரங்களுக்கும் மேல்..

இயந்திரங்கள் எனில் சாதாரணம் இல்லை.. அவற்றின் சத்தத்தில் நாம் பேசுவது நமக்கே முழுமையாய் கேட்காது.. அவ்வளவு சத்தம்..

சிறிய சத்தத்திற்கே தூங்கமுடியாமல் அவதியுறும் பலருக்கு மத்தியில் இந்த சத்தத்திலும் நாங்கள் சுகமாய் தூங்குவதுண்டு..

பூக்காரிக்கு பூக்களின் வாசமின்றி தூக்கம் வராதாம்..

கருவாட்டுக்காரிக்கு கருவாட்டின் வாசமின்றி தூக்கம் வராதாம்..

அதேபோல்தான் போலும்..
எம்மக்களுக்கு தறியின் சப்தமின்றி தூக்கவராதோ..


இங்கு ஒவ்வொருவரின் வீடும் வெறுமனே 75 to 125 ஆண்டுகளுக்கு முன்பு வேயப்பட்ட ஓடுகளைகொண்டு இங்கு என்ன இருக்கப்போகிறது என்று என்னும்வகையில் பார்ப்பதற்கு சப்பையாகத்தான் இருக்கும்..

ஆனால் இருப்பதிலேயே ஒரு சிறிய பட்டறையை சேதம் செய்தாலும் சேத மதிப்பு கண்டிப்பாக 7 to 10 லட்சத்திருக்கும் அதிகமாக இருக்கும்.. ஓசையின்றி ஒவ்வொரு பட்டறையும் சேர்த்து கிராமமே பலகோடி ரூபாய்களில் தினம்தோறும் புழங்கிக்கொண்டுள்ளது.. உண்மையில் கிராமத்திற்கு வரும், விஷயம் அறியாத யாரும், மேலோட்டமாய் காணும்போது இதனை நம்புவது கடினம்.. அவ்வளவு எளிமையாய் இருக்கும்..

இப்போதைய சூழ்நிலையில்.. வெளி ஊர்களில் இருந்து எங்கள் ஊருக்கு பிழைப்புதேடிவரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது..

அதுவும்.. கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களில் வந்துசேர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை எங்கள் ஊர்மக்களின் எண்ணிக்கயைவிடவும் மிக அதிகம்.

முன்பெல்லாம் ஒருவர் ஊருக்குள்சென்றாலே, முகஜாடையை வைத்து இவன் இன்னார் வீட்டுப்பிள்ளை என்று பெருசுகள் சொல்லிவிடும்..

ஆனால் இப்போது வெளிஊர்க்காரர்களின் அதிகபடியான வரவால் எவன் உள்ளூர்க்காரன் எவன் வெளியூர்க்காரன் என்று அறிவதிலேயே பெரும் குழப்பமாக உள்ளது..

அதிலும், இப்படி வந்த மக்களில் பெரும்பாலானோர் அந்தியூர் மலைப்பகுதியை சார்ந்தவர்கள்.. அவர்களின் வரலாறு பெரும் வரலாறு.. எல்லாத்தையும் பின்வரும் இடுகைகளில் காண்போம்..

என்ன.. எங்க ஊரின் முக்கிய தொழிலப்பத்தி தெரிஞ்சுகிட்டிங்களா..

சரி அடுத்த இடுகையில் "பெண்களுக்கு எதிரான எங்கள் கிராமத்தின் வினோத சட்டதிட்டங்கள்.." பற்றி காண்போம்..



Saturday, July 11, 2009

50000 மதிப்புள்ள ஸ்டாம்ப்பு..

மேட்டர் 1..


எப்படின்னு யோசிக்குரிங்களா..?

பதில் இடுகையின் கடேசியில்..

மேட்டர் 2..
(மேட்டர் 2 எங்கோ கேட்ட படித்த மேட்டர்.. கண்ணில் தென்பட்டதனை பகிர்கிறேன்..)

பல மொழிகள், ஒரே வார்த்தைக்கு இடத்திற்கேற்ப வெவ்வேறு அர்த்தங்களை தரும்..

கீழே உள்ள சில ஆங்கில சொற்களுக்கு நேரடியாக பொருள்பார்த்தால் தப்பாகிவிடும்..


1. First Footer - புத்தாண்டு பிறக்கும்போது வீட்டில் நுழையும் முதல் நபர்..
2. Second Banana - உதவும் நிலையில் உள்ள ஒருவர்..
3. Third Man - மத்தியஸ்த்தம் செய்பவர்..
4. Four Eyes - கண்ணாடி அணிந்தவர்..
5. Fifth Wheel - தேவையில்லாத சுமையாய் இருப்பவர்..
6. Ten Strike - பெரிய அதிஸ்டம்..
7. Eleventh hour - கடைசி நிமிடம்..
8. Million Dollar Question - மிகக்கடினமான கேள்வி.

மேட்டர் 3..

இதுவரை நான் பார்த்தறியாத, சமீபத்தில் காணக்கிடைத்த பல அறிய / வித்தியாசமான தபால்தலைகளில் சில..
(வழக்கம்போல் கிளிக்கி பெரிதுபடுத்திபார்த்துக்கொள்ளவும்..)


மேலே உள்ளது உண்மையில் கண்டது..

அடுத்து உள்ளது கற்பனையில் காண்பது..




மேட்டர் 1' க்கான பதில்..






ஒன்னும் பிரச்சனை இல்லை..
யாரும் டென்ஷனாகாம அப்டியே அமைதியா கலைஞ்சுபோய்டுங்க..


Tuesday, July 7, 2009

கோவையில் நைஜீரியப்புயல்..



நைஜீரியால இருந்துகெலம்பி சென்னை, மதுரைன்னு சுத்திட்டு 2/7/2009 வியாழக்கிழமை அன்னைக்கு நம்ம நைஜீரியப்புயல் கோவைல மையம் கொண்டது உலகறிந்த ரகசியம்..

ஆனால், இது வலையுலக, பதிவுலக நண்பர்களை சந்திப்பதின் முதல் அனுபவம்ன்றதால, எனக்கு கொஞ்சம் ஸ்பெசல் சந்திப்பு..

ஆறு மணிக்கு அண்ணன்மார்கள் எல்லாரும் வந்திடுவாங்கன்னு ராகவன் அண்ணா சொன்னத நம்ம்பி ஆறு மணிக்கு ஜீ'டாக்ள சாட்டி கேட்டா இன்னும் யாரும் வரலைனாறு..

சரின்னு அப்டியே மொள்ள கெளம்பி போயி 6.30'கு கதவ தட்டினா எல்லாரும் ஆஜராகி இருந்தாங்க.. வழக்கம்போல நம்மதான் லேட்..

முதல் சந்திப்புனாலும், பார்த்தவுடன் சஞ்சய் அண்ணா, அண்ணாச்சி, ராகவன் அண்ணா மூணு பேத்தையும் அடியாளம் கண்டுகிட்டேன்..

ஆனா செல்வேந்திரன் அண்ணாவமட்டும் ரெண்டுதபா பேற கேட்டுகிட்டும் மறந்துட்டேன்.. அப்பாலிக்கா நல்லா நியாபகம் வெச்சுகிட்டேன்..

போனவுடனே ஹாய் சொன்னதுசஞ்சய் அண்ணாக்கு தான்..
ஏனா.. அவரு தான் வாசல் பக்கத்துலையே மொதோ சேர்ல உக்காந்திருந்தார்..

அவருக்கும் சரி, அண்ணாச்சிக்கும் சரி, அறிமுகம் இல்லாத நான் சரியா அடையாலப்படுத்தி ஹாய் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்ததுன்னு நினைக்கிறேன்..

அண்ணாச்சி வெளிப்படுத்திக்கலைனாலும், இவ்ளோ கரீட்ட அடையாளம் கண்டுகினியே.. யாருப்பாநீ'னு சஞ்சய் அண்ணா வெளிப்படையாவே கேட்டாரு..

நம்ம யாருன்னு எவ்வளவோ பேருக்கு சொல்லிட்டோம்.. இவருக்கு சொள்ளமாட்டமானு நானும் சொல்ல ஆரமிக்கரதுக்குள்ள ராகவன் அண்ணாவே நம்ம புகழை பரப்பி அறிமுகப்படுத்தி வெச்சாரு..

ஆறுமணி நேரத்துக்கும்மேல நடந்த அந்த சந்திப்பபத்தி, அங்க சந்தித்தவர்களை பற்றி எழுதினா இன்னும் பலபாகங்கள் எழுதவேண்டி இருக்கும்..


அதனால சுருக்கமா கொஞ்சமா இங்க அவங்கள பத்தி அந்த கொஞ்சநேர சந்திப்பில் என்மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன்..

1. ராகவன் அண்ணா..




முதலிலேயே பலமுறை தொலைபேசியும், சாட்டியும், புகைப்படத்தை கண்டும்விட்டதால், பேச்சிலும், இயல்பிலும் எதிர்பார்க்காதமாதிரி இல்லாமல், எதிர்பார்த்தா மாதிரியே இருந்தார்..


ஆனால்.. நான்தான் அவர்கள் யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு சிறுபிள்ளைதனமாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.. சாரி அண்ணாஸ்.. நான்எப்போமே அப்படித்தான்..


ஆனாலும் ராகவன் அண்ணா நல்ல உரிமையுடன், தோழமையுடன், இன்னபிற எல்லாமுடன் நல்லாவே பழகினார்..

(அந்த தம் அடிக்கறத மட்டும் கம்மிபண்ணிக்க சொல்லனும்னு நெனச்சுட்டு ஏனோ அத கடேசிவரைக்கும் சொல்லாமையே வந்துட்டேன்..
இங்கையாச்சும் சொல்லுறேன்..
அத தயவு செஞ்சு கம்மிபண்ணுங்க அண்ணா..)

2. சஞ்சய் அண்ணா..



இவர் ஒரு ரப்பர் மாதிரி.. (ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)

எல்லாத்துக்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர்னு சொன்னேன்..

அரவிந்த் குட்டிகிட்ட அவர் வயசுக்கு இறங்கிபேசும்போதும் சரி..
என்னைபோன்ற சின்னப்பையன் கிட்ட நம்மறேஞ்சுக்கு எறங்கி பேசும்போதும் சரி..
அண்ணாச்சி, செல்வேந்திரன் அண்ணா போன்றவர்கள் கிட்ட அவர்கள் ரேஞ்சுக்கு ஏரிப்பேசும்போதும் சரி.. அவங்கஅவங்க ரேஞ்சுக்கு வளைஞ்சு போய்டுறார்..

3. அண்ணாச்சி வடகரை வேலன் அவர்கள்..



