Monday, September 21, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 4..

வணக்கம் நண்பர்களே..
சென்ற முறையாவது 27 நாட்களுக்கு பிறகுவந்தேன்..
இந்த முறை 32 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் வர முடிந்தது..

இடையில் ஒருவாரகாலம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியபோது வலைச்சரம்வந்து வாழ்த்தி கருத்துக்களும் ஆதரவும் தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

இந்த பகுதியில் ஊரில் சமீபத்தில் நடந்த சில வித்தியாசமான காதல் ஜோடிகளின் கதைகளை கூறுவதாக கூறியிருந்தேன்..

முதல் காதல் ஜோடி "என்ன ஊருடா சாமீய்ய்ய் 2.."ல் கூறப்பட்டிருந்த ஒரு மாநில கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேறு ஜாதி கவுன்சிலரை எங்கள் ஜாதியை சேர்ந்த பெண் காதலித்து மணந்த கதை..

அதில், இப்படி சாத்திவிட்டு ஜாதி திருமணம் செய்தமையால் அந்த ஜோடி ஊரைவிட்டு / ஜாதியை விட்டு தள்ளி வைக்கப்பட்டது பற்றி கூறியிருந்தேன்....
(மேலதிக விபரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக்கவும்..)

$$$$$$


அடுத்து என் பள்ளி தோழன் ஒருவனின் கதை..

இவன் எட்டாம் வகுப்புவரை என்னோடு படித்தவன்..
அதன்பின் எங்கள் குலத்தொழிலான நெசவுத்தொழிலில் மூழ்கடிக்கப்பட்டான்..

பெரும்பாலும் எங்கள் கிராம இளைஞர் இளைஞிகளின் வரலாறு இப்படி பள்ளிப்படிப்பு முடிந்ததும் நெசவுத்தொழில் தள்ளப்பட்டதாகத்தான் இருக்கும்..

இப்போதுதான் கொஞ்சம் முன்னேறி ஒரு சில ஜீவன்கள் தப்பித்தவறி பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிசென்று பட்டதாரிகளாக உலாவருகின்றனர்..

என் பக்கத்துவீட்டு பெண் ஒருவள் அருகிலுள்ள டவுனுக்கு தினமும் சென்று படித்து வந்துள்ளாள்.. இவனோ வீட்டில் நெசவுத்தொழில் செய்பவன்.. இவன் வீடும் அந்த பெண்ணின் வீடும் நேரெதிர் திசையில் உள்ளன..

இவனுக்கு இந்த வீட்டுப்பக்கம் வரும்பழக்கமும் இல்லை.. இந்தபக்கம் இவனுக்கு ஜோலியும் இல்லை..
நடுவில் எங்கு பற்றிக்கொண்டதோ தெரியவில்லை, ஒரு நாள் தொலைப்பேசி அழைப்புவந்தது..

மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..

நானும், சரி விடுடா.. சாதிவிட்டு ஜாதில இழுத்துட்டு போனாதானே பெருசுங்க பிரச்சனை பண்ணும்.. நம்மாளு உசாரா நம்ம ஜாதி பொண்ணையே கரெக்ட் பண்ணிட்டான்ல.. பிரச்சனை இல்லைன்னு சொன்னேன்..

அதற்கு அவர்கள் சொன்னது, அவன் இழுத்துட்டுப்போன பொண்ணு அவனுக்கு தங்கச்சிமுறை வேணும்னு..

எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை.. வர வர நம்ம இளைய தலைமுறை மக்களுக்கு ஊருக்குள்ள இருக்குறவங்களோட உறவுமுறைகூட என்னான்னு தெரியாத அளவுக்கு இடைவெளி அதிகமாகிடுச்சோனு சந்தேகத்தோட கெளம்பிவந்துட்டேன்..

இவனுகளோட இந்தமாதிரி காதலுக்கு எங்க ஊரு பெருசங்களோட சட்டதிட்டமே பரவாலையோனு யோசிக்க வெச்சுட்டான் பயபுள்ள..

$$$$$$


அடுத்து அவனோட பெரியப்பா மகன் பண்ணின கூத்து..

மேல சொன்னவனும், இவனும் ஒரே காலகட்டத்துலதான் கூட்டு சேந்துட்டு லவ்விருப்பங்கபோல..

அவன் வேலைய முடிச்ச அடுத்த கொஞ்ச நாள்ல இவன் ஒரு பொண்ணோட காணாம போய்ட்டான்..

விசாரிச்சதுல அவன் இழுத்துட்டு போனது வேற ஜாதி பொண்ணு..
ஊரைவிட்டு போயி பக்கத்து ஊரு போலிஸ் ஸ்டேசன்ல அடைக்கலமாகி எஸ்கேப் ஆகிட்டாங்க..

அப்புறம் என்னாச்சுனு தெரியலை.. ஒருவாரம் கழிச்சு பொண்ணுமட்டும் ஊர் திரும்புச்சு.. பையன் இன்னைக்கு வரைக்கும் ஆள காணோம்.. கேட்டா தலை மறைவா இருக்கறதா சொல்றாங்க..

தலைமறைவா இருக்கானா.. தலையவே எடுத்தாச்சானு யாருக்குதெரியும்னு தெரியலை..

$$$$$$


அடுத்து என்னோட ரெண்டு வயசு மூத்த பையன் ஒருத்தனோட கதை..

இவனும் கொஞ்சம் உசார் பார்ட்டிதான்.. தன்னோட ஜாதியிலையே கரெக்ட் பண்ணிருக்கான்..

ரெண்டு பேரும் வழக்கம்போல ஒருநாள் காணாம போய்ட்டாங்க..
பொண்ணோட வீட்டுக்கு பயந்து பையன் குடும்பமே ஊரைவிட்டு தலைமறைவாகிட்டாங்க..

பொண்ணோட அப்பன்காரன் பையன் சொந்தக்காரங்களான மேல சொன்ன தங்கச்சிய கட்டின பையன் வீட்ல போய் கேட்டதுக்கு, நீயே பொண்ண அனுப்பி வெச்சுட்டு இங்கவந்து நல்லவன் மாதிரி கேக்குரியானு ஒரு பிட்டபோட.. இவங்க திருப்பி ஒரு ஆயுதத்தபோட கைகலப்பாகி போலிஸ் கேசாகிடுச்சு..

