'
நிலாவும் அம்மாவும்' அவர்களின் ஆக்கத்தால் தொடங்கப்பெற்ற “கேள்வியும் பதிலும்....” என்ற இந்த சங்கிலித்தொடர் இடுகையில், பலரின் தொடர்ச்சியான இணைப்புகளுக்குபின் இணைந்த “இராகவன், நைஜிரியா” அண்ணா அவர்கள், அவருக்கு அடுத்து என்னையும், என்னுடன் சேர்த்து ரம்யா அக்காவையும், டக்ளஸ் அவர்களையும் இணைய அழைத்துள்ளார்..
32 கேள்விகளுக்கு கல்லூரித்தேர்வில் பொறுமையாக பதிலளித்து இருந்தால், பட்டதாரி (ஆனாலும்)ஆகி இருப்பேன்..
32 கேள்விகளுக்கு பொறுமையாக இன்டெர்வியுவில் பதிலளித்து இருந்தால், அந்த கம்பெனியின் ஊழியன் (ஆனாலும்)ஆகி இருப்பேன்..
32 கேள்விகளுக்கு பொறுமையாக மேடையில் பதிலளித்து இருந்தால், பேச்சாளனாக (ஆனாலும்)ஆகி இருப்பேன்..
ஆனால், இங்கு, இந்த 32 கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிப்பது என்னை நானும், நீங்களும் அறியமுடிவதற்கான நற்களமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே..
இதுவரை இணைக்கப்பெற்றவர்கள்..
ரவீஅத்திரிகடையம் ஆனந்த்ஹேமாகார்த்திகைப் பாண்டியன்குமரை நிலாவன்சிந்துகாதேவாவேத்தியன்என் உயிரே... அபுஅஃப்ஸர்இராகவன், நைஜிரியாஇவர்களுக்கு அடுத்ததாய் என்னை இணைய அழைத்த “இராகவன், நைஜிரியா” அண்ணாவிற்கு நன்றிகள் சொல்லிண்டு, என்னை அறிவதற்கான கேள்விகளை சந்திப்போம்..
இனி கேள்விகளும் எந்தன் பதில்களும்..
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?இது என் பெற்றோரின் விருப்பத்தால் வைக்கப்பட்டது..
இது எனக்கு பிடிக்கிறதா என்று இதுவரை நினைத்துபார்க்கவில்லை..
கண்டிப்பாக "பிடிக்காது" என்பது என் பதில் இல்லை.. :)
2.கடைசியாக அழுதது எப்பொழுது?எதுவும் நிரந்தரம் இல்லை என்ற மனப்பான்மையில் வாழ்பவன் நான்..
எனவே எதற்கும் பீல் பண்ணிக்கொண்டு கண்ணை கசக்குவது கிடையாது..
இருப்பினும், எனது ஏழாவது செமஸ்டரின் ஆரம்பத்தில் வாங்கிய 13 அறியர்களை நினைத்து என் பெற்றோர் கலங்கிவிடகூடாது என்பதற்காக அவர்களை முந்திக்கொண்டு முதலைக்கண்ணீர் வடித்து அவர்களை என் அரியர் பற்றின கவலையில் இருக்கவிடாமல் என்னை தேற்ற அவர்களை திசை திருப்பினேன்..
உண்மையில் நான் கடேசியாக அழுதது ஒன்பதாம் வகுப்பில் என்னை என் சக தோழர்களிடம் இருந்து பிரித்து, ஒன்பதாம் வகுப்பின் வேறு பிரிவில் அமர்த்தப்பட்டபோது..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?உண்மையில் நான் இடதுகை பழக்கமுடையவன்..
என் நான்காம் வகுப்புவரை பாடம் சொல்லிகொடுத்த ஆசிரியை, என்னை வலுக்கட்டாயமாக வலதுகையால் எழுத எடுத்த முயற்சியால் இப்போதும் என் கையெழுத்து அந்த நான்காம் வகுப்பு மாணவனின் கையெழுத்து போல கிறுக்கலாக தான் இருக்கும்..
(கம்முனு டாக்டரா போயிருந்திருக்கலாம்..)இருப்பினும் எனது கையெழுத்தை நானே விட்டுக்கொடுக்கமுடியுமா..?