இவரபத்தி கடேசிவரைக்கும் ஒருமுடிவுக்கே வரமுடியலை.. எல்லாருடனும் மையமா பதில்சொல்லி, பேசி, எல்லாரின் பேச்சையும் பொறுமையா உள்வாங்கிட்டே உக்காந்திருந்தார்..
நிறைய பேசவும் செய்தார்..


இவரபத்தி என்னதான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியலைனாலும்..
இவர ஒரு வடைச்சட்டினு சொல்லலாம்..

(அண்ணாச்சி இதுக்கும் என்னை கணக்கு வழக்கில்லாம மன்னிச்சுடுங்க..)

ஏன் இப்படி சொல்றேனா..

மேட்டர் அவருக்குள்ள போகாதவரைக்கும் அமைதியா இருக்கற அவரு, மேட்டர அவருக்குள்ள போட்டதும் சும்மா வடச்சட்டிகனக்கா பொரிஞ்சுதள்ளிடுராறு பா.. அதான் அப்டிசொன்னேன்..

(எனக்கு இவருடன் சுத்தமாக பழக்கம் இல்லாததால் கணிக்கமுடியவில்லையோ என்னவோ..)

4. செல்வேந்திரன் அண்ணா..

இவரின் வாய் ஒரு மம்மட்டி என்றால்.., இவரின் கண்கள் ஒரு கடப்பாரை.. (நீங்களும் மன்னிக்கவும் அண்ணா..)

ஏன் இப்படி சொன்னேன்னு முழுசா கேட்டுட்டு அப்புறமா அவர்கிட்ட போட்டுகொடுங்கப்பா..

அவர் அதிகம் இலக்கியம் படிப்பதாலோ என்னவோ, அவர் பேசும்போதுகூட இலக்கிய நடையிலேயே பேசிட்டு இருந்தார்..

எடுத்த எல்லா டாப்பிக்கையும் வெட்டி தூர்வாரி இலக்கிய நடையிலேயே கெழங்கெடுத்துட்டு இருந்ததாலதான் அவரின் வாயை மண்வெட்டினு சொன்னேன்..
(நமக்கு தெரிஞ்ச நல்ல வார்த்தை இதுதான்பா..)

அவரோட கண்களை கடப்பாரைன்னு சொல்லகாரணம்..

அவர் எப்படி வாயால, இலக்கிய நடையில் கிண்டி கெழங்கெடுக்கராரோ, அந்த அளவுக்கு பேசிட்டு இருக்கும்போதே எதிராளியின் கண்களை ஆழமா ஊடுருவி, குத்தி, கிழிச்சு, மனஓட்டத்தை ஆராஞ்சுடராமாதிரி தான் எனக்கு தோன்றியது..

அதனால் தான் அவரின் கண்களை கடப்பாரைன்னு சொன்னேன்..


5. அரவிந்த்..



தலை பயங்கர ஸ்மார்ட்..

அரசியல்.. வரலாறு.. புவியியல்.. கணிதம்.. விளையாட்டு.. சினிமா.. அது இது.. இது அது'னு எல்லாத்துலையும் பதினொன்னு போட்டு காட்டி லைசென்ஸ் வாங்கி வெச்சிருக்காரு..

உண்மையில் எனக்கு அவரின் அளவுக்குகூட மெச்சூரிட்டி இல்லைன்னு தான் சொல்லணும்.. (or) அவருக்கு என்னளவுக்கு / அதிக மெச்சூரிட்டி இருக்கு..

ஆனா என்ன.. ஒருநிமிஷம் தான் என்ன பாத்தாரு.. ஒடனே என்னைவிட அதிகமா தோசை சாப்டு காட்டுறேன்னு சவால் எல்லாம் விட்டுடாரு.. (எப்படி தான் கண்டுபுடிக்கராய்ங்களோ.. !)

சரி எதுக்கு வம்புனு தோசை ஆர்டர் பண்ணாம புல்சாவோ.. குல்சாவோ.. அத்த ஆர்டர் பண்ணி எவ்ளோ சாப்டேனே அவர்கிட்ட சொல்லாம எஸ்கேப் ஆகிட்டேன்..

முதல் நாள் சந்திப்பின் போது.., அரவிந்துக்கு மறுநாள் பிறந்தநாள் என்று சொன்னதால், மறுநாள் மாலை ஒரு கேக்குடன் சென்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது..

6. அடுத்த நாள் வால்பையன் அண்ணா வந்திருந்தார்..



இவருடன் ஒரு 30 நிமிடங்கள் வரைக்கும் டைம்ஸ்பென்ட் பண்ணினேன்..

அதிலிருந்து, என்னைபொறுத்தவரை, அவரொரு கண்ணாடி'னு சொல்லலாம்..

சந்தித்தது வெறும் 30 க்கும் குறைவான நிமிடங்களே என்பதனாலாக இருக்கலாம்..

கேட்டதற்கு மட்டும் பளிச்சென்று விளக்கமளித்து விட்டு அமைதியாய் இருந்தார்..
நம்மின் வினாக்களுக்கு மட்டுமே (அளவாய்) பிரதிபளித்தமையாலே அவரை கண்ணாடி என்றேன்..

அந்த மிக சொற்பமான நிமிடங்களுக்குள் நிகழ்ந்த சந்திப்பில் அதற்குமேல் அவரை அறிந்துகொள்ள முடியவில்லை..


இதுவரைக்கும் அவர்களைப்பற்றி என் கருத்தோட்டத்தைதான் சொன்னேன்..
இனி அவர்களின் பேச்சைப்பற்றியும் சொல்லலாம் தான்..
அதை சொல்ல இன்னும் பல எபிசோடுகள் தேவைப்படும் என்பதால் இத்தோடு நிப்பாட்டிங்..


Wednesday, July 1, 2009

குப்புறபடுத்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தபோது..

Photobucket


சமீபத்தில், படுக்கையில் குப்புற படுத்துட்டு விட்டத்தை வெறித்துக்கொண்டு (நீங்களும் ட்ரை பண்ணிபாருங்க) என்னைப்பற்றி யோசித்தபோது கிடைத்த சில அறிய, (இந்த தலைப்பை போன்று அல்லாத) முரண்பட்ட விஷயங்கள்..

(சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..
அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ..!)

1. சிலபேர் தூக்கம் வரலைனா, ஒழுங்கா, நிம்மதியா கவலை மறந்து தூங்குறதுக்கு தூக்கமாத்திரை சாப்பிடுவாங்க..
ஆனா எனக்கு இந்த தூக்க மாத்திரை சாப்பிட்டா, கொஞ்சம் சோம்பலா, டயர்டா இருந்தாகூட, ஃபிரெஸ் ஆகி ரொம்ப புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுவேன்.. அப்புறம் அன்னைக்கு ராத்திரி ஃபுல்லா சிவராத்திரி தான்..

எப்போமே இப்படி தான் தூக்கமாத்திரை சாப்பிட்டா புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுரனா, இல்லை நம்ம மனபிராந்தியானு செக்பண்ண, ஒடம்பு நல்லாஇருந்த, ஒரு காலேஜ் செமெஸ்டர் எக்ஸாம் அன்னைக்குகூட தூக்க மாத்திரை சாப்பிட்டு செக் பண்ணி பாத்தேன்..

நான் நெனச்சது சரி தான்.. முந்தைய பொழுதைவிட தூக்கமாத்திரை சாப்பிட்டபின் கொஞ்சம் ஃபிரஸ்ஸா ஃபீல் பண்ணினேன்.. (நல்ல வேலை, அந்த மாத்திரை எப்பெக்ட்ல தூங்கிருந்தாஆஆஆ.. பரீட்சை அவ்ளோ தான்..)

2. நீங்க நான்வெஜ் சாப்பிடுரவங்களா..?

அப்போ, உங்களுக்கு சளி பிடிச்சா, வீட்ல நாட்டுகோழி கொழம்பு அல்லது சூப்பு வெச்சு கொடுத்திருகாங்களா..?
அத, நல்லா காரசாரமா குடிச்சா,ஒடம்புக்கு நல்லா இருக்கும் / சளி நல்லா ஆகிடும்னு சொல்லுவாங்க..

ஆனா எனக்கு இந்த நாட்டுகோழி கொழம்ப இப்டி காரசாரமா குடிச்சா கண்டிப்பா சளிபுடிச்சுக்குது..
சரி.. சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.. சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடுது.. என்ன கொடுமைங்க இது.

3. நீங்க என்ன சாம்பு போட்டு குளிக்கிறிங்க..?

சில பேர் பொடுகு தொல்லைய போக்க கிளினிக் ஆள் கிளியர் சாம்பு யூஸ் பண்ணுவாங்க..
அவங்களுக்கு பொடுகு போச்சோ இல்லையோ, இந்த சாம்புவ யூஸ் பண்ணினா எனக்கு பொடுகு வந்திடுது..

என் அறியாத வயசுல, பொடுகுனா என்னனே தெரியாத வயசுல (9th படிக்கும்போதுன்னு நியாபகம்), அவசரத்துக்கு கெடைச்ச இந்த சாம்புவ பயன்படுத்தினதின் பலனா எனக்கு இந்த பொடுகு அறிமுகமாச்சு..

அப்புறம் இந்த சாம்புவ தலை முளுகுனதுக்கு அப்புறம் பொடுகு போயேபோச்..
இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..

4. யாருமே பசியிலையோ, பசிமயக்கத்துலையோ இருக்கும்போது வயிறார சாப்பிட்டா, சாப்டதுக்கு அப்புறம் தெம்பா வேலை செய்வாய்ங்க..

ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..
(இப்டி சாப்டா தூங்குற சகாக்கள் என்னைபோலவே சேம் பிளட்டோட பலபேர் இருபிங்கனு நெனைக்கிறேன்..)

5. எல்லாரும் சளி பிடிச்சா, சளியிலிருந்து கொஞ்சம் ஆறுதல் தரும்னு விக்ஸ் போட்டுப்பாங்க..(நீங்க எப்புடி..?)

ஆனா எனக்கு.. இந்த விக்ஸ் போட்டா,சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடும்.. (நான் எப்புடி..?)

6. எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..
ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)


இது பொதுவானது..

இதை எல்லாம் மீறி நம்ம மக்களுக்கே உரிய வினோத பழக்கம் ஒன்னும் இருக்கு..
என்னான்னு கேக்குறீயளா..?

என்னனா.. இங்க எவ்ளோ தான் வெய்யில் பிச்சுகிட்டு அடிச்சாலும்..
இந்த அதிகப்படியான வெய்யில்ல எவ்ளோ தான் கெடந்து வெந்தாலும்..
வெய்யில் கொளுத்துற இந்த நண்பகல் நேரத்துலயும் 'சூடா கொதிக்க கொதிக்க டீ, காப்பி' குடிக்கற பழக்கம் நம்மகிட்டதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.. (கரீட்டா..?)