விடிஞ்சா பொண்ணு வீட்ல, புதுசா கட்டிருக்கற வீட்டுக்கு கிரகப்பிரவேசம்..
பொண்ணோட அப்பாவும் மனச தேத்திகிட்டு என்னோட பொண்ணு செத்துபோய்ட்டதா நெனச்சுக்குறேன்.. இனி எனக்கு பொண்ணே இல்லைன்னு நெனச்சுகிட்டு கிரகப்பிரவேசத்த நல்லா பண்ணுவேனுட்டு வைராக்கியத்தோட பண்ணிமுடிச்சாறு..

அன்னைக்கு சாயந்திரம் என்ன நெனச்சாரோ தெரியலை, திடீர்னு விசத்த குடிச்சுட்டாறு.. அப்புறம் அங்க இங்கனு கொண்டுபோய் காப்பாத்திட்டாங்க..

ஆனா.. இப்டி இருபது இருபத்திரெண்டு வருஷம் ஆசை ஆசையா வளத்த பெத்தவங்க மனச நோகடிச்சு அவங்க எப்டித்தான் நல்லா இருப்பாங்களோ தெரியலை..

பெத்தவங்களும் அப்டித்தான்.. அவங்க பசங்க கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து அவ்ளோபாசமா வளக்குற அவங்க, கல்யாணம்னு வந்தா மட்டும் இப்டி ஒரேயடியா அடம் புடிக்கறது ஏன்னு புரியலை..

$$$$$$


என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..

நம்ம மனசு பயபுள்ளைக்கு எப்போமே நல்லதவிட கெட்டத துருவி துருவி பாக்குரதுலதான் பழக்கம் அதிகம்.. என்ன பண்ண..

$$$$$$


சரி.. அடுத்து.. இதுல ரெண்டு பேருமே எங்க ஜாதி காரங்க இல்லைனாலும், எங்க ஊர்ல நடந்த காதல்கதைன்றதால சொல்றேன்..


பொண்ணுவீடும் பையன் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை.. எதிரெதிர் வீடுதாங்க..
கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..

காரணம், ரெண்டுபேத்துக்கும் பத்திகிச்சு..

பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..

ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. பொண்டாட்டிய அவ புது காதலன்கூட சேர்க்கவிடமாட்டேனு அடம்புடிக்குறான்..

ஆமாங்க.. இந்த பையன் எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கு ரூட்டுபோட்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. அந்த பொண்ணுக்கு ரெண்டு கொழந்தைங்கவேற இருக்கு..

அப்டி இப்டின்னு பிரச்சனைய முடிச்சு எனக்கு அந்த கொழந்தைங்களும் வேணாம் புருசனும் வேணாம்னு தூக்கி போட்டுட்டு எதிர்வீட்டு காதலனோட புருஷன் வீட்டுக்கு எதிர் வீட்லயே காதலனோட குடித்தனம் நடத்திட்டு இருக்கா அந்த பொண்ணு..

என்ன ஊருடா சாமீய்ய்ய்..


63 comments:

snkm said...

காதல், இது ஒரு விதம் தான்! அதற்காக காதலையே குறை சொல்ல முடியாது இல்லையா!

இராகவன் நைஜிரியா said...

என்னச் சொல்வது என்றுத் தெரியவில்லை. காதல் படுத்தும் பாடு இப்படித்தான் போலிருக்கு.

அதிலும் கல்யாணம் ஆகி, இரண்டு குழந்தை பெற்றவரை கல்யாணம் பண்ணிகிட்டாரா?

ஒன்னுமே புரியலை உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது...

இராகவன் நைஜிரியா said...

தம்பி சுரேஷ், இந்த இடுகையை ஏன் தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் இணைக்கவில்லை?

தினேஷ் said...

முடியல் சாமீய்ய்ய்ய்ய்..

எத்தனை ....

தினேஷ் said...

/அதற்கு அவர்கள் சொன்னது, அவன் இழுத்துட்டுப்போன பொண்ணு அவனுக்கு தங்கச்சிமுறை வேணும்//

அவ்வ்வ்வ் பயபுள்ளைக இப்படியுமா திரியுது..

கார்ல்ஸ்பெர்க் said...

//தலைமறைவா இருக்கானா.. தலையவே எடுத்தாச்சானு யாருக்குதெரியும்னு தெரியலை..//

:))


//இப்டி இருபது இருபத்திரெண்டு வருஷம் ஆசை ஆசையா வளத்த பெத்தவங்க மனச நோகடிச்சு அவங்க எப்டித்தான் நல்லா இருப்பாங்களோ தெரியலை..//

வாஸ்தவமான கேள்வி..


//என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..//

இதென்ன கேள்வி.. நாம இருக்குற எடத்துல நல்ல விதமா எதாவது நடந்துடுச்சுன்னா, அப்பறம் நம்மளுக்கு என்ன மரியாதை?? :)


//கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..//

இதான் Top!!!


//பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..

ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. //

Really superb.. Laughed a lot..

*இயற்கை ராஜி* said...

ம்ம்..இப்பிடியே ஒவ்வொருத்தர் கதையா சொல்லி அப்படியே உங்க சொந்த கதையையும் சொல்வீங்களா சுரேஷ்

வால்பையன் said...

//இதுல ரெண்டு பேருமே எங்க ஜாதி காரங்க இல்லைனாலும்//

முதலில் உங்க சாதிய அடையாளத்தை கழட்டி வையுங்க நண்பரே!

உங்க அப்பா ஒரு தியாகின்னு சொன்னா அதுல ஒரு பெருமை!
பெரிய தொழிலதிபர்ன்னு சொன்னா அதுல ஒரு பெருமை!

எங்க அப்பா இந்த சாதின்னு சொல்றதுல என்ன பெருமை வேண்டிகிடக்கு!

நீங்களே மாறலைன்னா இனி வரும் சமுதாயம் எப்படி மாறும்!?