ஆகவேவேவேவே..
பி..டி..க்..கா..து..
4.பிடித்த மதிய உணவு என்ன?இதுதான் என்றெல்லாம் பாரபட்சம் பார்ப்பது இல்லை.. நீந்துவன தவிர கிடைப்பவை எல்லாத்தையும் பிடிக்கும்..
(பிடிப்பவை எல்லாம் கிடைக்குமானு தெரியலை..) ஆனாலும் அளவோடு உண்டு நிறைவாக வாழ்பவன் நான்..
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?கண்டீடீடீப்பா..
(ஒருமுறை பேசிவிட்டாலே தொடர்ந்து அவரிடம் நட்பு / தொடர்பு வைத்திருக்க விரும்புபவன்..)ஆனாலும் எப்போதும் நெருக்கமான நட்பாக இருப்பினும், இவரின் நட்பு இல்லையேல் வடக்கிருந்து உயிர் நீப்பேன் மாதிரி யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை.. இதனால் எந்த உறவின் பிரிவும் சீக்கிரம் என்னை பாதிப்பது இல்லை..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?கண்டிப்பா கடலில் தான்..
அருவிக்குளியல் அந்த குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சுற்றளவில் முடிந்துவிடுகிறது..
கடலில் அப்படி இல்லை.. அதன் எல்லைகள் விஸ்தாரமானது.. எனவே கடல்தான்..
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?அவரின் கண்களை..
(அந்த கண்களின் சக்தி அபாரமானது.. மேலும், ஒருவரின் மனநிலையை அவரின் கண்களே நன்கு பிரதிபலித்துவிடும் என்ற நம்பிக்கையில்..)8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?பிடிச்ச விஷயம் (சில)..
1.நல்லது கெட்டது எதுவாகினும் பெரிய ஆரவாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்வது..
(வந்த பின்பு மாற்ற முடியாது.. அப்புறம் ஏன் அந்த தேவையில்லாத சந்தோசம் துக்கம் போன்ற பீலிங்க்ஸ் என்பதனால் இப்படி..)2.எதிரியாய் இருப்பினும் நம்பி வந்துவிட்டால் முழுமனதுடன் ஆதரிப்பது..
பிடிக்காத விஷயம்..
முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?(இப்போதைய) என் சரிபாதியிடம் எனக்கு பிடித்தவை..
1. 17 இன்ச் Wide screen மானிடர்..
2. கருப்பு நிற கீபோர்ட் மற்றும் மவுஸ்..
3. சிலிம் டைப் காபினெட்..
4. 340GB ஹார்ட் டிஸ்க்..
(இன்னும் பல..)என் சரிபாதியிடம் எனக்கு பிடிக்காதவை..
1.அடிக்கடி வைரஸ், மால்வேர் என்று கண்டதயும் உள்ளே விட்டுக்கொண்டு மாரடிக்க வைக்கும்..
2. தூசி இல்லாமல் அடிக்கடி துடைத்து வைக்கசொல்லும்..
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?என் கல்லூரி நட்புக்கள்..
இதற்காகவே, மீண்டும் கல்லூரி நட்பை அனுபவிக்க இந்த கல்வி ஆண்டில் PG படிக்கலாமென முடிவுசெய்து நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்றபோது அதற்கான கடேசி தேதி முடிந்திருந்தது..
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?(பெரும்பாலான நாட்களைபோல்) கருப்பு நிற பேன்ட், சட்டை மற்றும்ம்ம்.. (போதுமே..)
12.என்ன பார்த்து / கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?டைப்பும் போது எதைப்பார்ப்பது..? என் சரி பாதியின் மானிட்டரைதான்..
இப்படி இடுகையிடும்போது வேறு எதையாவது கேட்டுக்கொண்டிருந்தால் கவனம் சிதறுவதால் பிரத்தியேகமாக எதையும் கேட்டுக்கொண்டு இருக்கவில்லை..
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?கருப்பு வர்ணமாக..
14.பிடித்த மணம்?இதுதான் என்று தனியே ஏதும் இல்லை..
அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது வரும் பெட்ரோல் கலந்த புகைமணம் முதல்..,
அழகான, ஆழமான மணம் தரும் மல்லிகை, ரோஜா போன்றவைவரை அனைத்துமே.