(டிஸ்கி:
ஆறாவது பாய்ண்ட படிச்சுட்டு நான் ஏதோ குடிகாரன்னு முடிவு பண்ணிடாதிங்க..
நான், நம்ம முன்னோர்கள் சொன்ன பழமொழிய காப்பாத்த தான் அவ்ளோ பாடுபட்டு முயற்சி பண்ணினேன்..

அப்புடி என்ன பழமொழின்னு கேக்குறீயளா..?
அதாங்க, "களவும் கற்றுமற.."

அதான் கத்துகிட்டேன்.. அடுத்த பாதிய மறந்துட்டேன்..

எப்பூடி..!


Friday, June 26, 2009

திருப்பூரில் மீண்டும் ஒரு 7 ஸ்டார்..

1. திருப்பூரில் மீண்டும் ஒரு 7 ஸ்டார்..

அதென்ன 7 ஸ்டார்'னு கேக்குறிங்களா..?

இது 25 வருடங்களுக்கு முந்தின கொசுவத்தி..

என்ன மேட்டர்னா.., இப்போ, கொஞ்ச வருசத்துக்கு முந்தி நிறைய பைனான்ஸ் கம்பெனிங்க பண்ணுனவேலைய மாதிரி அப்போவே அந்த 7 ஸ்டார்ங்கற நிறுவனம் அதிக வட்டிதர்றதா சொல்லி சுருட்டிட்டு ஓடிடுச்சு..

இப்போ.. திரும்பவும் அதேமாதிரி ஒன்னு முளைச்சிருக்கு..

இவங்களோட கொள்கைவிலக்கம் என்னனா.. நம்ம ஒரு லட்சம் ரூபா அவங்ககிட்ட முதலீடு பண்ணினா.., அவங்க நமக்கு காலம் பூரா மாசா மாசம் 10,000 ரூபா தருவாங்கலாமா..

மக்களே.., நீங்களே யோசிச்சு பாருங்க.. இது சாத்தியமா..?
அந்த ஒரு லட்ச ரூபாய மீட்டர் வட்டி, ஜெட்டு வட்டிக்கு விட்டாகூட மாசா மாசம் 10,000 ரூபா வட்டிவருமானு தெரியலை.. ஆனா இவனுங்க நமக்கு நோவாம காலம்பூரா, மாசா மாசம் 10,000 ரூபா தருவானுங்கலாமா..? எப்புடியா தருவானுங்க..?

(இது, அவர்கள் என் உறவினர் ஒருவரின் வீட்டு கதவை தட்டியதால் எங்கள் வீட்டில் கேட்ட செய்தி)

அடுத்து..

2. தட்டுங்கள் திறக்கப்படும்..

இந்த வாசகம் எந்த மதத்திற்கு சம்பந்தப்பட்டது என்று யோசிக்கவில்லை..

எந்த கருத்தையுமே நாம் காணும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியாகவும் புரிந்துகொள்ளலாம்.. சிலசமையம் தவறாகவும் புரிந்துகொள்ளலாம் என்பதற்கான உதாரணமாய் கருதுகிறேன்..

"தட்டுங்கள் திறக்கப்படும்.."

ஆஹா.. என்னே இறைவனின் கருணை.. யாரையும் பேதமின்றி, தட்டுங்கள்.. பாரபட்சமின்றி திறக்கப்படும்னு சொல்லுறாரே..

அவ்வளவு கருணை உள்ளவரா இருப்பாரேயானால்..
"எதற்காக மூடிவைக்கிறார்..?" எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டியது தானேனு கேள்வி எழலாம்..

எதற்காக மூடிவைக்கவேண்டும்.. தட்டுங்கள் திறக்கப்படும்னு சொல்லணும்..
எப்போதும் திறந்தே வைத்திருங்களேன்'னு கேக்கலாம்..

கேக்கலாமா என்ன..?


இப்படி கேட்பது நம்மின் தவறான கண்ணோட்டமாக இருக்கலாம்..

சரியான கண்ணோட்டமாக நான் கருத்துவது..

எதையுமே நம்முடைய முயற்சியினால் பெறவேண்டும்..
சிறிதேனும் நம்மின்மூலம் காட்டப்படும் உழைப்பின் மூலம் பயனை அனுபவிக்கவேண்டும்..

இறைவன் கொடுக்கிறானே என்பதற்காக முயற்சிக்காமல் பயன் பெற நினைக்கக்கூடாது..

ஆகவே தான்.. நம்மால் இயன்ற அந்த ஒரு சிறு முயற்சியாக, சிறிதேனும் முயன்று பலன் பெறவேண்டுமென்பதே இந்த “தட்டுங்கள் திறக்கப்படும்..” வாசகத்தின் கருத்தாக இருக்கலாமென எண்ணுகிறேன்..


Tuesday, June 23, 2009

ஆணும் பெண்ணும்..

இந்த முறை நான் எடுத்துள்ள இரண்டு விஷயங்களுமே பலரால் ஆட்சேபிக்கபடலாம்..

இந்த கருத்துக்களில் ஏதேனும் தவறாகவோ, யாரையேனும் புண்படுத்தும்படியோ இருக்குமேயானால் தயவுசெய்து மன்னிக்கவும்..

(கள்ளச்சாராய..ச்ச..கலாச்சார.. அரசியல்.. சமூக நோக்கர்கள் தயவுசெய்து இதனை ஒரு கனவாக நினைத்து, மன்னித்து, மறந்துவிடுங்கள்.. ஏதும் தாண்டவம் ஆடிவிடாதீர்கள்..)

இப்போ மேட்டர்..

1.

24 மணிநேரத்தில் 790+ ஹிட்ஸ்கள் கொடுத்து பீதியை கிளப்பியதாலும், நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்கியும், பதிவின் முதல்பகுதி நீக்கப்பட்டுள்ளது..

சிரமத்திற்கு மன்னிக்கவும்..


சரி அடுத்தது..

2. ஒருவனுக்கு ஒருத்தி நம் பாரத பண்பாடு..

ஒருவனுக்கு ஒருத்தி..
ஆணும் பேணும் சமம்..
(கேக்க நல்லா இருக்குல்ல..?)

(சரி..,இப்போ, இதுல கேட்டிருக்கற சந்தேகம் ஏதும் கொச்சையாக இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.)

நம்ம நாட்டுல..

Number Of ஆண்கள் == Number Of பெண்கள்னா,

ஒருவனுக்கு ஒருத்தி..
ஆணும் பேணும் சமம்..(இதுவேற சமமோ..? சரி சரி விடுங்க..)
இதெல்லாம் ஒத்துவரும்..


இப்போ பொதுவாவே ஒரு மாநிலத்த எடுத்துகிட்டோம்னா.. அதுல ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை கம்மியா தான் இருந்துட்டு இருக்கு..

உதாரணத்திற்கு..
(சத்தியமாக இதற்கும் கேப்டனுக்கும் சம்பந்தம் இல்லை..)


(படத்தை கிளிக்கி பெரிதுபடுத்தி பார்த்துக்கொள்ளவும்..)

இங்க, ஒவ்வொரு மாநிலத்தையும் எடுத்துகிட்டிங்கனா.. ஆண்களின் எண்ணிக்கையே அதிகமா இருக்கு..

இதுல, ஜோடிசேந்த மக்களை தவிர மீதமுள்ள ஆண்கள் ஜோடிக்கு என்ன பண்ணுவாங்க..?


எனக்கு தெரிந்து.. இந்தியாவிலேயே ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்கள்உள்ள ஒரே மாநிலம் "கேரளா" தான்..

அங்கு மக்கள்தொகை நிலவரம்..



அப்போ.. இங்க இருக்குற அதிகப்படியான பெண்கள் ஜோடிக்கு என்ன பண்ணுவாங்க..

சிலபேர் எடக்குமடக்கா ஒன்னுகேப்பிங்களே..

இங்க இருக்குற அதிகப்படியான பெண்களை மீதி மாநிலத்துல இருக்கற ஆண்களுக்கு ஜோடிசேத்திடலாம்னு..

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஆண்கள் அதிகம்.. இங்க இருக்கும் அதிகப்படியான பெண்கள் அந்த மொத்த அதிகப்படியான ஆண்களைவிட ரொம்ம்ம்ம்ப குறைவு..

(மீண்டும் சொல்றேன்.., இதுல கேட்டிருக்கற சந்தேகம் ஏதும் கொச்சையாக இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.)

ஆக மொத்தத்துல.. எனக்கு எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு தேடும்போது பொண்ணே இருக்காதுன்னு நினைக்கிறேன்..

வீட்ல சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுமோ..?


Thursday, June 18, 2009

கொலைகாரன் குடும்பத்தார் (part 1)..

(கதையின் பங்காளிகள்..

1. கொலைகாரன் - அப்பா.
2. சாகாதவன் - 1'in மகன், 3'in தம்பி.
3. செத்தவன் - 1'in மகன், 2'in அண்ணன்.
4. பாக்கலை - 1,2,3'in பக்கத்து வீட்டுக்காரர்.
5. போலீஸ் இன்ஸ்பெக்டர் )


சரி.. இனி கதை..

ஒரு ஊரில், "கொலைகாரன்" என்பவருக்கு "சாகாதவன்", "செத்தவன்'னு ரெண்டு பசங்க.. "சாகாதவன" எல்லாரும் செல்லமா "சாகலை"ன்னு கூப்டுவாங்க..

ஒருநாள், "சாகாதவன" யாரோ கொன்னுட்டாங்க..
அத "பார்க்கலை"ன்ற பக்கத்துவீட்டுகாரர் பாத்துட்டு போலிஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டார்..

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், யாரு இன்பார்ம் பண்ணினதுனு கேக்க, தான் தான் இன்பார்ம் பண்ணினதா "பாக்கலை" சொல்றான். இன்ஸ்பெக்டர் அவர ஒரு தபா ஏற எறங்க பாத்துட்டு, நீ யாரு..? இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தன்ம்னு கேக்குறாரு..

அதுக்கு "பாக்கலை" சொல்றான்..,

ஐயா.. நான், இவங்க பக்கத்து வீட்டுக்காரனுங்க..அவர பாக்கலாம்னு இங்க வந்தப்போ இப்படி "சாகாதவன்" செத்து கெடக்குராருங்க..

இன்ஸ்பெக்டர் : சரி.. உம்பேரு என்னப்பா..?

நான் தான் "பாக்கலை" சார்..

இன்ஸ்பெக்டர் : என்னது..? நீ பாக்கலையா..? அப்புறம் ஏண்டா பாத்துட்டுதான் எங்களுக்கு போன் பண்ணினதா சொன்ன..