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//இதுல ரெண்டு பேருமே எங்க ஜாதி காரங்க இல்லைனாலும்//

முதலில் உங்க சாதிய அடையாளத்தை கழட்டி வையுங்க நண்பரே!

உங்க அப்பா ஒரு தியாகின்னு சொன்னா அதுல ஒரு பெருமை!
பெரிய தொழிலதிபர்ன்னு சொன்னா அதுல ஒரு பெருமை!

எங்க அப்பா இந்த சாதின்னு சொல்றதுல என்ன பெருமை வேண்டிகிடக்கு!

நீங்களே மாறலைன்னா இனி வரும் சமுதாயம் எப்படி மாறும்!?
//
மிஸ்டர் வாலு.. மொதல்ல என்னோட முந்தின இடுகைகள பாருங்க..

நீங்க ஜாதின்னு ஆரமிச்சதும் குதிப்பிங்கனு தெரியும்..

இருந்தாலும் ஊரு ஃபுல்லா இருக்குற மக்கள் ஒரே ஜாதியா இருந்துகிட்டு அவங்க பண்ணிட்டு இருக்குற செயல்கள சொல்றதுல என்ன தப்பு..

ஜாதி'ல என்ன தப்பு இருக்கு.. அத வெச்சுகிட்டு பண்ணுற லோலாயித்தனம்தான் தப்பு..

இப்டி,அந்த ஜாதிய வெச்சுகிட்டு எங்க ஊர்ல என்னமாதிரியான தப்புக்கள் நடந்துட்டு இருக்குன்னு தானே சொல்றேன்..

//
எங்க அப்பா இந்த சாதின்னு சொல்றதுல என்ன பெருமை வேண்டிகிடக்கு!
//
இங்க நான் இந்த ஜாதின்னு ஒன்னும் பெருமை அடிச்சுக்கவும் இல்லையே..

நான் இன்ன மதத்தவன் / இன்ன ஜாதின்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு.. தப்பே இல்லாதப்போ நான் என்னத்துக்கு மாறனும்.. அந்த ஜாதிய வெச்சுகிட்டு யாருக்காவது ஏதாவது கெட்டது பண்ணிருந்தா சொல்லுங்க.. ஜாதியே வேணாம்னு விட்டுடலாம்..


அது இல்லாம சும்மா ஜாதின்னு சொன்னாவே ஏன் இவ்ளோ ஆவேசம்..

நான் ஜாதிவெறி பிடிச்சு அலைஞ்சா மாற சொல்லுங்க.. ஒரு நியாயம் இருக்கு.. நான் இன்ன ஜாதின்னு சொல்றதையே நிறுத்தணும்னா ஏன்னு சொல்லுங்க..

தெரிஞ்சுக்குறேன்..

सुREஷ் कुMAர் said...

//
snkm said...

காதல், இது ஒரு விதம் தான்! அதற்காக காதலையே குறை சொல்ல முடியாது இல்லையா!
//
கண்டிப்பா காதலை குறை சொல்லவே முடியாது நண்பரே..
முதல் வருகைக்கு snkm நன்றி..

வால்பையன் said...

உங்க ஊர்ல நடக்குற காதல்ல முதல் பிரச்சனை சாதி!
உங்களிடம் தான் இந்த சாதி என்ற பெருமை இல்லையென்றாலும் ஒரு இடத்தில் ”அவர்கள் எங்கள் சாதி இல்லையென்றாலும்” என்ற வார்த்தை வருகிறது, அது ஒருவித தற்காப்பு உணர்ச்சி!

சாதி வெறியோடுத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல! அது எந்த வடிவத்திலும் இருக்ககூடாது என்பதே என் கருத்து!

காதல் வெற்றி தோல்வி என்பதை பற்றி எனக்கு கவலையில்லை! ஆனால் சாதி குறிக்கிடுவது பெரும் கவலை!

வால்பையன் said...

//நான் இன்ன ஜாதின்னு சொல்றதையே நிறுத்தணும்னா ஏன்னு சொல்லுங்க..//

அந்த அளவுக்கு உங்க சாதி உங்களுக்கு பெருமை அளிக்குதுன்னா நான் ஒன்னும் சொல்றதுகில்ல!

என்ன எனக்கு தான் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கும், உங்களுக்கு சாதி என்னும் எக்ஸ்ட்ரா பிட்டு தேவையில்லைன்னு நிறுபிக்க!

நீங்க பெருமையா சொல்லிகோங்க நண்பரே! எனக்கு எங்கும் எரிச்சலில்லை!

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

உங்களிடம் தான் இந்த சாதி என்ற பெருமை இல்லையென்றாலும் ஒரு இடத்தில் ”அவர்கள் எங்கள் சாதி இல்லையென்றாலும்” என்ற வார்த்தை வருகிறது, அது ஒருவித தற்காப்பு உணர்ச்சி!
//
இங்கு நான் ”அவர்கள் எங்கள் சாதி இல்லையென்றாலும்” என்று கூறியதற்கு தற்காப்பு உணர்ச்சி காரணமல்ல..

அதற்குதான் என்னோட முந்தைய இடுகைகளை படிக்க சொன்னேன்..

காரணம் நான் இந்த தொடரிடுகையை ஆரமித்தது எங்கள் ஊர் / ஜாதிக்காரன் செய்யும் லோலாயங்கள் சொல்லத்தான்..

இப்படி என் ஜாதிக்காரன் செய்யும் தவறுகளை கூறுமிடத்தில் இப்படி வேறொருவரை பற்றி சொல்ல வேண்டி இருந்ததால்தான் ”அவர்கள் எங்கள் சாதி இல்லையென்றாலும்” என்ற வார்த்தைகளை சேர்க்கவேண்டியதாயிற்று..

இதையே என் ஜாதியில் செய்திருந்தாலும் சொல்ல நான் தயார்.. தங்கை முறை வேண்டியவரையே மணந்ததை சொல்லியபோது, இதனை சொல்ல தற்காப்பு உணர்ச்சி ஒன்றும் தேவை இல்லை அண்ணா..

வால்பையன் said...