சிறு வயதில்,கிராமத்தில், அந்த பெட்ரோல்புகையினை முகர்வதற்க்காகவே வண்டியை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம் வண்டியின் பின்னால் ஆஜர்ஆவது வழக்கம்..
(இப்போதெல்லாம் நகர் முழுவதும் இலவசமாய் கிடைக்கிறதே..)15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?கண்ணுங்களா, ஒருத்தர பிடிக்காததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்..
ஆனா, பிடித்திருப்பதற்கு (என்னால்) காரணமே சொல்ல முடியாது..
சிம்ப்ளி பிடிச்சிருக்கு.. அவ்ளோ தான்..
(பி.கு: இது சத்தியமாக மழுப்பல் இல்லை..)16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?இந்த கம்பூயட்டர கட்டிகிட்டுபிப்ரவரி 13, 2003சேமிப்பின் அவசியம்(இப்படி குறிப்பிட்டு சொல்வது, 'அனைத்தும்' என்று சொன்னால் மழுப்பல் என்று சொல்வீர்கள் என்பதற்காக அல்ல
..)17. பிடித்த விளையாட்டு?சிறுவயது முதல் கில்லி, கோலி, பம்பரம், அப்போது விளையாடி (இப்போது பெயர் அறியப்பட்ட) பேய்ப்பந்து....
அதன் பின்பு, இவற்றுடன் கிரிக்கெட்..
இப்போது, கம்பியூட்டர் 3D வீடியோ கேம்கள்..
18.கண்ணாடி அணிபவரா?ஆம்..
உபயம் எங்கள் வீட்டின் அப்போதைய ரிமோட் இல்லா தொலைகாட்சிப்பெட்டி..:)
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?மொக்கை முதல் சர்வதேசத்தரம்வரை எதையும் பார்க்கும் வலிமை உடையவன்..
(எல்லாரும் நல்லதையே ஆதரித்தால் மத்தவற்றை யார் கரையேற்றுவது..?
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா..? அதான்..)20.கடைசியாகப் பார்த்த படம்?அருந்ததீ..
நூறு பேருக்கு நடுவில் தனியாக பார்த்தேன்..
(புரியலையோ..? நண்பர்களுடன் இல்லாமல் தனியே சென்று பார்த்தேன்..)21.பிடித்த பருவ காலம் எது?கோடையை தவிர மற்றவை எல்லாம்..
குளிரெனில் போர்த்திக்கொள்ளலாம்..
மழை எனில் முக்காடிட்டுகொள்ளலாம்..
வசந்தகாலமெனில், புதுப்பொழிவுடன் இயற்கை தரும் அழகை ரசிக்கலாம் ..
ஆனால், இந்த கோடைகாலமெனில் எதுவும் செய்ய இயலுவதில்லை.. சீக்கிரம் சோர்ந்தும் போகிறோம். ஆகவே, கோடைக்கு தடா..
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?இந்த கணினியை சந்தித்த பின் பேப்பர் வகையறாக்களை கையாள்வது வெகுவாக குறைந்துவிட்டது..
செய்தித்தாள் படிப்பது முதற்கொண்டு கணினியே தேவைப்படுகிறது..
இதில் எங்கத்தபோயி புத்தகம் படிப்பது..
கடந்த இரண்டு நாற்களாக, PDF பார்மேட்டில் உள்ள சுஜாதா அவர்களின் "மீண்டும் ஜீனோ" ஓடிக்கொண்டுள்ளது..
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?தினமும்.. ஆனால் அதே படத்தை..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?பிடித்த (சில) சத்தங்கள்..1.வள்ளுவன் மேற்கொண்ட, இன்றைய பொழுதில் என் பெற்றோர் மேற்கொள்ளும், உலக உயிரினங்களின் தேவைக்கான உடைகளை தயாரிக்கும் நெசவுத்தொழிலுக்கு அடிப்படைத்தேவைகளில் ஒன்றான தறி என்று அழைக்கப்படும் இயந்திரத்தின், இன்றைய அட்வான்ஸுடு வெர்சனான பவர்லூம் மெசின்களின் அதிகப்படியான சத்தம்..