ஐயா நான் நெஜமாவே "பாக்கலை"தாங்க. ஆனா இத மெய்யாலுமே பாத்தேங்க..

இன்ஸ்பெக்டர் : ஆஹா.. ரொம்ப கொழப்புறியேடா.. முடியலை.. சரி.. அடுத்தவன பாத்துட்டு வந்து உன்ன தனியா டீல் பண்ணுறேன்..

++++++++

அடுத்து செத்தவன்கிட்ட (செத்துப்போன "சாகாதவனின்" அண்ணன்).

இன்ஸ்பெக்டர் : நீ யாருப்பா..? உனக்கும் இந்த செத்துபோனவனுக்கும் என்ன சம்பந்தம்..?

செத்தவன் :(அழுதுகொண்டே) சார்.. அ.. அ.. அவ.. அவன்.. அவன்.. என் தம்பி "சாகலை"ங்க.. ரொம்ப செல்லமா வளர்ந்தவங்க..

இன்ஸ்பெக்டர் : என்னது சாகலையா..? அப்போ இங்க செத்தவன் யாரு..?

செத்தவன் : இங்க “செத்தவன்” நான் தான் சார்..

இன்ஸ்பெக்டர் : நீ தான் செத்தவனா..? அப்புறம் எப்படிடா என்கிட்ட உயிரோட பேசிட்டு இருக்க..?

செத்தவன் : சார்.. இதென்ன கொடுமையா இருக்கு..?
சாகாதவன்” அவனையே செத்துட்டான்னு சொல்லும்போது.. நான் “செத்தவனா” இருக்கறதால உயிரோட இருக்ககூடாதா..?

இன்ஸ்பெக்டர் : டேய்.. இப்போதான் அங்க இத பாத்தவன் “பாக்கலைனு” சொல்லி கொலப்பினான்..
இப்போ நீ “செத்தவன்” சாகலைன்னு சொல்லி கொலப்புற..
அப்போ செத்தது யாருடா..?

செத்தவன் : “சாகாதவன்” தான் சார் சாகலை.. அவன செல்லமா அப்படி தான் சார் கூப்பிடுவோம்..
ஆனா, இங்க செத்தவன் அவன் தான் சார்..

இன்ஸ்பெக்டர் : ங்கொய்யாலே.. நீயுமாடா.. ஆளாளுக்கு கொழப்புரிங்கலேடா.. உன்னையும் அப்புறமா தனியா டீல் பண்ணுறேன்..

என்னடா இது.. கேஸ் ரொம்ப காம்ப்ளிகேட்டட்டா போய்ட்டு இருக்கே..
சரி அடுத்தவன பாப்போம்..(அடுத்த பார்ட்டில்..)

இன்வெஸ்டிகேசன் தொடரும்..



(பி கு: கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே..
இதே பெயரில் யாராவது இருந்து.., இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கையுடன் ஒத்திருப்பின் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது..)


Monday, June 15, 2009

என்னாது இது..?

கருப்பு பல்பு கெடைக்குமா..?

கிராமங்கள்ல திருவிழாக்களின்போது கலர் காலரா சீரியல் பல்பு தொங்கவிட்டு இருப்பாங்க.. அதுல பல்புமேல என்ன கலர் வேணுமோ அந்த கலர் பாலிதின்பேப்பர சுத்திஇருப்பாங்க..
(யாராச்சும் பாத்திருகீகளா..?)

(இது அந்த பழைய முறைப்படி கலர் காகிதம் சுத்தாமல், இப்போது பயன்படுத்தப்படும் மேற்ப்புற கலர் கண்ணாடிகளை கொண்ட சீரியல் பல்பு..)

சிவப்பு கலர் சுத்தினது சிவப்பு கலர்ல 'ஙே'னு எறிஞ்சுட்டு இருக்கும்..

வீட்ல, உதாரணத்திற்கு, பச்சை கலர் பல்புல, அந்த பல்பின் மேர்ப்புற கண்ணாடில பச்சை வர்ணத்துல ஏதோபூசி இருப்பதால பச்சை வர்ணம் கெடைக்குது..
(யாரும் அறிவியல் ரீதியா ஆராய்ச்சி பண்ணி அப்ஜெக்சன் சொல்லி கொலப்பிடாதீக..)



இப்படி நமக்கு எந்தவர்ணத்தில் வெளிச்சம் வேண்டுமோ அந்த வர்ண வெளிச்சத்தில் வீட்டை நிரப்பலாம்..



இப்போ, எனக்கு, வெளிச்சம் இருக்கற வீட்ட நல்ல அடர் இருட்டு நிறத்துல (அதாங்க, கருப்பு நிறத்துல) நல்லா இருட்டா ஆக்கணும்னா,
கருப்பு பல்பு கெடைக்குமா..?

இதாங்க என்னோட டவுட்டு..
சொல்லுங்கப்பா.. கெடைக்குமா என்ன..?

--------
'BABA' 'papa' ஆகமுடியுமா..?

BABA = பாபா = papa
அப்படினா..,
BABA = papa'va..?

என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்..

--------

இப்டி இருந்தா எப்படி இருக்கும்..?

இது நம்ம தலைவரோட பாபா பட கிளைமாக்ஸ் பத்தினது..

அந்த படத்துல, கிளைமாக்ஸ்ல, கடேசியா அவரோட அந்த 'நினைத்ததை நிறைவேற்றும் ஏழாவது வரத்த' ரெண்டுல ஒரு காரியத்துக்கு பயன்படுத்த வேண்டி இருக்கும்..

அப்டி அவர் அந்த கடேசி வரத்த அந்த ரெண்டுக்குமே பயன்படுத்தாம, அவரோட வரத்த இன்னும் முடிவிலி (அதாங்க இன்பினிட்டி) டைம்ஸ் பயன்படுத்த வரம் கேட்டிருந்தா, அதவெச்சு "பாபா பார்ட்-2, பார்ட்-3", etc... னு பல பார்ட்டுகள் எடுத்து கலக்கி இருக்கலாமே..

--------
என்னாச்சோ..?

என் கையில் ஒரு போர்வாள்..

ஆக்ரோசத்தோடு எதிரில் தாக்கவந்தவனை வெட்டிவிட்டு, வாளை பின்னோக்கி சுழற்றியபோது, பின்னாலிருந்து தாக்கவந்தவனின் தலையில் எனது வாள் பட்டு, அவனின் மண்டைஓட்டை சிறிது பெயர்த்து விட்டது..

அவனின் மூளை வெளியில் தெரியும் அந்த நரகவேதனையில், அவன் வலியை பொறுத்துக்கொண்டு என்னை தாக்கவருவானா..? இல்லை, வலி தாங்காமல் அவனின் வாளாலேயே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்வானா என யோசித்த அந்த நொடி, அம்மா காப்பி டம்ளருடன் வந்து தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பிவிட்டார்கள்.. அவன் கதி என்னாச்சோ..?

ஹும்.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் தோணுதோ தெரியலை..


Wednesday, June 10, 2009

உயிர் காணும் வாழ்க்கைகனவு..

இது நான் ISKCON (International Society For Krishna Consciousness, Bangalore) உடன் தொடர்பில் இருந்த போது அங்கு ஒருவருடன் ஏற்பட்ட விவாதத்தின் அடிப்படையில் பதிவுசெய்வது..

பொதுவாக நாம் உறக்கத்தில் காணும் கனவுகள், உண்மையற்ற, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் அல்லது நமது நிஜ சூழ்நிலையை ஒத்து, அல்லது ஏதாவது போல கசாமுசான்னு வருகின்றன..

எது எப்படியோ.. அப்படி நாம் காணும் கனவுகளில் பெரும்பாலானவை அடுத்தநாள் நாம் விழித்தெழும்போது நியாபகத்தில் இல்லாமல் மறந்துபோயிருக்கும்..

சில கனவுகள், நாம் கண்விழித்தபின்பும் அன்றைய பொழுதில் வெகு நேரத்திற்கு நியாபகத்தில் நிறைந்திருக்கும்.. ரொம்ப வெகுசில கனவுகளே நம் நினைவில் வெகு நாட்களுக்கு மறையாமல் நிலைத்திருக்கும்.. ஆனால், அவையும் நாம் கண்ட அனைத்தும் அப்படியே சிறிதும் பிசகாமல் நினைவில் உள்ளதாஎன்பது சந்தேகமே..

இந்த கனவுகள் உண்மையற்ற மாயை அவ்வளவே..

இப்படி நாம் உறக்கத்தில் காணும் இந்த குறுகிய கால கனவுகள் நம் வாழ்வின் ஒரு சிறு பகுதியே.. அதுவும் நிஜமல்லாத மாயை..

ISKCON'il அவர்களின் வாதப்படி, நம்முடைய 'இந்த வாழ்க்கை என்பது நம் ஆத்மாவின் குறுகிய கால கனவு' என்பதே அவர்கள் கூற்றின் சாராம்சம்..

இதை புரிவதற்கான சின்ன விளக்கம்..

நாம் எப்படி கண் விழிக்கும்போது நாம் கண்ட கனவுகள் மறைந்து, நம்மின் இந்த நிஜ உலகில் ஜீவிக்கிரோமோ..,அதே போல், நம் ஆத்மாவானது இவ்வுலகில், நம் உடலை விட்டு பிரிந்து, அதன் உண்மை இருப்பிடமான மேலுலகை, எல்லாமுமாகிய அந்த இறைவனை அடையும்போது, அது கண்ட உலக வாழ்க்கை எனும் இந்த கனவானது மறைந்து அதன் நிஜ உலகில் பிரவகிக்கிறது..

இந்த உலகவாழ்க்கை என்பது நம் ஆத்மா காணும் குறுகியகால உண்மை இல்லாத மாயையாகிய கனவுஆகும்..

உலக வாழ்வை விடுத்து, இறைவனில் கலந்த அந்த நிலையில், அதற்கு இந்த உலக வாழ்க்கையானது சற்றும் நினைவில் இராது..

ஆத்மாவின் உண்மை வாழ்க்கையானது, உலக வாழ்வை விடுத்து, மறுபிறவிகள் எனும் வாழ்க்கை / பிறவிச்சுழற்சியை கடந்து, நிலையாக, அந்த இறையுடன் அணுவாய் ஒன்றர கலந்த அந்த நிலையே ஆகும்..

(ஏதோ ஆன்மிகம் போல இருக்கேன்னு பீல் பண்ணாதிங்க..

இது என்ன மேட்டர்னா.. நம்மளோட இந்த வாழ்க்கைன்றது நம்ம உசுரு காணுற ஒரு (நீண்ண்ண்ட) கனவு.. அம்முட்டுதான்..)