//தங்கை முறை வேண்டியவரையே மணந்ததை சொல்லியபோது, //

இதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை!
மாமன் மகளையோ, அத்தை மகளையோ திருமணம் செய்து கொள்வது சரியென்றால் இதுவும் சரிதான்!
இது இன்ஸ்செஸ்ட் இல்லையென்றால் அதுவும் இன்ஸ்செஸ்ட் இல்லை தான்!

கூடப்பிறந்த தங்கையை தான் மணக்கக்கூடாது!

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//நான் இன்ன ஜாதின்னு சொல்றதையே நிறுத்தணும்னா ஏன்னு சொல்லுங்க..//

அந்த அளவுக்கு உங்க சாதி உங்களுக்கு பெருமை அளிக்குதுன்னா நான் ஒன்னும் சொல்றதுகில்ல!

என்ன எனக்கு தான் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கும், உங்களுக்கு சாதி என்னும் எக்ஸ்ட்ரா பிட்டு தேவையில்லைன்னு நிறுபிக்க!

நீங்க பெருமையா சொல்லிகோங்க நண்பரே! எனக்கு எங்கும் எரிச்சலில்லை!
//
பெருமை அளிப்பதற்காக தான் நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்லவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை..

அப்படி ஜாதியை அடிப்படையாக மட்டுமே கொண்டு கிடைக்கும் பெருமையும் தேவை இல்லை..

அதற்காக நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்ல வெட்கப்படவும் ஆவசியமில்லை..

நான் பிறந்த தேதியை சொல்வதுபோல..

நான் இன்ன பாலினத்தவன் என்று சொல்வது போல (உடனே ஆண் ஆதிக்க சிந்தனைனு ஆரமிச்சுடாதிங்க..),

நான் இந்த ஊர்க்காரன் என்று சொல்வது போல்,

நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கு..

வால்பையன் said...

//நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கு.. //

எல்லோரும் 24 மணி நேரத்தில் எதோ ஒன்றில் தான் பிறக்கிறோம்!
அதில் எந்த ஏற்ற தாழ்வுமில்லையே!

ஆனால் சாதியில் உண்டு என்று உங்களுக்கு தெரியவில்லையா!? தெரியாதது மாதிரி நடிக்கிறிங்களா?

ஒரு தலித் தான் என்ன சாதி என்று கூறி கொள்ளமுடியுமா?

ஒருவேளை நீங்கள்..........?

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//தங்கை முறை வேண்டியவரையே மணந்ததை சொல்லியபோது, //

இதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை!
//
இதை எப்படி நீங்க பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையோ, அதேபோல்தான் நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்வதையும் நான் எனக்கு அந்தஸ்து தரும், பெருமைதரும் ஒரு விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை..

முந்தைய பின்னூட்டத்தில் கூறியது போல், இன்ன ஊரைச்சேர்ந்தவன், இன்ன தேதியில் பிறந்தவன் என்று சொல்வது போல்தான் இதுவுமாக நான் கருதுகிறேன்..

வால்பையன் said...

தங்கை முறை பெண்ணை திருமணம் செய்வது தவறு என்று எப்படி உங்களுக்கு சொல்லி கொடுக்கப்படுள்ளதோ, அதே போல் தான் சாதியை சொல்வதும் தவறில்லைன்னு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது!

நீங்கள் கோடிட்ட உதராணம்
சரியானதல்ல! முழங்காலுக்கும், உச்சந்தலைக்கும் சம்பந்தப்படுத்துதல் அது!

ஏன் அது பெரிய விசயமில்லைன்னு விளக்கமா சொல்லியிருக்கேன்!
எங்கேயும் மழுப்பல!

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கு.. //

எல்லோரும் 24 மணி நேரத்தில் எதோ ஒன்றில் தான் பிறக்கிறோம்!
அதில் எந்த ஏற்ற தாழ்வுமில்லையே!

ஆனால் சாதியில் உண்டு என்று உங்களுக்கு தெரியவில்லையா!? தெரியாதது மாதிரி நடிக்கிறிங்களா?

ஒரு தலித் தான் என்ன சாதி என்று கூறி கொள்ளமுடியுமா?

ஒருவேளை நீங்கள்..........?
//

//
வால்பையன் said...

//நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கு.. //

எல்லோரும் 24 மணி நேரத்தில் எதோ ஒன்றில் தான் பிறக்கிறோம்!
அதில் எந்த ஏற்ற தாழ்வுமில்லையே!

ஆனால் சாதியில் உண்டு என்று உங்களுக்கு தெரியவில்லையா!? தெரியாதது மாதிரி நடிக்கிறிங்களா?

ஒரு தலித் தான் என்ன சாதி என்று கூறி கொள்ளமுடியுமா?

ஒருவேளை நீங்கள்..........?
//


சாதியில் ஏற்றத்தாழ்வு உள்ளது (உங்க அளவுக்கு நுணுக்கமா தெரியாட்டியும்) எனக்கும் தெரியும்..

நீங்கள் குறிப்பிடும் அந்த தலித்தானவன் என்னால ஒடுக்கப்பட்டால், என்னால் ஜாதியை காரணம்காட்டி அவமதிக்கப்பட்டால் அப்போது நான் ஜாதியை கூறிக்கொள்வது சத்தியமாக தவறுதான்..

நீங்கள் சொன்ன அந்த சமுதாயத்திலும் எனக்கு நண்பர்கள் உண்டு.. அதனால் என் பெற்றோர் ஒன்றும் என்னை வெறுக்கவும் இல்லையே..

என்னை இப்படி இருக்காதே என்று தடுப்பதும் இல்லையே..

எங்குமே தவறுகள் உள்ளன..

ஜாதியில் தவறு ஏதும் இல்லை.. அதனை வைத்துக்கொண்டு சிலர் செய்யும் அட்டூழியம் தான் ஜாதியை தவறாய் எண்ண வைக்கிறது..

இதுவும் உலகிலுள்ள இசுலாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்பதுபோன்ற மாயையை உண்டாக்குவது போன்றதே..

सुREஷ் कुMAர் said...

