Monday, September 21, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 4..

வணக்கம் நண்பர்களே..
சென்ற முறையாவது 27 நாட்களுக்கு பிறகுவந்தேன்..
இந்த முறை 32 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் வர முடிந்தது..

இடையில் ஒருவாரகாலம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியபோது வலைச்சரம்வந்து வாழ்த்தி கருத்துக்களும் ஆதரவும் தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

இந்த பகுதியில் ஊரில் சமீபத்தில் நடந்த சில வித்தியாசமான காதல் ஜோடிகளின் கதைகளை கூறுவதாக கூறியிருந்தேன்..

முதல் காதல் ஜோடி "என்ன ஊருடா சாமீய்ய்ய் 2.."ல் கூறப்பட்டிருந்த ஒரு மாநில கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேறு ஜாதி கவுன்சிலரை எங்கள் ஜாதியை சேர்ந்த பெண் காதலித்து மணந்த கதை..

அதில், இப்படி சாத்திவிட்டு ஜாதி திருமணம் செய்தமையால் அந்த ஜோடி ஊரைவிட்டு / ஜாதியை விட்டு தள்ளி வைக்கப்பட்டது பற்றி கூறியிருந்தேன்....
(மேலதிக விபரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக்கவும்..)

$$$$$$


அடுத்து என் பள்ளி தோழன் ஒருவனின் கதை..

இவன் எட்டாம் வகுப்புவரை என்னோடு படித்தவன்..
அதன்பின் எங்கள் குலத்தொழிலான நெசவுத்தொழிலில் மூழ்கடிக்கப்பட்டான்..

பெரும்பாலும் எங்கள் கிராம இளைஞர் இளைஞிகளின் வரலாறு இப்படி பள்ளிப்படிப்பு முடிந்ததும் நெசவுத்தொழில் தள்ளப்பட்டதாகத்தான் இருக்கும்..

இப்போதுதான் கொஞ்சம் முன்னேறி ஒரு சில ஜீவன்கள் தப்பித்தவறி பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிசென்று பட்டதாரிகளாக உலாவருகின்றனர்..

என் பக்கத்துவீட்டு பெண் ஒருவள் அருகிலுள்ள டவுனுக்கு தினமும் சென்று படித்து வந்துள்ளாள்.. இவனோ வீட்டில் நெசவுத்தொழில் செய்பவன்.. இவன் வீடும் அந்த பெண்ணின் வீடும் நேரெதிர் திசையில் உள்ளன..

இவனுக்கு இந்த வீட்டுப்பக்கம் வரும்பழக்கமும் இல்லை.. இந்தபக்கம் இவனுக்கு ஜோலியும் இல்லை..
நடுவில் எங்கு பற்றிக்கொண்டதோ தெரியவில்லை, ஒரு நாள் தொலைப்பேசி அழைப்புவந்தது..

மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..

நானும், சரி விடுடா.. சாதிவிட்டு ஜாதில இழுத்துட்டு போனாதானே பெருசுங்க பிரச்சனை பண்ணும்.. நம்மாளு உசாரா நம்ம ஜாதி பொண்ணையே கரெக்ட் பண்ணிட்டான்ல.. பிரச்சனை இல்லைன்னு சொன்னேன்..

அதற்கு அவர்கள் சொன்னது, அவன் இழுத்துட்டுப்போன பொண்ணு அவனுக்கு தங்கச்சிமுறை வேணும்னு..

எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை.. வர வர நம்ம இளைய தலைமுறை மக்களுக்கு ஊருக்குள்ள இருக்குறவங்களோட உறவுமுறைகூட என்னான்னு தெரியாத அளவுக்கு இடைவெளி அதிகமாகிடுச்சோனு சந்தேகத்தோட கெளம்பிவந்துட்டேன்..