இந்த உலக வாழ்க்கைன்றது உண்மை இல்லாத, நம்ம உசுரு காணும் கனவுபா..

புரிஞ்சுக்கோ.. உசுரே முழிச்சுக்கோ.. சீக்கிரம் கெலம்பிக்கோ..


Tuesday, June 2, 2009

‘பாஸ்வோர்’டாய நம:

ஓம் ‘பாஸ்வோர்’டாய நம:

நீங்க உங்க தினப்படி வாழ்க்கையில எவ்ளோ தடவ எங்க எல்லாம் பாஸ்வோர்ட் உபயோகிக்கிறிங்கனு லைட்டா யோசிச்சுட்டே இந்த இடுகைய படிங்க மக்கள்ஸ்..

என்னுடைய சராசரி நாளில்..

காலைல எழுந்தவுடனே, ஸ்நூஷ்'ல இருக்குற மொபைல்'a அன்லாக் பண்ண பாஸ்வோர்ட் கொடுத்து, அலாரம்'a ஆப் பண்ணி, வெட்டியா வந்த மெசேஜ் எல்லாம் படிச்சுட்டு எழுந்திரிக்கும்போது அன்றைய முதல் பாஸ்வோர்ட் என்ட்ரி முடிஞ்சது..
(இப்படி பாஸ்வோர்ட் இல்லாம இருந்தா, உடன்பிறப்புக்கள் நைட்டோட நைட்டா அலாரம் டைம மாத்தி கபடி வெலையாடிடுவாங்க.. அதுக்கு தான் இந்த பாஸ்வோர்ட்..)

அடுத்து, காலைல பண்ணவேண்டியத எல்லாம் பண்ணிக்கிட்டு, நம்ம கம்பியூட்டர ஆன்பண்ணி, நம்ம யூசர் அக்கவுண்ட்ல லாகின் பண்ண பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் பண்ணிமுடிக்கும்போது, அடுத்த பாஸ்வோர்ட் என்ட்ரி ஓவர்..
(இப்படி வீட்ல நம்ம அக்கவுண்ட்க்கு பாஸ்வோர்ட் வெக்காட்டி எதாச்சும் வாண்டுங்க கண்டத காணாம பண்ணிடுங்க.. அதான் சேப்டிக்கு..)

அடுத்து, சிஸ்டம்ல மெயில் செக் பண்ணலாம்னு ஜி-மெயில் ஓபன் பண்ணினா, நம்ம அதுலேயே மூணு அக்கவுண்ட் வெச்சிருப்போம்..
ஒவ்வொண்ணுக்கும் பாஸ்வோர்ட் கொடுத்து மெயில் செக்பண்ணிட்டு, அடுத்ததா யாகூ.. இதுலயும் ரெண்டு மூணு அக்கவுண்ட் இருக்கும்.. அதுக்கும் தனித்தனி பாஸ்வோர்டுகள் யூஸ்பண்ணிட்டு, அடுத்து reddif'la இருக்குற ரெண்டு மூணு அக்கவுண்டுக்கு பாஸ்வோர்ட்..

அப்பறம், ஆர்குட் ஓபன் பண்ண.. சிலபேர் இதுலயும் ரெண்டு மூணு அக்கவுண்ட் வெச்சிருப்பாங்க.. அவங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்வோர்டுகள்..

அப்பறம், linkein கம்யுணிட்டி.. இதுக்கு தனியா பாஸ்வோர்ட்..
அப்புறம், facebook'ku தனியா யூசர்நேம், பாஸ்வோர்ட்..

யாகூ குரூப்ஸ் மற்றும் இன்னபிற குரூப்ஸ்களுக்கான பாஸ்வோர்ட்கள்..

அப்புறம், e-newspaper படிக்கற பழக்கம் இருந்தா.. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் நம்மளோட பாஸ்வோர்ட் யூஸ் பண்ணவேண்டி இருக்கும்..

அப்புறம்.. நம்ம பிளாக்'ல நுழைந்து அன்றைய கடமைகளை நிறைவேற்ற பாஸ்வோர்ட் தேவைப்படும்..
படித்த, பார்த்த சிலரின் இடுகைகளுக்கு வோட்டுபோடுவதற்காக தமிழ்மணம், தமிழிஷ், இன்னபிற வலைபக்கங்களுக்குள் நுழைய அவற்றிற்கான பாஸ்வோர்டுகள்..

தனது பிளாக்கின் ஹிட்ஸ், டிராப்பிக் ரேஞ்சை அவ்வப்போது பார்க்க அதற்கான வலைத்தளங்களில் தங்களின் கணக்கிற்கான பாஸ்வோர்ட்டுகள்..

இப்படியெல்லாம் மூளையில் ஒளிந்துள்ள பாஸ்வோர்ட்டுகளை பயன்படுத்தி காலை கடமைகளை நிறைவேற்றிவிட்டு, ஆபீஸ் போய், கணினியை ஆன் செய்து மீண்டும் லாகின் பண்ண பாஸ்வோர்ட்..

அப்பறம், அன்றைய ஆணிகளை பார்க்க, கம்பெனியில் வழங்கப்பட்டுள்ள ID'il மெயில் செக் பண்ண ஒரு பாஸ்வோர்ட்..

பிராஜெக்ட் சார்பான database'ai ஏக்சஸ் செய்யவேண்டிஇருந்தால், அதற்கான பாஸ்வோர்ட்..

(இப்போது சில நாட்களாக தரவிறக்கம் செய்யப்படும் "zip" பார்மெட் file'ai அன்ஜிப் செய்யக்கூட பாஸ்வோர்ட் செட் செய்திருப்பதை காணமுடிகிறது.)

இதற்கு இடையில், நண்பர்களுடன் சாட்ட, gtalk, yahoo- messenger போன்றவற்றின் நமது அக்கவுண்ட்டிற்குள் நுழைய தனிதனி பாஸ்வோர்டுகள்..

அப்புறம், ஆணிகளுக்கு இடையே மக்களின் இடுகைகளுக்கு பின்னூட்ட, முடிந்தால் ஒரு இடுகையை நம் சார்பாக தட்டிவிட, அதுஇது என்று பிளாக் சம்பந்தமான பயன்பாட்டிற்கு பாஸ்வோர்ட்டுகள்..

இவ்வளவுக்கு மத்தியில்,இப்போது உள்ள கம்பெனியை விடுத்து, வேறு கம்பெனியில் ஆணி புடுங்க ஆசைப்பட்டு, naukri, monsterindia போன்றவற்றில் வேலைதேட எண்ணி உள்நுழைய அவற்றிற்கான பாஸ்வோர்ட்..

நடுவில் எங்கயாச்சும் வெளியில் உலாத்த செல்லும்போது, வழியில் ஏதாவது வாங்க நினைத்து, தேவையான பணம் பெற ATM சென்டர்களுக்கு சென்று அட்டையை நீட்டினால், அங்கும் பாஸ்வோர்ட்..
(அதுவும், ஊரில் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் அக்கவுண்ட் ஆரமித்து ATM கார்ட் வைத்திருப்பதால்..
அவ்வளவு கார்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வோர்ட்வேறு..)


இப்படி எங்கு நோக்கினும் பாஸ்வோர்ட் மயமாக இருந்தால், ஒருமனுசன் எவ்ளோ பாஸ்வோர்ட்ஐத்தான் நியாபகம் வைத்திருப்பான்..

இதுவரைக்கும் வாழ்க்கையில் பாஸ்வோர்ட்டே உபயோகிக்காதவர்களின் நலசங்கம் சார்பாக,
"தனி ஒரு மனிதனுக்கு பாஸ்வோர்ட் இல்லையேல்.. (வேறு என்ன செய்ய முடியும்..) புதிதாய் பெற்றிடுவோம்.."னு சொல்லிட்டு கிளம்புகின்றேன்.. நன்றி.. வணக்கம்..


Friday, May 29, 2009

காலங்கள் மாறினாலும் #2..

ஹாய் மக்கள்ஸ்..

எனது "காலங்கள் மாறினாலும்.." என்ற இடுகையில் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரையிலான ஆறு வகை காலங்களை படங்களுடன் வெளியிட்டிருந்தேன்..

அவை..
1. கற்காலம் 2. உலோககாலம் 3. இரும்பு காலம் 4. இருண்ட காலம் 5. தொழிற்காலம் 6. கம்பியூட்டர் காலம் என்பனவாகும்..




அதற்கு பின்னூட்டமாய் நண்பர் "thevanmayam" என்பவர் அடுத்து என்ன காலம் என்று கேட்டு இருந்தார்..

அவரின் கேள்விக்கு பதிலாய் இங்கு ஏழாவது காலமாய் "AI" என்று சுருக்கமாய் அறியப்படும் "ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்" காலத்தை இணைக்கின்றேன்..

7. AI காலம்..



(மேலே உள்ள ஆறு காலங்களுடன் இதனையும் இணைத்துக்கொள்ளுங்கள்..)
என்னடா படத்தில் கணினியின் கை கற்கால மனிதனின் கை போல் கரடுமுரடாக உள்ளதே என்று நினைப்பவர்களுக்கு..


இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..

இதன் பின், பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு, பின் கம்பியூட்டர் கால மனிதனை போன்று நம் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் ஆனது நாகரிகமான உருவத்தை அடையும்..
(அப்போது மனிதனின் கதி..?)

Tuesday, May 26, 2009

நான் யாரென அறிய 32 கேள்விகள்..

'நிலாவும் அம்மாவும்' அவர்களின் ஆக்கத்தால் தொடங்கப்பெற்ற “கேள்வியும் பதிலும்....” என்ற இந்த சங்கிலித்தொடர் இடுகையில், பலரின் தொடர்ச்சியான இணைப்புகளுக்குபின் இணைந்த “இராகவன், நைஜிரியா” அண்ணா அவர்கள், அவருக்கு அடுத்து என்னையும், என்னுடன் சேர்த்து ரம்யா அக்காவையும், டக்ளஸ் அவர்களையும் இணைய அழைத்துள்ளார்..

32 கேள்விகளுக்கு கல்லூரித்தேர்வில் பொறுமையாக பதிலளித்து இருந்தால், பட்டதாரி (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

32 கேள்விகளுக்கு பொறுமையாக இன்டெர்வியுவில் பதிலளித்து இருந்தால், அந்த கம்பெனியின் ஊழியன் (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

32 கேள்விகளுக்கு பொறுமையாக மேடையில் பதிலளித்து இருந்தால், பேச்சாளனாக (ஆனாலும்)ஆகி இருப்பேன்..

ஆனால், இங்கு, இந்த 32 கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிப்பது என்னை நானும், நீங்களும் அறியமுடிவதற்கான நற்களமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே..