என் ஜாதியில் உள்ள 99.99% மக்களும் ஜாதிவெறி பிடித்து அலைந்தாலும், நான் ஒழுக்கமுள்ளவனாய் இருக்கும் வரை நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு சங்கடம் இல்லை..

ஜாதி எதுவாயினும் தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம்..

வால்பையன் said...

//நீங்கள் குறிப்பிடும் அந்த தலித்தானவன் என்னால ஒடுக்கப்பட்டால், என்னால் ஜாதியை காரணம்காட்டி அவமதிக்கப்பட்டால் அப்போது நான் ஜாதியை கூறிக்கொள்வது சத்தியமாக தவறுதான்..//


உங்களுக்கு சரியான அரசியல் புரியவில்லையா?
நீங்கள் தலித்தாக இருந்தால் இவ்வளவு தைரியமாக நான் சாதியை சொல்லுவேன் என்பீர்களா?

நீங்கள் காயம்படாத இடத்தில் இருப்பதால் குதிப்பேன் என்கிறீர்கள்!
எல்லோரும் குதிக்க முடியுமா?

இஸ்லாத்தையும் இழுத்த நுண்ணரசியலை பாராட்டுகிறேன்!
தீவிரவாதத்திற்கும் சாதி அரசியலுக்கும் ஆயுதங்கள் மட்டுமே வித்தியாசம்!

தீவிரவாதத்தில் மக்கள் இறந்தது போல் சாதி சண்டையிலும் இறந்திருக்கிறார்கள்!
இஸ்லாம் அனைவரும் தீவிரவாதியல்ல, ஆனால் சாதி வெறியர்கள் தீவிரவாதிகள், அவர்கள் கொலையும் செய்யக்கூடும்!

வால்பையன் said...

//என் ஜாதியில் உள்ள 99.99% மக்களும் ஜாதிவெறி பிடித்து அலைந்தாலும், நான் ஒழுக்கமுள்ளவனாய் இருக்கும் வரை நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு சங்கடம் இல்லை..//

திரும்பவும் ஒரு தடவை படிச்சி பாருங்க!
சாதி வெறி, சாதியை சொல்லி கொள்ளுதல் ரெண்டுக்கும் என வித்தியாசம்?

सुREஷ் कुMAர் said...

வாஸ்தவம் தான்..

ஆனால் இப்படி நீ இன்ன சாதிக்காரன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள் என்று யாரும் சொல்லிக்கொடுத்ததை நினைவில்லை..

அன்றாட பழக்கவழக்கத்தில் வந்திருக்கலாம்..

ஆனாலும்.. மீண்டும் பழைய பின்னூட்டத்தையே கூறுகிறேன்..

அதனால்தான் கூறுகிறேன்.. ஜாதியின் பெயரால் எவனோ செய்யும் தவறுக்கு நான் என் ஜாதியை சொல்லிக்கொள்ளகூடாது..

//
வால்பையன் said...

உங்களுக்கு சரியான அரசியல் புரியவில்லையா?
நீங்கள் தலித்தாக இருந்தால் இவ்வளவு தைரியமாக நான் சாதியை சொல்லுவேன் என்பீர்களா?

நீங்கள் காயம்படாத இடத்தில் இருப்பதால் குதிப்பேன் என்கிறீர்கள்!
எல்லோரும் குதிக்க முடியுமா?
//
நான் காயம் பட்டதில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்..
அது இருக்கட்டும்..

நான் உலகில் நடக்கும் அனைத்து ஜாதி அரசியலைப்பற்றி இங்கு கூற வரவில்லை..

அது கூறி மாளாத ஒன்று..

இந்த இடுகையின் நோக்கம் தலித்துகளுக்காகவும் இல்லை, மற்ற எந்த ஜாதிபிரச்சனையை பற்றியும் இல்லை..

எங்கள் ஊரில் ஜாதியின் பெயரால் நடக்கும் முரண்பட்ட செயல்களைத்தான் கூற வந்துள்ளேன்..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

சாதி வெறி, சாதியை சொல்லி கொள்ளுதல் ரெண்டுக்கும் என வித்தியாசம்?
//
ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்கிறீர்களா..

கண்டிப்பாக உள்ளது..

நான் ஆண் என்று சொல்லிக்கொள்வதற்கும்,
நான் ஆண்.. பெண்ணினம் எனக்கு அடிமைப்பட்டது என்று ஆணாதிக்க சிந்தனையுடன் சொல்லிக்கொள்வதற்கும் வித்தியாசம் இல்லை என்கிறீர்களா..

வால்பையன் said...

//நீ இன்ன சாதிக்காரன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள் என்று யாரும் சொல்லிக்கொடுத்ததை நினைவில்லை..//

அவர்களிடமே சாதி மட்டும் எதுக்குன்னு கேட்க வேண்டியது தானே!?

//ஜாதியின் பெயரால் எவனோ செய்யும் தவறுக்கு நான் என் ஜாதியை சொல்லிக்கொள்ளகூடாது..//

சாதி என்பது அடையாலம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வாகவே மாறிவிட்டது!
கிட்டத்தட்ட சைக்கோதனம்!, எப்போ என்ன பண்ணும்னு தெரியாது!

//எங்கள் ஊரில் ஜாதியின் பெயரால் நடக்கும் முரண்பட்ட செயல்களைத்தான் கூற வந்துள்ளேன்.. //

உண்மை தான் காதல் என்ற ஒன்று சாதியின் பெயரால் அடைந்த பிரச்சனைகள் தான் புரியுது, ஆனால் எழுதும் உங்களுக்கே சாதியின் பிரச்சனை தெரியவில்லை என்றால் பதிவெழுதி பிரயோஜனம் இல்லையே!

//நான் ஆண் என்று சொல்லிக்கொள்வதற்கும்,
நான் ஆண்.. பெண்ணினம் எனக்கு அடிமைப்பட்டது என்று ஆணாதிக்க சிந்தனையுடன் சொல்லிக்கொள்வதற்கும் வித்தியாசம் இல்லை என்கிறீர்களா.. //


அண்ணே புரிஞ்சிகிட்டு தான் பேசுறிங்களா?