இவனுகளோட இந்தமாதிரி காதலுக்கு எங்க ஊரு பெருசங்களோட சட்டதிட்டமே பரவாலையோனு யோசிக்க வெச்சுட்டான் பயபுள்ள..

$$$$$$


அடுத்து அவனோட பெரியப்பா மகன் பண்ணின கூத்து..

மேல சொன்னவனும், இவனும் ஒரே காலகட்டத்துலதான் கூட்டு சேந்துட்டு லவ்விருப்பங்கபோல..

அவன் வேலைய முடிச்ச அடுத்த கொஞ்ச நாள்ல இவன் ஒரு பொண்ணோட காணாம போய்ட்டான்..

விசாரிச்சதுல அவன் இழுத்துட்டு போனது வேற ஜாதி பொண்ணு..
ஊரைவிட்டு போயி பக்கத்து ஊரு போலிஸ் ஸ்டேசன்ல அடைக்கலமாகி எஸ்கேப் ஆகிட்டாங்க..

அப்புறம் என்னாச்சுனு தெரியலை.. ஒருவாரம் கழிச்சு பொண்ணுமட்டும் ஊர் திரும்புச்சு.. பையன் இன்னைக்கு வரைக்கும் ஆள காணோம்.. கேட்டா தலை மறைவா இருக்கறதா சொல்றாங்க..

தலைமறைவா இருக்கானா.. தலையவே எடுத்தாச்சானு யாருக்குதெரியும்னு தெரியலை..

$$$$$$


அடுத்து என்னோட ரெண்டு வயசு மூத்த பையன் ஒருத்தனோட கதை..

இவனும் கொஞ்சம் உசார் பார்ட்டிதான்.. தன்னோட ஜாதியிலையே கரெக்ட் பண்ணிருக்கான்..

ரெண்டு பேரும் வழக்கம்போல ஒருநாள் காணாம போய்ட்டாங்க..
பொண்ணோட வீட்டுக்கு பயந்து பையன் குடும்பமே ஊரைவிட்டு தலைமறைவாகிட்டாங்க..

பொண்ணோட அப்பன்காரன் பையன் சொந்தக்காரங்களான மேல சொன்ன தங்கச்சிய கட்டின பையன் வீட்ல போய் கேட்டதுக்கு, நீயே பொண்ண அனுப்பி வெச்சுட்டு இங்கவந்து நல்லவன் மாதிரி கேக்குரியானு ஒரு பிட்டபோட.. இவங்க திருப்பி ஒரு ஆயுதத்தபோட கைகலப்பாகி போலிஸ் கேசாகிடுச்சு..

விடிஞ்சா பொண்ணு வீட்ல, புதுசா கட்டிருக்கற வீட்டுக்கு கிரகப்பிரவேசம்..
பொண்ணோட அப்பாவும் மனச தேத்திகிட்டு என்னோட பொண்ணு செத்துபோய்ட்டதா நெனச்சுக்குறேன்.. இனி எனக்கு பொண்ணே இல்லைன்னு நெனச்சுகிட்டு கிரகப்பிரவேசத்த நல்லா பண்ணுவேனுட்டு வைராக்கியத்தோட பண்ணிமுடிச்சாறு..

அன்னைக்கு சாயந்திரம் என்ன நெனச்சாரோ தெரியலை, திடீர்னு விசத்த குடிச்சுட்டாறு.. அப்புறம் அங்க இங்கனு கொண்டுபோய் காப்பாத்திட்டாங்க..

ஆனா.. இப்டி இருபது இருபத்திரெண்டு வருஷம் ஆசை ஆசையா வளத்த பெத்தவங்க மனச நோகடிச்சு அவங்க எப்டித்தான் நல்லா இருப்பாங்களோ தெரியலை..

பெத்தவங்களும் அப்டித்தான்.. அவங்க பசங்க கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து அவ்ளோபாசமா வளக்குற அவங்க, கல்யாணம்னு வந்தா மட்டும் இப்டி ஒரேயடியா அடம் புடிக்கறது ஏன்னு புரியலை..

$$$$$$


என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..