இதுவரை இணைக்கப்பெற்றவர்கள்..

ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
என் உயிரே... அபுஅஃப்ஸர்
இராகவன், நைஜிரியா

இவர்களுக்கு அடுத்ததாய் என்னை இணைய அழைத்த “இராகவன், நைஜிரியா” அண்ணாவிற்கு நன்றிகள் சொல்லிண்டு, என்னை அறிவதற்கான கேள்விகளை சந்திப்போம்..


இனி கேள்விகளும் எந்தன் பதில்களும்..

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இது என் பெற்றோரின் விருப்பத்தால் வைக்கப்பட்டது..
இது எனக்கு பிடிக்கிறதா என்று இதுவரை நினைத்துபார்க்கவில்லை..

கண்டிப்பாக "பிடிக்காது" என்பது என் பதில் இல்லை.. :)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

எதுவும் நிரந்தரம் இல்லை என்ற மனப்பான்மையில் வாழ்பவன் நான்..

எனவே எதற்கும் பீல் பண்ணிக்கொண்டு கண்ணை கசக்குவது கிடையாது..

இருப்பினும், எனது ஏழாவது செமஸ்டரின் ஆரம்பத்தில் வாங்கிய 13 அறியர்களை நினைத்து என் பெற்றோர் கலங்கிவிடகூடாது என்பதற்காக அவர்களை முந்திக்கொண்டு முதலைக்கண்ணீர் வடித்து அவர்களை என் அரியர் பற்றின கவலையில் இருக்கவிடாமல் என்னை தேற்ற அவர்களை திசை திருப்பினேன்..

உண்மையில் நான் கடேசியாக அழுதது ஒன்பதாம் வகுப்பில் என்னை என் சக தோழர்களிடம் இருந்து பிரித்து, ஒன்பதாம் வகுப்பின் வேறு பிரிவில் அமர்த்தப்பட்டபோது..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

உண்மையில் நான் இடதுகை பழக்கமுடையவன்..

என் நான்காம் வகுப்புவரை பாடம் சொல்லிகொடுத்த ஆசிரியை, என்னை வலுக்கட்டாயமாக வலதுகையால் எழுத எடுத்த முயற்சியால் இப்போதும் என் கையெழுத்து அந்த நான்காம் வகுப்பு மாணவனின் கையெழுத்து போல கிறுக்கலாக தான் இருக்கும்.. (கம்முனு டாக்டரா போயிருந்திருக்கலாம்..)

இருப்பினும் எனது கையெழுத்தை நானே விட்டுக்கொடுக்கமுடியுமா..?
ஆகவேவேவேவே..

பி..டி..க்..கா..து..

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதுதான் என்றெல்லாம் பாரபட்சம் பார்ப்பது இல்லை.. நீந்துவன தவிர கிடைப்பவை எல்லாத்தையும் பிடிக்கும்.. (பிடிப்பவை எல்லாம் கிடைக்குமானு தெரியலை..)

ஆனாலும் அளவோடு உண்டு நிறைவாக வாழ்பவன் நான்..


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கண்டீடீடீப்பா..
(ஒருமுறை பேசிவிட்டாலே தொடர்ந்து அவரிடம் நட்பு / தொடர்பு வைத்திருக்க விரும்புபவன்..)

ஆனாலும் எப்போதும் நெருக்கமான நட்பாக இருப்பினும், இவரின் நட்பு இல்லையேல் வடக்கிருந்து உயிர் நீப்பேன் மாதிரி யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை.. இதனால் எந்த உறவின் பிரிவும் சீக்கிரம் என்னை பாதிப்பது இல்லை..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கண்டிப்பா கடலில் தான்..
அருவிக்குளியல் அந்த குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சுற்றளவில் முடிந்துவிடுகிறது..
கடலில் அப்படி இல்லை.. அதன் எல்லைகள் விஸ்தாரமானது.. எனவே கடல்தான்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரின் கண்களை..
(அந்த கண்களின் சக்தி அபாரமானது.. மேலும், ஒருவரின் மனநிலையை அவரின் கண்களே நன்கு பிரதிபலித்துவிடும் என்ற நம்பிக்கையில்..)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் (சில)..
1.நல்லது கெட்டது எதுவாகினும் பெரிய ஆரவாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்வது..
(வந்த பின்பு மாற்ற முடியாது.. அப்புறம் ஏன் அந்த தேவையில்லாத சந்தோசம் துக்கம் போன்ற பீலிங்க்ஸ் என்பதனால் இப்படி..)
2.எதிரியாய் இருப்பினும் நம்பி வந்துவிட்டால் முழுமனதுடன் ஆதரிப்பது..

பிடிக்காத விஷயம்..
முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..

1. 17 இன்ச் Wide screen மானிடர்..
2. கருப்பு நிற கீபோர்ட் மற்றும் மவுஸ்..
3. சிலிம் டைப் காபினெட்..
4. 340GB ஹார்ட் டிஸ்க்..
(இன்னும் பல..)

என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..

1.அடிக்கடி வைரஸ், மால்வேர் என்று கண்டதயும் உள்ளே விட்டுக்கொண்டு மாரடிக்க வைக்கும்..
2. தூசி இல்லாமல் அடிக்கடி துடைத்து வைக்கசொல்லும்..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் கல்லூரி நட்புக்கள்..
இதற்காகவே, மீண்டும் கல்லூரி நட்பை அனுபவிக்க இந்த கல்வி ஆண்டில் PG படிக்கலாமென முடிவுசெய்து நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்றபோது அதற்கான கடேசி தேதி முடிந்திருந்தது..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(பெரும்பாலான நாட்களைபோல்) கருப்பு நிற பேன்ட், சட்டை மற்றும்ம்ம்.. (போதுமே..)


12.என்ன பார்த்து / கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டைப்பும் போது எதைப்பார்ப்பது..? என் சரி பாதியின் மானிட்டரைதான்..

இப்படி இடுகையிடும்போது வேறு எதையாவது கேட்டுக்கொண்டிருந்தால் கவனம் சிதறுவதால் பிரத்தியேகமாக எதையும் கேட்டுக்கொண்டு இருக்கவில்லை..

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு வர்ணமாக..

14.பிடித்த மணம்?

இதுதான் என்று தனியே ஏதும் இல்லை..

அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது வரும் பெட்ரோல் கலந்த புகைமணம் முதல்..,
அழகான, ஆழமான மணம் தரும் மல்லிகை, ரோஜா போன்றவைவரை அனைத்துமே.

சிறு வயதில்,கிராமத்தில், அந்த பெட்ரோல்புகையினை முகர்வதற்க்காகவே வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம் வண்டியின் பின்னால் ஆஜர்ஆவது வழக்கம்.. (இப்போதெல்லாம் நகர் முழுவதும் இலவசமாய் கிடைக்கிறதே..)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கண்ணுங்களா, ஒருத்தர பிடிக்காததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்..
ஆனா, பிடித்திருப்பதற்கு (என்னால்) காரணமே சொல்ல முடியாது..
சிம்ப்ளி பிடிச்சிருக்கு.. அவ்ளோ தான்..
(பி.கு: இது சத்தியமாக மழுப்பல் இல்லை..)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு
பிப்ரவரி 13, 2003
சேமிப்பின் அவசியம்

(இப்படி குறிப்பிட்டு சொல்வது, 'அனைத்தும்' என்று சொன்னால் மழுப்பல் என்று சொல்வீர்கள் என்பதற்காக அல்ல..)


17. பிடித்த விளையாட்டு?

சிறுவயது முதல் கில்லி, கோலி, பம்பரம், அப்போது விளையாடி (இப்போது பெயர் அறியப்பட்ட) பேய்ப்பந்து....
அதன் பின்பு, இவற்றுடன் கிரிக்கெட்..
இப்போது, கம்பியூட்டர் 3D வீடியோ கேம்கள்..

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்..
உபயம் எங்கள் வீட்டின் அப்போதைய ரிமோட் இல்லா தொலைகாட்சிப்பெட்டி..:)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..

(எல்லாரும் நல்லதையே ஆதரித்தால் மத்தவற்றை யார் கரையேற்றுவது..?
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா..? அதான்..)



20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததீ..
நூறு பேருக்கு நடுவில் தனியாக பார்த்தேன்..

(புரியலையோ..? நண்பர்களுடன் இல்லாமல் தனியே சென்று பார்த்தேன்..)

21.பிடித்த பருவ காலம் எது?

கோடையை தவிர மற்றவை எல்லாம்..

குளிரெனில் போர்த்திக்கொள்ளலாம்..
மழை எனில் முக்காடிட்டுகொள்ளலாம்..
வசந்தகாலமெனில், புதுப்பொழிவுடன் இயற்கை தரும் அழகை ரசிக்கலாம் ..
ஆனால், இந்த கோடைகாலமெனில் எதுவும் செய்ய இயலுவதில்லை.. சீக்கிரம் சோர்ந்தும் போகிறோம். ஆகவே, கோடைக்கு தடா..

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இந்த கணினியை சந்தித்த பின் பேப்பர் வகையறாக்களை கையாள்வது வெகுவாக குறைந்துவிட்டது..
செய்தித்தாள் படிப்பது முதற்கொண்டு கணினியே தேவைப்படுகிறது..

இதில் எங்கத்தபோயி புத்தகம் படிப்பது..
கடந்த இரண்டு நாற்களாக, PDF பார்மேட்டில் உள்ள சுஜாதா அவர்களின் "மீண்டும் ஜீனோ" ஓடிக்கொண்டுள்ளது..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும்.. ஆனால் அதே படத்தை..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த (சில) சத்தங்கள்..
1.வள்ளுவன் மேற்கொண்ட, இன்றைய பொழுதில் என் பெற்றோர் மேற்கொள்ளும், உலக உயிரினங்களின் தேவைக்கான உடைகளை தயாரிக்கும் நெசவுத்தொழிலுக்கு அடிப்படைத்தேவைகளில் ஒன்றான தறி என்று அழைக்கப்படும் இயந்திரத்தின், இன்றைய அட்வான்ஸுடு வெர்சனான பவர்லூம் மெசின்களின் அதிகப்படியான சத்தம்..
(இந்த தொழிலை என் பெற்றோர் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் நல்லெண்ணவகை கர்வமும்கொள்கிறேன்)

2.எங்கள் வீட்டின் பிரத்தியேக FM ஆகிய என் அம்மாவின் தினப்படி ஒலிபரப்புகள்.. எப்படி தான் பேசுறாங்களோ.. தினமும் பேசுறாங்க.. பேசுறாங்க.. பேசிக்கிடே இருக்காங்கப்பா..