ஆணியம், பெண்ணியம் என்ற களம் வேறு, சாதியியம் என்ற களம் வேறு!
உங்களுக்கு புரிதலில் சிக்கலா இல்லை எனக்கு தெளிவு படுத்தலில் சிக்கலான்னு தெரியல!

நிதானமா நாளைக்கு மறுபடியும் பேசலாம்!

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//நீ இன்ன சாதிக்காரன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள் என்று யாரும் சொல்லிக்கொடுத்ததை நினைவில்லை..//

அவர்களிடமே சாதி மட்டும் எதுக்குன்னு கேட்க வேண்டியது தானே!?
//

தீங்கு விளைவிக்கும் ஏதும் வேண்டாம் என்று ஒதுக்க துவங்கினால் இறுதியில் கடேசியில் எல்லாத்திடமும் இருந்து நாம் விலகி இருப்போம்..

எதில்தான் தீமை இல்லை..

//
சாதி என்பது அடையாலம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வாகவே மாறிவிட்டது!
கிட்டத்தட்ட சைக்கோதனம்!, எப்போ என்ன பண்ணும்னு தெரியாது!
//
யாரோ சிலர் சாதிவெறி பிடித்து சைக்கோத்தனமாக இருப்பதால் நான் ஏன் சாதியை அடையாளப்படுத்தகூடாது..

வால்பையன் said...

//நான் ஏன் சாதியை அடையாளப்படுத்தகூடாது..//

உங்கள் விருப்பம்!

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...
உண்மை தான் காதல் என்ற ஒன்று சாதியின் பெயரால் அடைந்த பிரச்சனைகள் தான் புரியுது, ஆனால் எழுதும் உங்களுக்கே சாதியின் பிரச்சனை தெரியவில்லை என்றால் பதிவெழுதி பிரயோஜனம் இல்லையே!
//

யாருக்குமே கற்றது கைமண்ணளவு..
சாதியால் நீங்கள் கண்ட பிரச்சனை பலது இருக்கலாம்..
அவற்றை சொல்லும் நீங்கள் "வால்பையன்"..

அதே அனுபவம், அதே கருத்து, அதே அளவுக்கு சந்தித்த பிரச்சனைகளுடன், அதே வெளிப்பதுத்தும் திறன் என்று எல்லாமும் உங்களுடையதுபோலவே இருந்தால் மட்டுமே பதிவெழுத வேண்டுமெனில் நான் நானாக இருக்க முடியாது.. நானும் வால்பையனாக இருக்கவேண்டும்..

எதையுமே 100% அறிந்து எழுதுவதென்பது நடவாதவொன்று.. நான் எழுதுவதற்கு, கொஞ்சமாச்சும் ஊர் நிகழ்வுகளை சொல்ல இந்த அனுபவம் போதுமென்று நினைத்ததால் என் வயதிற்கு உண்டான என் அனுபவங்களை எழுதுகிறேன்..

இன்னும் ஒரு 30 வருடங்கள் கழித்து இதேசெய்திகளை மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் அப்போது சொல்லுங்கள் நான் இப்படி பதிவெழுதி பயனில்லையென்று..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...
அண்ணே புரிஞ்சிகிட்டு தான் பேசுறிங்களா?
//
அண்ணே'வா..அவ்வ்வ்வ்வ்வ்.. மக்களே இத கேக்க யாருமே இல்லையா..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

ஆணியம், பெண்ணியம் என்ற களம் வேறு, சாதியியம் என்ற களம் வேறு!
உங்களுக்கு புரிதலில் சிக்கலா இல்லை எனக்கு தெளிவு படுத்தலில் சிக்கலான்னு தெரியல!

நிதானமா நாளைக்கு மறுபடியும் பேசலாம்!
//
ஆம் களம் வேறுதான்.. நான் வித்தியாசப்படுத்த ஒரு உதாரணம் கொணர்ந்தேன்.. அவ்வளவே..

களம் எதுவானாலும் அந்த இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளதா இல்லையா என்பதே நான் கேட்பது..

सुREஷ் कुMAர் said...

எப்படி அவை இரண்டுக்கும் (நான் ஆண் என்று சொல்லிக்கொள்வதற்கும்,
நான் ஆண்.. பெண்ணினம் எனக்கு அடிமைப்பட்டது என்று ஆணாதிக்க சிந்தனையுடன் சொல்லிக்கொள்வதற்கும் )வித்தியாசம் உள்ளதோ அதுபோல்தான் சாதியை சொல்லிக்கொள்வதற்கும், சாதி வெறிக்கும் வித்தியாசம் உள்ளது..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

என்னச் சொல்வது என்றுத் தெரியவில்லை. காதல் படுத்தும் பாடு இப்படித்தான் போலிருக்கு.

அதிலும் கல்யாணம் ஆகி, இரண்டு குழந்தை பெற்றவரை கல்யாணம் பண்ணிகிட்டாரா?

ஒன்னுமே புரியலை உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது...
//
எல்லாம் புரிந்தால் நாம் ஞியாநி ஆகிடுவோம்ல..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

தம்பி சுரேஷ், இந்த இடுகையை ஏன் தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் இணைக்கவில்லை?
//
காலை எழுந்து இணைக்கலாம்'நு இருந்தேன்..

காலைல ஆபீஸ்வந்ததும் வேலைல மூழ்கிட்டதால உடனே இணைக்க முடியலை..

தமிழ்மணம்'ல அவ்ளோ செக்கிரம் என்னால் ஓட்டும் போட முடியறது இல்லை..

login பண்ணினா login ஆகவும் மாட்டேங்குது..

அதான் நொந்துபோய் விட்டுட்டேன்..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

முடியல் சாமீய்ய்ய்ய்ய்..

எத்தனை ....
//
கொஞ்சம் கெலருனா இன்னும் கெடைக்கும்.. சரி.. சமீபத்தில் நடந்த சிலத மட்டும் சொல்லலாமேன்னு நிறுத்திட்டேன்..

सुREஷ் कुMAர் said...

//
கார்ல்ஸ்பெர்க் said...