(இந்த தொழிலை என் பெற்றோர் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் நல்லெண்ணவகை கர்வமும்கொள்கிறேன்)2.எங்கள் வீட்டின் பிரத்தியேக FM ஆகிய என் அம்மாவின் தினப்படி ஒலிபரப்புகள்.. எப்படி தான் பேசுறாங்களோ.. தினமும் பேசுறாங்க.. பேசுறாங்க.. பேசிக்கிடே இருக்காங்கப்பா..
அக்கா இருந்தால், அம்மாவின் இந்த திட்டல்களை நாங்கள் இருவரும் சேர்ந்து கலாய்த்து சிரித்தே பொழுதை கழித்துவிடுவோம்..
ஆகவே, அக்கா இருக்கும்போது, அம்மாவின் ஒலிபரப்பு பிடிக்கும்..
பிடிக்காத சத்தம்..அக்கா இல்லாத போழ்து, கலாய்க்க ஆள் இல்லாததால், அதே ஒலிபரப்பு பிடிக்காது..
(அம்மா.. சும்மானாச்சிக்கும் தான்.. ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?கோவா
(கல்லூரி நண்பர்களுடன்)..
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?பார்த்ததை (விட), கையில் கிடைத்துள்ள படங்களை பார்த்து வரைய இயலும்..
(வரைந்தது நல்லா இருக்குமா இல்லையானு எல்லாம் கேக்கப்பிடாது..)27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?1. கூட இருந்தே குழி (முதல் கிணறுவரை) பறிப்பது..
2. பொறாமை..
(எந்த ஆமை வீட்டுக்குள் வந்தாலும் பாலாகாத வீடானது, இந்த பொறாமை வந்தால் மட்டும் விளங்காமல் போய்விடும்..)3.நண்பனின் பிரிவு.. அதுவும் காரணமே புறியாமல் (or) சொல்லாமல் பிரிந்து / விலகிச்செல்லும் நண்பனாய் மதிக்கப்படுபவனின் பிரிவு..
(ஒன்றுக்கும் அதிகமாக கூறியமைக்கு மன்னிக்கவும்..)28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?(எட்டாவது கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு சொன்னது போல்) முன், பின், சைடு, மற்றும் இன்னபிற கோபங்களின் தலைவனான மிஸ்டர் கோபாதிபதி..
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?இதுவரை நான் சென்ற அனைத்து இடங்களும்..
(தென்னிந்தியாவை விட்டு எங்கும் சென்றது இல்லை என்பது உபரித்தகவல்)30.எப்படி இருக்கணும்னு ஆசை?யாரையும் நிர்பந்திக்காமல், நிந்திக்காமல், நானும் நிர்பந்தப்படுத்தப்படாமல், நிந்திக்கப்படாமல் நான் நானாக இருக்க ஆசை..
(ஆனால்.. என்ன செய்ய..? இந்தமாதிரி நினைக்கும்போதெல்லாம், "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்"
பாடல்தான் நினைவிற்கு வருகிறது..)31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?இன்னும் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் காத்திருங்கள்.. திருமணம் முடித்து, பின் சொல்கிறேன்..
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?என்ன புதுசா சொல்லிடபோறேன்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவரின் சொத்து..
ஏதும் நினைத்தது கிடைக்கவில்லையேயென எண்ணாமல், கிடைத்ததை வைத்து சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை..
********இதே கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை சொல்வதற்கு
~சக்கரை~ சுரேஷ்
அவர்களை அழைக்கிறேன்..
(ஜமால் அண்ணாவை ஏற்கனவே பலர் புக் செய்துவிட்டமையால், அவரையும், எனது பதிவுலகிற்கு இரண்டாவதாக அறிமுகமான சிபி அண்ணாவை ஏதோ சில காரணங்களால் சில நாட்களாக தொடர்புகொள்ள இயலாமையால், அவரையும், மற்றும் சில காரணங்களால் சிலரையும், பல காரணங்களால் பலரையும் அழைக்க முடியாதது வருத்தமே..)(சபா.. எப்டியோ) என்னால் முடிந்ததை நண்பனுக்கு செய்துவிட்டேன்.. நல்லபடியா நீங்களும் வந்து எங்கள் அன்புச்சங்கிலியில் இணைய அழைக்கிறேன்.. வாருங்கள் நண்பா..