அக்கா இருந்தால், அம்மாவின் இந்த திட்டல்களை நாங்கள் இருவரும் சேர்ந்து கலாய்த்து சிரித்தே பொழுதை கழித்துவிடுவோம்..

ஆகவே, அக்கா இருக்கும்போது, அம்மாவின் ஒலிபரப்பு பிடிக்கும்..

பிடிக்காத சத்தம்..

அக்கா இல்லாத போழ்து, கலாய்க்க ஆள் இல்லாததால், அதே ஒலிபரப்பு பிடிக்காது..

(அம்மா.. சும்மானாச்சிக்கும் தான்.. ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கோவா (கல்லூரி நண்பர்களுடன்)..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

பார்த்ததை (விட), கையில் கிடைத்துள்ள படங்களை பார்த்து வரைய இயலும்..
(வரைந்தது நல்லா இருக்குமா இல்லையானு எல்லாம் கேக்கப்பிடாது..)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

1. கூட இருந்தே குழி (முதல் கிணறுவரை) பறிப்பது..
2. பொறாமை..
(எந்த ஆமை வீட்டுக்குள் வந்தாலும் பாலாகாத வீடானது, இந்த பொறாமை வந்தால் மட்டும் விளங்காமல் போய்விடும்..)
3.நண்பனின் பிரிவு.. அதுவும் காரணமே புறியாமல் (or) சொல்லாமல் பிரிந்து / விலகிச்செல்லும் நண்பனாய் மதிக்கப்படுபவனின் பிரிவு..
(ஒன்றுக்கும் அதிகமாக கூறியமைக்கு மன்னிக்கவும்..)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

(எட்டாவது கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு சொன்னது போல்) முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இதுவரை நான் சென்ற அனைத்து இடங்களும்..
(தென்னிந்தியாவை விட்டு எங்கும் சென்றது இல்லை என்பது உபரித்தகவல்)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் நிர்பந்திக்காமல், நிந்திக்காமல், நானும் நிர்பந்தப்படுத்தப்படாமல், நிந்திக்கப்படாமல் நான் நானாக இருக்க ஆசை..
(ஆனால்.. என்ன செய்ய..? இந்தமாதிரி நினைக்கும்போதெல்லாம், "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" பாடல்தான் நினைவிற்கு வருகிறது..)

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இன்னும் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் காத்திருங்கள்.. திருமணம் முடித்து, பின் சொல்கிறேன்..

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

என்ன புதுசா சொல்லிடபோறேன்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவரின் சொத்து..
ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..

********


இதே கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை சொல்வதற்கு

~சக்கரை~ சுரேஷ்

அவர்களை அழைக்கிறேன்..

(ஜமால் அண்ணாவை ஏற்கனவே பலர் புக் செய்துவிட்டமையால், அவரையும், எனது பதிவுலகிற்கு இரண்டாவதாக அறிமுகமான சிபி அண்ணாவை ஏதோ சில காரணங்களால் சில நாட்களாக தொடர்புகொள்ள இயலாமையால், அவரையும், மற்றும் சில காரணங்களால் சிலரையும், பல காரணங்களால் பலரையும் அழைக்க முடியாதது வருத்தமே..)

(சபா.. எப்டியோ) என்னால் முடிந்ததை நண்பனுக்கு செய்துவிட்டேன்.. நல்லபடியா நீங்களும் வந்து எங்கள் அன்புச்சங்கிலியில் இணைய அழைக்கிறேன்.. வாருங்கள் நண்பா..


Thursday, May 21, 2009

காலங்கள் மாறினாலும்..

என்ன தான் மனிதன் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரை வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில குணங்கள் மட்டும் அவனிடம் என்றும் மாறாமல் அப்படியே இருந்துவருகின்றன..

கீழே உள்ள படங்களை பார்த்தாலே உங்களுக்கு விளங்கிவிடும் இவனைப்பற்றி..


1.கற்காலம்..
இங்க ஆரமிச்ச வினை தான்.. இன்னமும் தொடருது..


********************

2. உலோககாலம்..

பார்ரா.. கல்லவிட்டுட்டு, கைல காப்பெல்லாம் போட்டுக்கிட்டு சுத்தியல பயன்படுத்தராங்கப்பா.. நல்ல முன்னேற்றம் தான்.. (ஆமா, அது என்ன உலோகம்னு சொல்லவே இல்லையே..?)

********************

3. இரும்பு காலம்..

ஒரே டமால் டுமீல் தான்..
தட்டுங்க எசமான் தட்டுங்க..
உங்களால தான் இப்போ இங்க இப்டியெல்லாம் போய்ட்டு இருக்கு..

(இரும்பும் உலோகம் தானே.. அதென்ன தனியா இரும்பு காலம்னு எல்லாம் கேக்கபிடாது..)



(என்னாது இது.. துப்பாகிங்களா..? தமாசு தான் போங்க.. :))

4. இருண்ட காலம்..

உங்களால வெச்சாங்க பாருங்க எங்க அமைதிக்கு எல்லாம் ஒரு ஆப்பு.. சபா முடியலை..
இந்த போர் எல்லாம் எப்போ முடியும்னும் தெரியலை..

********************

5. தொழிற்காலம்..

இன்னுமா தட்டிகிட்டு இருக்கீங்க..?!

********************

6. கம்பியூட்டர் காலம்..

சபாஸ்..
என் இனமடா நீ..



என்ன பாஸ்.. தலைப்பு சரி தானே..?

காலங்கள் மாறினாலும்.. நாம் கொண்ட கோலங்கள் மாறினாலும்..
மேலே சொன்னது மட்டும் என்றும் மாறப்போவது இல்லை..

ஆகவே..
நீங்களும் நம் பரம்பரை குணாதிசயத்தை காக்க,
பொட்டி தட்டுங்க..
             தட்டுங்க..
             தட்டிகிட்டே இருங்க..


Tuesday, May 19, 2009

மீண்டும் யூத் ஃபுல் விகடனில்..

அன்புள்ள யூத் ஃபுல் விகடனார் அவர்களுக்கு..

என் "அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரத்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..




சென்ற மாதம் ஏப்ரல் 30 அன்று என் "49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரித்து என்னை மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காட செய்து, மீண்டும் எந்தன் இந்த "அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!" என்ற இடுகையை (இன்று 19.5.2009) பிரசுரித்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் விகடனார் அவர்களுக்கு மீண்டும் (பல முறை) என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மகிழ்ச்சியான இத்தருணத்தில், என்னை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டி, கண்ணாபின்னாவென்று ஆதரிக்கும் என் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பலவற்றை கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்..

என்றும் நன்றிகளுடனும்,
சுரேஷ்.


Friday, May 15, 2009

அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!

தலைப்பு எப்படி இருக்கு..? தலைப்ப கேட்டாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதோ..?

இது நான் (பெங்களூருவில்) சந்தித்த மற்றும் (சென்னையில்) கேள்விபட்ட இரண்டு ஆட்டோ ஓட்டிகளை பற்றியது..


பொதுவாக நமக்கு ஆட்டோ டிரைவர்கள் என்றால் உடனே நியாபகம் வருபவைகளில் சில, அவர்களின், மீட்டருக்கு சூடு வைத்து பணம் பறிக்கும் செயல், கிட்டக்க உள்ள இடத்தை அங்கே இங்கே என்று சுத்தி பயண தூரத்தை அதிகரித்து பணம் பார்ப்பது, எகத்தாளமான பேச்சுகள் நடவடிக்கைகள், சில ஏமாற்று வேலைகள் இவைகள் தான்..


ஆனால் எதிலும் நல்லது கெட்டது உள்ளது போல், இவர்களின் கூட்டத்திலும் சில சேற்றில் முளைத்த செந்தாமரைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு ஆட்டோ டிரைவரை நான் சந்தித்தது பெங்களூருவில்..


சென்ற வருடம், ஆறு ஏழு மாதங்களாக அனிமேசன் துறையில் வேலைதேடிக்கொண்டு இருந்த போழ்து, சமயத்துக்கு உதவும் வகையில், கோயமுத்தூரில், இருவர் மட்டுமே கொண்ட அலுவலகத்தில், மூன்றாவது ஆளாக, வெப் டெக்னாலஜி துறையில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது..


சரி சும்மா இருப்பதற்கு இதிலாவது வேலை செய்யலாமென பொட்டியை கட்டிக்கொண்டு, பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ ஒன்றை அழைத்தேன்.. அவரிடம் வாடகை எவ்வளவு என கேட்டதற்கு அவர் சொன்னது 120 ரூபாய் என நியாபகம்.. சிறிது நேர பேரத்திற்கு பிறகு அவர் சொன்னது 100 ரூபாய்.. நான் கேட்டது 70 ரூபாய்.. ஆனால் அவர் 100 ரூபாய்க்கு கீழ் மசியவில்லை..


சரி தொலையட்டும் என்று ஏறி உக்காந்தவுடன் பேச்சுகொடுக்க ஆரமித்தார்.. நான் கொண்டுசென்ற கணினியின் பெட்டியில் தமிழில் எழுதி இருந்ததை பார்த்து நீங்க தமிழா என கேட்க இருவருமே தமிழ் தான் என அறிந்து இருவருமே மகிழ்ந்தோம்.. அவர் அவரது மனைவி, குழந்தைகள் என்று அவரின் குடும்பத்தை பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டு, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.. இப்போ எங்கே போய் கொண்டு இருக்கிறேன் என்றெல்லாம் விசாரிக்க ஆரமித்தார்..


நானும் வேலை தேடி அலைந்துவிட்டு இப்போது செய்ய போய்க்கொண்டு உள்ள வேலையை பற்றி எல்லாம் சொன்னதும், அவரால் எனக்கு இந்த IT துறையில் உதவ முடியுமெனவும், உதவி வேண்டுமா எனவும் கேட்டார்.. எனக்கு ஆச்சரியம் மேலோங்க, உங்களால் எப்படி முடியுமென கேட்டேன்..


அவர் ஆட்டோ ஓட்டும் போது, சில சமயம் பகுதி நேர வேலையாக சில IT துறையில் மேல்மட்டத்தில் உள்ள பலருக்கு அவர்களின் கார் டிரைவராக வேலை செய்வதாகவும், அதில் பலர் இவருக்கு ரெகுலர் கஸ்டமர் எனவும் சொன்னார்.. இவரின் சிபாரிசின் பேரில் சிலருக்கு வேலையும் கிடைத்திருப்பதாகவும், நான் விரும்பினால் எனக்கும் உதவுவதாகவும் சொன்னார்..