//தலைமறைவா இருக்கானா.. தலையவே எடுத்தாச்சானு யாருக்குதெரியும்னு தெரியலை..//

:))


//இப்டி இருபது இருபத்திரெண்டு வருஷம் ஆசை ஆசையா வளத்த பெத்தவங்க மனச நோகடிச்சு அவங்க எப்டித்தான் நல்லா இருப்பாங்களோ தெரியலை..//

வாஸ்தவமான கேள்வி..


//என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..//

இதென்ன கேள்வி.. நாம இருக்குற எடத்துல நல்ல விதமா எதாவது நடந்துடுச்சுன்னா, அப்பறம் நம்மளுக்கு என்ன மரியாதை?? :)


//கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..//

இதான் Top!!!


//பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..

ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. //

Really superb.. Laughed a lot..
//

அருணு..

கார்த்திக்கு..

பாபு..

நல்லா இருக்கிங்களா..

எங்க ரொம்பநாளா சாட்ல காணோம்..


//
//பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..

ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. //

Really superb.. Laughed a lot..
//
ஏன்யா.. அவ புருஷன் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா..

सुREஷ் कुMAர் said...

//
இய‌ற்கை said...

ம்ம்..இப்பிடியே ஒவ்வொருத்தர் கதையா சொல்லி அப்படியே உங்க சொந்த கதையையும் சொல்வீங்களா சுரேஷ்
//
ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்க கற்பனை வளம்ங்க..

RAMYA said...

//
இவனுக்கு இந்த வீட்டுப்பக்கம் வரும்பழக்கமும் இல்லை.. இந்தபக்கம் இவனுக்கு ஜோலியும் இல்லை..
நடுவில் எங்கு பற்றிக்கொண்டதோ தெரியவில்லை, ஒரு நாள் தொலைப்பேசி அழைப்புவந்தது..
//

நல்ல அலசல் ம்ம் அப்புறம்.....

RAMYA said...

//
மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..
//

ஐயோ ரொம்ப பெரிய பிரச்சனை ஆகி இருக்குமே!

RAMYA said...

//
மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..
//

ஐயோ ரொம்ப பெரிய பிரச்சனை ஆகி இருக்குமே!

RAMYA said...

//
மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..
//

ஐயோ ரொம்ப பெரிய பிரச்சனை ஆகி இருக்குமே!

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
நானும், சரி விடுடா.. சாதிவிட்டு ஜாதில இழுத்துட்டு போனாதானே பெருசுங்க பிரச்சனை பண்ணும்.. நம்மாளு உசாரா நம்ம ஜாதி பொண்ணையே கரெக்ட் பண்ணிட்டான்ல.. பிரச்சனை இல்லைன்னு சொன்னேன்..
//


ஆனாலும் அறிவுரை சொல்ரதுலே நீ நெம்ப அறிவாளிப்பா!

RAMYA said...

//
அதற்கு அவர்கள் சொன்னது, அவன் இழுத்துட்டுப்போன பொண்ணு அவனுக்கு தங்கச்சிமுறை வேணும்னு..
//

ஐயோ இது என்னா??

RAMYA said...

//
எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை.. வர வர நம்ம இளைய தலைமுறை மக்களுக்கு ஊருக்குள்ள இருக்குறவங்களோட உறவுமுறைகூட என்னான்னு தெரியாத அளவுக்கு இடைவெளி அதிகமாகிடுச்சோனு சந்தேகத்தோட கெளம்பிவந்துட்டேன்..
//

நல்ல அறிவு பூர்வமான சந்தேகம்தான்!

அதே அவங்க யோசிக்கலையே!

RAMYA said...

//
இவனுகளோட இந்தமாதிரி காதலுக்கு எங்க ஊரு பெருசங்களோட சட்டதிட்டமே பரவாலையோனு யோசிக்க வெச்சுட்டான் பயபுள்ள..
//

ஆமா ஆமா ரொம்ப யோசிக்க வேண்டாம்!

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..

நம்ம மனசு பயபுள்ளைக்கு எப்போமே நல்லதவிட கெட்டத துருவி துருவி பாக்குரதுலதான் பழக்கம் அதிகம்.. என்ன பண்ண..
//

அப்படிதான் நான் இப்போ யோசிச்சேன் தம்பி. ஒரே ஓட்டமா இருக்கு. படிக்க மனதிற்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

RAMYA said...

//
பொண்ணுவீடும் பையன் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை.. எதிரெதிர் வீடுதாங்க..
கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..
//

அது சரி, ரொம்ப விலாவரியா வெவரம் இருக்கு :))

RAMYA said...

//
பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..
//

மொதல்ல இதே மட்டும் படிச்சவுடனே எனக்கு ஒண்ணுமே புரியலே :((

//
ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. பொண்டாட்டிய அவ புது காதலன்கூட சேர்க்கவிடமாட்டேனு அடம்புடிக்குறான்..
//

இதே படிச்சப்புறம்தான் புரிஞ்சிது அதுலே இருக்குற உள்குத்து.

ம்ம் ஒன்னும் தேறுற மாதிரி இல்லை :(

RAMYA said...

//
ஆமாங்க.. இந்த பையன் எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கு ரூட்டுபோட்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. அந்த பொண்ணுக்கு ரெண்டு கொழந்தைங்கவேற இருக்கு..

அப்டி இப்டின்னு பிரச்சனைய முடிச்சு எனக்கு அந்த கொழந்தைங்களும் வேணாம் புருசனும் வேணாம்னு தூக்கி போட்டுட்டு எதிர்வீட்டு காதலனோட புருஷன் வீட்டுக்கு எதிர் வீட்லயே காதலனோட குடித்தனம் நடத்திட்டு இருக்கா அந்த பொண்ணு..
//

ஐயோ நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் தம்பி?

நம்ம கலாச்சாரம் சீர்கேடு அப்படின்னு சொல்லலாமா?

என்னோவோ போங்க! நாம் ஏன் இவர்கள் மத்தியில் பொறந்தோமோ தெரியலை :((

RAMYA said...

//
என்ன ஊருடா சாமீய்ய்ய்..
//

ஆமாம் நான் இதேதான் கேக்குறேன்! ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லேப்பா!