நம்ம மனசு பயபுள்ளைக்கு எப்போமே நல்லதவிட கெட்டத துருவி துருவி பாக்குரதுலதான் பழக்கம் அதிகம்.. என்ன பண்ண..

$$$$$$


சரி.. அடுத்து.. இதுல ரெண்டு பேருமே எங்க ஜாதி காரங்க இல்லைனாலும், எங்க ஊர்ல நடந்த காதல்கதைன்றதால சொல்றேன்..


பொண்ணுவீடும் பையன் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை.. எதிரெதிர் வீடுதாங்க..
கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..

காரணம், ரெண்டுபேத்துக்கும் பத்திகிச்சு..

பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..

ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. பொண்டாட்டிய அவ புது காதலன்கூட சேர்க்கவிடமாட்டேனு அடம்புடிக்குறான்..

ஆமாங்க.. இந்த பையன் எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கு ரூட்டுபோட்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. அந்த பொண்ணுக்கு ரெண்டு கொழந்தைங்கவேற இருக்கு..

அப்டி இப்டின்னு பிரச்சனைய முடிச்சு எனக்கு அந்த கொழந்தைங்களும் வேணாம் புருசனும் வேணாம்னு தூக்கி போட்டுட்டு எதிர்வீட்டு காதலனோட புருஷன் வீட்டுக்கு எதிர் வீட்லயே காதலனோட குடித்தனம் நடத்திட்டு இருக்கா அந்த பொண்ணு..

என்ன ஊருடா சாமீய்ய்ய்..


Wednesday, August 19, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 3..

27 நாட்களுக்கு பிறகு “என்ன ஊருடா சாமீய்ய்ய்..”ன் மூன்றாம் பகுதி..

ஊரிலுள்ள இசுலாமிய, கிறித்தவ மக்களுடன் கொண்டுள்ள சுமுகமான நட்பு..

சென்ற பகுதியில் சொன்னாமாதிரி இவர்களின் ஜாதி மக்களுக்குள்தான் இப்டிப்பட்ட கட்டுப்பாடு..

அடுத்த ஜாதி, மதத்தினருடன் எப்பவுமே தோழமையுடன்தான் உள்ளனர்..
வருடா வருடம் ஆயுத பூஜைக்கு அடுத்தநாள் சாமி ஊர்வலம் நடத்துவார்கள்..

அதில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் அவர்களின் சாமிக்கான பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜைசெய்துகொடுப்பர்..

இப்படி ஒவ்வொரு வீதியாக செல்லும்போது சென்ற இடுகையில் சொன்னவாறு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு பூஜை செய்து தரமாட்டார்கள்..

ஊரே கூடியுள்ள ஒரு ஊர்ப்பொது விழாவில் இப்படி செய்வது அவ்வீட்டாருக்கு உண்மையில் ஒரு பெருத்த அவமானம்தான்..

ஆனால்.. எங்கள் ஊரில் பலவருடங்களாக சில இசுலாமிய மதத்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர்..

எங்கள் ஊர்க்காரர்கள் எவருமே அவர்களுடன் எப்போதும் ஒற்றுமையுடந்தான் உள்ளனர்..

இதிலும் ஒருபெரிய ஆச்சரியம்.. அந்த இசுலாமிய குடும்பத்தாரும் இந்த சாமி ஊர்வலத்தின் போது நம் இந்துகடவுளுக்கு படையலிட்டு வணங்குவர்..

இந்த ஜாதிக்காரர்களும் எவ்வித மறுப்புமின்றி அவர்களுக்கு பூஜைசெய்து கொடுக்கின்றனர்..

இந்தநிகழ்வு / இந்த ஒற்றுமை / இந்த புரிந்துணர்வு உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோசமான ஒன்று..


இந்த சந்தோசம் அந்நிய மதத்தினர் எம்மத கடவுளை வணங்குவதால் இல்லை..