உண்மையில் அவரால் முடியுமோ இல்லையோ, சும்மா உதவிசெய்கிறேன் என்று ஒரு ஜீவன் சொல்வதே நமக்கு புது உற்சாகத்தை கொடுக்குமல்லவா.. இருப்பினும், இப்போது எனக்கு இந்த துறையில் அனுபவம் என்று ஏதும் இல்லை. இப்போது கிடைத்துள்ள வேலையில் ஒருவருடமாவது பணியாற்றி கிடைக்கும் கொஞ்சநஞ்ச அனுபவத்துடன் அடுத்த ஆண்டு வேண்டுமானால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்..


அவரோ விடாப்பிடியாக அவரது கைப்பேசி என்னை கொடுத்து கண்டிப்பாக அழைக்கவேண்டுமென கூறி பாசமழையை பொழிந்துவிட்டார்.. பேருந்து நிலையம் வந்ததும் ஏற்கனவே பேசியது போல் 100 ரூபாயை கொடுக்கவும், நான் சொன்ன 70 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்..


பேசிய பணத்தைவிட அதிகமாக பிடுங்கிக்கொள்ளும் இந்த காலத்தில், இப்படி அவர் செய்தது உண்மையில் உள்ளுக்குள் என்னை ஏதோ செய்துவிட்டது.. பின் நான் வீட்டுக்கு வந்தபிறகு, ஆறு மாதங்கள் கழித்து, சும்மா அழைத்து பார்க்கலாமென அவரை அழைத்தபோது, டக்கென அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தபோது மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்..


ஒருசில நிமிடங்களில் முடிந்துவிட்ட ஒருபயணத்தில் இப்படி ஒரு நல்ல உள்ளத்தினை கண்டத்தில் எனக்கு இப்போவும் ரொம்ப பெருமிதம் உண்டு..

+++++++++++++++


அடுத்து நான் சொல்லப்போவது சென்னையில் ஒரு ஆட்டோ டிரைவரை பற்றி..


என் பக்கத்து வீட்டு இளைஞான் ஒருவர் ஸ்ரீலங்காவில் ரோட்டோரம் நடை பாதையில் துணிவிற்கும் தொழில் செய்துவந்தான். அவன் உள்ள இடமோ ஏதோ கடல் பகுதிக்கு அருகிலாம்.. ஒருநாள் அவன் அந்த கடல் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்த போதுதான் சுனாமி பேரலை உருவாகி அந்த ஏரியாவையே நாசம் செய்து உள்ளது..


எதிர்பாராத இந்த நிகழ்வின் போது மயக்கமடைந்துவிட்ட அவர் கண்விழித்தபோது இருந்தது 35 to 40 கிலோமீட்டர்கள் தள்ளி இதுவரை அவர் சென்றிராத ஏரியாவில் அமைந்த ஒரு சிறு குன்றில் வெறும் ஜட்டியுடன், ஒரு கை உடைந்த நிலையில் படுத்துகிடந்துள்ளார்..


எப்படியோ அங்கு நிவாரண பொருளாக கிடைத்த ஆடைகளை உடுத்திக்கொண்டு, அங்கு இருந்தவர்களின் உதவியுடன் சென்னை இரயில் நிலையம் வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அங்கு இருந்து சொந்த ஊரான ஈரோட்டுக்கு வரவும், அப்போதைய பசிக்கு தேவையான உணவை வாங்கவும் அவரிடம் பணம் இல்லை..


ஒன்றிரண்டு நாட்கள் அவர் சாப்பிட்டு இருக்கவில்லையென நியாபகம்.. அந்த நெடிய பசி மயக்கத்தில், உடைந்த கையுடன், இரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் சுற்றிக்கொண்டு இருந்ததை பார்த்து ஒரு ஆட்டோ டிரைவர் என்னவென்று விசாரிக்க, இவர் நடந்ததை சொல்லி இருக்கிறார்..


உடனே, அந்த ஆட்டோ டிரைவர், அவரின் சொந்த செலவில் இவரின் பசியாற்ற உணவு வாங்கி கொடுத்து, ஊருக்கு இரயில் டிக்கெட்டும் எடுத்துகொடுத்து, அவரை வண்டி ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஊரில் உள்ள இவரின் உறவினருக்கும் போன் செய்து தகவல் கொடுத்து உள்ளார்..


எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் அவர் செய்த அந்த உதவியை என்னவென்று சொல்வது..? ஆட்டோ டிரைவர்கள் என்றாலே, அதுவும் சென்னையில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் என்றாலே வெறுப்பின் உச்சத்தை அடையும் நமக்கு இவரை போன்றவர்கள் கண்ணுக்கு தட்டு படுவதே இல்லை(யோ)..


இவர்கள் மூலம் நான் அறிந்த ஒன்று, எங்கும் எதிலும் நல்லதும் இருக்கும் தீயதும் இருக்கும்.. தீயதை மட்டுமே காண சாத்தியப்பட்ட இடத்திலும் கூட கண்டிப்பாக கொஞ்சமேனும் நல்லவையும் இருக்கும்..

அப்புறம்.., இவர்கள் இருவருக்குமே எனது நன்றிகள் உரித்தாகுக..


Saturday, May 2, 2009

தீவிரவாதியின் வயது 18..

தலைப்ப பாத்துட்டு.. ஏதோ கதை சொல்ல போறேன்னு தப்பா நெனச்சுடாதிங்க..

விஷயம் இதுதான்..

நமது இந்திய சட்டமுறைப்படி குற்றவாளிகள் அவர்களின் வயதினை அடிப்படையாக கொண்டு, 18 வயதிற்கு கீழ் இருப்பின், அவர்களின் வழக்கு சிறார் நீதிமன்றத்திலும், 18 வயதிற்கு மேல் எனில், இந்த சிறார் நீதிமன்றங்களை தவிர்த்து பிற நீதிமன்றங்களில் வழக்கு விசாரிக்கப்படு(மா)ம்..


அண்மையில் நடந்த மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் முக்கியக் குற்றவாளியான அஜ்மல் கஸாப் 18 வயதைக் கடந்திருந்தாரா என்பது பற்றி விசாரணை நடத்துமாறு டாக்டர்கள், சிறைக்காவலர்களுக்கு மும்பை தாக்குதல் குறித்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல். தகிலியானி உத்தரவிட்டு இருந்தார்.


இந்த சோதனைகளின்படி கஸாப் 18 வயதுக்கும் குறைவானவர் என்று தெரியவந்தால், வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றும், சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டால், சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில், கஸாப்பிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அஜ்மலின் எலும்பு வளர்ச்சி, பல் மற்றும் ரத்தம் ஆகியவற்றை பரிசோதித்தில் அவன் 18 வயதுக்கு குறைந்த சிறுவனல்ல, 20 வயதுடைய பெரியவன் என்பது தெரிய வந்ததாக கூறி அதற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் சமர்ப்பித்தார்..


இதெல்லாம் ஊரறிந்த ரகசியம்டா..
இப்போ அதுக்கு என்னான்றங்கிரிங்களா..?
இந்த செய்தியால் எனக்கெழுந்த சந்தேகங்களில் சில..

சந்தேகம் 1: ஒருவேளை, அந்த சோதனையின் போது கஸாப்பின் வயது 18'க்கும் கீழ் என அறியப்பட்டிருப்பின், அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் வெளி வந்திருப்பான். இவ்வளவு பெரிய பயங்கரத்தை நிகழ்த்திய தீவிரவாதியை, அவனது தீவிரவாத செயலை, வெறும் வயது அடிப்படையில் விசாரிப்பது எவ்வளவு ஆபத்தானது..


சந்தேகம் 2: ஒரு வேளை, அவன் உண்மையில் 18 வயதிற்கும் குறைவான சிறுவன் என்பது ஊர்ஜீதமாகி, அவன் 3 ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளியில் வந்தால்..
இதனை ருசிகண்டுவிட்ட அந்நிய நாட்டினர்கள், அவர்களின் இந்தியா மீதான வருங்கால தாக்குதல்களுக்கு முழுக்க முழுக்க 18 வயதிற்கும் குறைவான சிறார்களை பயன்படுத்தும் நிலையில், இந்தியாவின் நிலை என்னாகும்..


சந்தேகம் 3: அந்த அனைத்து 18 வயதிற்கும் குறைவான சிறார் தீவிரவாதிகளை உயிருடன் பிடித்தாலும் வெறும் (அதிகபட்சமாக)3 ஆண்டுகளில் சந்தோசமாக விடுதலை ஆகி, பின் அவர்களின் சேவையை நம் நாட்டில் தொடருவதற்கான சாத்தியக்கூறுகளின் விகிதம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே..?


சந்தேகம் 4: இந்த கூத்தினை காணும், அந்த அந்நிய நாட்டினில் உள்ள, நம் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதில் உள்ள சரி தவறுகளை அறியாத, தொடர்ந்து நம்மீதான தாக்குதலுக்காக மூளை சலவை செய்யப்படும் எந்த சிறாருக்கும் தானும் தன் நாட்டிற்காக, தீவிரவாதமெனும் அவர்களின் சேவையை இந்தியாவில் புரிய ஆர்வம் அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..
மேலும், கஸாப்பை போல உயிருடன் மாட்டினால், எப்படியும் அதிகபட்சம் 3 ஆண்டுகளில் வெளிவந்துவிடலாமே என்ற அசாத்திய நம்பிக்கையும் ஒருபக்கம் இருக்குமல்லவா..?


தீவிரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது,
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது,
தீவிரவாதத்திற்கு மொழி கிடையாது,
தீவிரவாதத்திற்கு நாசவேலையை தவிர எதுவும் தெரியாது,
தீவிரவாதத்திற்கு _____________ கிடையாது,
தீவிரவாதத்திற்கு _____________ கிடையாது,
தீவிரவாதத்திற்கு உள்ள இதுபோன்ற பட்டியலில்..,


தீவிரவாதத்திற்கு வயது வரம்பும் கிடையாது என்பதனை அறிந்தாலன்றி தீவிரவாதத்தினை, தீவிரவாதிகளை கையாள்வதிலும், ஒடுக்குவதிலும் நமக்கு உள்ள சற்று அதிகப்படியான சிரமங்களில் இதுவும் ஒரு பங்கினை கட்டாயம் பெறும்..


தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களை வயதுவரம்பை அடிப்படையாக கொண்டு மனிதர்களாக, சிறார்களாக காணாமல், நாட்டின், நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக காணாவிடில்.. நாளை இதே தீவிரவாதிகள், முன்னால் சிறார் மற்றும் இந்நாள் வளர்ந்த தீவிரவாதிகளாக உலாவருவர்.. ஆனால் அதைகாண நாமும் இருக்கமாட்டோம், நம் நாடும் நம்மிடம் இருக்காது..


வே.கோ: மறக்காம உங்க வோட்டை குத்திட்டு போங்க எசமான்.. குத்திட்டு போங்க..