பத்திக்கு பத்தி ஒரே சரவெடி.

உங்களுக்கு தவறுன்னு புரியறது உங்க நண்பர்களுக்கு ஏனோ புரியவில்லை.

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
[[
நல்ல அலசல் ம்ம் அப்புறம்.....

//
மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..
//

ஐயோ ரொம்ப பெரிய பிரச்சனை ஆகி இருக்குமே!
]]

ஆமா.. அடிதடி வம்பு வழக்கு எல்லாம் ஆச்சு..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
//
எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை.. வர வர நம்ம இளைய தலைமுறை மக்களுக்கு ஊருக்குள்ள இருக்குறவங்களோட உறவுமுறைகூட என்னான்னு தெரியாத அளவுக்கு இடைவெளி அதிகமாகிடுச்சோனு சந்தேகத்தோட கெளம்பிவந்துட்டேன்..
//

நல்ல அறிவு பூர்வமான சந்தேகம்தான்!

அதே அவங்க யோசிக்கலையே!
]]
இததான் காதலுக்கு கண்ணில்லைன்றதோ..

[[
//
இவனுகளோட இந்தமாதிரி காதலுக்கு எங்க ஊரு பெருசங்களோட சட்டதிட்டமே பரவாலையோனு யோசிக்க வெச்சுட்டான் பயபுள்ள..
//

ஆமா ஆமா ரொம்ப யோசிக்க வேண்டாம்!
]]
ஆமாங்க..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
[[
//
என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..

நம்ம மனசு பயபுள்ளைக்கு எப்போமே நல்லதவிட கெட்டத துருவி துருவி பாக்குரதுலதான் பழக்கம் அதிகம்.. என்ன பண்ண..
//

அப்படிதான் நான் இப்போ யோசிச்சேன் தம்பி. ஒரே ஓட்டமா இருக்கு. படிக்க மனதிற்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
]]
ஆஹா.. இடுகையிடுறேன் பேர்வழினு உங்கள கஷ்ட்டப்படுத்திட்டனா.. மன்னிச்சுடுங்க அக்கா..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
[[
//
பொண்ணுவீடும் பையன் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை.. எதிரெதிர் வீடுதாங்க..
கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..
//

அது சரி, ரொம்ப விலாவரியா வெவரம் இருக்கு :))
]]
பின்ன..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
[[
//
பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..
//

மொதல்ல இதே மட்டும் படிச்சவுடனே எனக்கு ஒண்ணுமே புரியலே :((

//
ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. பொண்டாட்டிய அவ புது காதலன்கூட சேர்க்கவிடமாட்டேனு அடம்புடிக்குறான்..
//

இதே படிச்சப்புறம்தான் புரிஞ்சிது அதுலே இருக்குற உள்குத்து.

ம்ம் ஒன்னும் தேறுற மாதிரி இல்லை :(
//
ம்ம்.. சும்மா மொதோ வரியா மட்டும் படிச்சா அப்டித்தான்..

ஒன்னும் தேறாதா.. இந்த இடுகையா.. இடுகலைல சொல்லப்பட்டிருப்பவங்களா..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
[[
//
ஆமாங்க.. இந்த பையன் எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கு ரூட்டுபோட்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. அந்த பொண்ணுக்கு ரெண்டு கொழந்தைங்கவேற இருக்கு..

அப்டி இப்டின்னு பிரச்சனைய முடிச்சு எனக்கு அந்த கொழந்தைங்களும் வேணாம் புருசனும் வேணாம்னு தூக்கி போட்டுட்டு எதிர்வீட்டு காதலனோட புருஷன் வீட்டுக்கு எதிர் வீட்லயே காதலனோட குடித்தனம் நடத்திட்டு இருக்கா அந்த பொண்ணு..
//

ஐயோ நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் தம்பி?

நம்ம கலாச்சாரம் சீர்கேடு அப்படின்னு சொல்லலாமா?

என்னோவோ போங்க! நாம் ஏன் இவர்கள் மத்தியில் பொறந்தோமோ தெரியலை :((
]]
எதுனா சொல்லணும்தான்.. என்னத்த சொல்ல..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
[[
//
என்ன ஊருடா சாமீய்ய்ய்..
//

ஆமாம் நான் இதேதான் கேக்குறேன்! ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லேப்பா!

பத்திக்கு பத்தி ஒரே சரவெடி.

உங்களுக்கு தவறுன்னு புரியறது உங்க நண்பர்களுக்கு ஏனோ புரியவில்லை.
]]
எல்லாம் வயசுகோளாருங்க.. ஒன்னும் பண்ணமுடியாது..

Anonymous said...

உங்க ஊரு கதை மட்டுமல்ல இது நாட்டில் நடப்பவை தான்...

இங்கு நடந்த விவாதமும் பலவற்றை தெளிவுபடுத்துகிறது...

ஹேய் நம்ம சினிமாக்காரங்க படிச்சா புதுசா இதில் ஒரு கதை எழுதி படமாக்கிடுவாங்க....

நட்புடன் ஜமால் said...

என்னப்பா இனி இருக்கு சொல்ல

அடிச்சி ஆடிட்டாங்க போல ...

ப்ரியமுடன் வசந்த் said...

வாழு இல்லாட்டினா வாழவிடு..

நாமக்கல் சிபி said...

//இப்டி இருபது இருபத்திரெண்டு வருஷம் ஆசை ஆசையா வளத்த பெத்தவங்க மனச நோகடிச்சு அவங்க எப்டித்தான் நல்லா இருப்பாங்களோ தெரியலை..//

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்! ஒரு பக்கமா பார்த்துட்டு இப்படி சபிக்கக் கூடாது!

அவங்க (காதலிச்சி வீட்டை விட்டு போயி திருமணம் செய்து கொள்கிறவர்கள்) சூழ்நிலையும் என்னன்னு பார்க்கணும்!

ISR Selvakumar said...

ஊர்க்கதையை நம் கதை போல சுவாரசியமாக எழுதியிருக்கின்றீர்கள். அடுத்ததையும் வாசித்துவிட்டேன்.