எம்மக்களின் சாதிமதம் கடந்த புரிந்துணர்விற்காக..


எங்கள் ஊரின் அருகாமை கிராமத்தில் கிறித்துவர்கள் பலர் வசிக்கின்றனர்..
1955+'களில் அவர்களின் வீட்டில் நீர் அருந்துவது மற்றும் அவர்கள் இவர்களின் வீட்டில் நீர் அருந்துவது , வீட்டுக்குள் நுழைவது போன்றவை கூட விரும்பத்தகாததாக கருதப்பட்டு வந்துள்ளது..

இரு மதத்தினரும் ஒன்றாக பேசியும் நட்புபாராட்டியும் இருந்துவந்தாலும் அவர்களின் வீட்டுக்கு செல்வது.. அவர்களை தங்களின் வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற பழக்கங்கள் குறைவு / இல்லை..

எல்லா நட்பும் வீட்டு வாசலுடன் முடிந்தது..

ஆனால்..1970 / 1980+ களில் நல்ல முன்னேற்றம்..

காரணம் கிராமத்தின் ஆரம்ப பள்ளிகளில் கிறித்துவ ஆசிரியர்கள்..

ஆரம்பப்பள்ளியில் ஒருவகுப்பிலேனும் அவர்களிடம் படித்தாகவேண்டும்..

மேலும் டியூசனும் அவர்களிடம் செல்லும்போது அவர்களின் வீடுகளில் இந்த குழந்தைகள் புழங்க நேரிட்டது..

காலப்போக்கில் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் யதார்த்தத்தை உணர ஆரமித்துவிட்டார்கள் போலும்.. இப்போது அவர்களையும் சாதாரணமாக வீட்டுக்குள் அனுமதிக்கின்றனர்..

இப்போது இம்மூன்று மதத்தவருமே அன்புடனும் நட்புடனும் நல்ல புரிந்துணர்வுடனும் இருந்துவந்தாலும், "மதம் மாறுவதால் யாருக்கு லாபம்..?" என்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளதைபோல் அருகாமையில் வாழும் கிறித்துவர்கள் எம்மக்களின் வறுமையை ஆயுதமாகக்கொண்டு இந்துக்களை கிறித்துவர்களாக மதம்மாற்ற முனைந்தது கொஞ்சம் வருத்தப்படவைத்த செயல்தான்..

இந்த இடுகைமுழுதும் என்மக்களின் பார்வையில் மற்ற மதத்தவருடன் இவர்களின் புரிந்துணர்வே..

ஆனால் இன்னும் இவர்கள் எந்த சர்ச்சுக்கோ மசூதிக்கோ சென்று வழிபாடுநடத்தி நான் கண்டதில்லை..

(வீடுவரை அனுமதிக்க பழகவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது.. )

(மேலும், இப்படி அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடாமை என்பது பொதுவாகவே உலகின் எல்லா பகுதிகளுக்கும், எல்லா மதத்தவருக்குமே பொருந்துமென்றே நினைக்கிறேன்..

பெரும்பாலும் யாரும் அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடுவதில்லை.. ஒன்றிரண்டு யதார்த்தத்தை உணர்ந்த ஆத்மாக்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்..)

காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் (மட்டுமல்ல, உலகில் பலரும்) அப்படி சென்று வழிபாடுநடத்தும் அளவுக்கு இன்னும் பக்குவம் அடையவில்லைஎன்பதே யதார்த்தம்..

மிக நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன்..
கருத்தில் ஏதும் பிழை இருப்பின் பொறுமையுடன் அன்பாய் சுட்டிக்காட்டவும்..


இந்த இடுகையில் காதல் ஜோடிகளைபற்றியும் எழுதுவதாய் கூறியிருந்தேன்..
இந்தமுறை இங்கு எழுதமுடியவில்லை..
அடுத்த பகுதியில் அவர்களைப்பற்றி எழுதுகிறேன்..

நன்றி..